<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-14977072</id><updated>2012-01-09T12:09:36.699+05:30</updated><category term='சிவா பிள்ளை'/><category term='இ-நேர்காணல்'/><title type='text'>அண்ணாகண்ணன் நேர்காணல்கள்</title><subtitle type='html'>செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>30</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-248626751771334832</id><published>2010-07-08T00:39:00.001+05:30</published><updated>2010-08-24T15:05:53.223+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவா பிள்ளை'/><title type='text'>சிவா பிள்ளையுடன் சிறு உரையாடல்</title><content type='html'>இலண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கோல்ட்ஸ்மித் கல்லூரியில் பணியாற்றுபவர் சிவா பிள்ளை. தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்தி, தமிழ் கற்பிப்பதில் முனைப்புடன் இயங்குபவர். அவரைப் பற்றி ஆல்பர்ட் பெர்னாண்டோ எழுதிய கட்டுரையை முன்பு தமிழ் சிஃபியில் வெளியிட்டுள்ளேன். அதன் பின்னர் சிவா பிள்ளையுடன் மின்னஞ்சலில் தொடர்பு இருந்தது. ஆனால், கோவையில் செம்மொழி மாநாட்டின் போதுதான் அவரை முதன் முதலாகச் சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TDTJvDcV0EI/AAAAAAAAA0E/JVUPNndQjGQ/s1600/Sivapillai_AK_Na.Ganesan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="330" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TDTJvDcV0EI/AAAAAAAAA0E/JVUPNndQjGQ/s640/Sivapillai_AK_Na.Ganesan.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;சிவா பிள்ளை, அண்ணாகண்ணன், நா.கணேசன்&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;பி்ன்னர் சென்னை திரும்பிய பிறகு ஜூலை 3ஆம் நாள், மீண்டும் ஒரு முறை அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/TDTLeLDrm7I/AAAAAAAAA0M/bEOvtiZQzuA/s1600/Sivapillai_Annakannan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="300" src="http://2.bp.blogspot.com/_fBVVUdipqtM/TDTLeLDrm7I/AAAAAAAAA0M/bEOvtiZQzuA/s640/Sivapillai_Annakannan.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அப்போது தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் கோவலன் உடனிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/TDTOJuh2N7I/AAAAAAAAA0c/Jn7LJzdYCzg/s1600/Kovalan_Annakannan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="370" src="http://3.bp.blogspot.com/_fBVVUdipqtM/TDTOJuh2N7I/AAAAAAAAA0c/Jn7LJzdYCzg/s640/Kovalan_Annakannan.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;i&gt;முனைவர்&amp;nbsp; கோவலன், அண்ணாகண்ணன்&lt;/i&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் நடந்த 9ஆவது தமிழ் இணைய மாநாட்டில் சிவா பிள்ளை பங்கேற்றார். 'இங்கிலாந்தில் தமிழ்க் கல்வி கற்பிப்பதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் பாவனை' என்ற தலைப்பில் அவர் தம் கட்டுரையை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய கட்டுரையில் 'தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், குறிப்பிடத்தக்க அளவில் தமிழ் கற்றல் கற்பிப்பதில் இங்கிலாந்திலும் உலகளாவிய ரீதியிலும் கூட பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்குப் புதிய வழிமுறைகளில் கற்பதில் கற்பிப்பதில் ஊக்கத்தை உண்டுபண்ணி உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். (தமிழ் இணையம் 2010 கோவை - மாநாட்டுக் கட்டுரைகள், பக்.82)&lt;br /&gt;&lt;br /&gt;அவரை நேரில் சந்தித்தபோது நான் சில கேள்விகளைக் கேட்டேன். எங்கள் உரையாடல் இப்படிச் சென்றது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அண்ணா:&lt;/b&gt; தகவல் தொடர்பு நுட்பங்களைப் பயன்படுத்தும்போது மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கிறது என்பது உண்மை. ஆனால், அத்தகைய வகுப்பில் பாடத்தினை விடத் தொழில்நுட்பமே அதிக முக்கியத்துவம் பெறுகிறதா? மாணவர்களின் கவனம் தொழில்நுட்பத்தின் மீதே அதிகமாகச் செல்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிவா: &lt;/b&gt;இரண்டும் இணையான முக்கியத்துவம் பெறுகின்றன. இரண்டின் மீதும் மாணவர்களின் கவனம் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அண்ணா:&lt;/b&gt; தொழில்நுட்பம் இல்லாமல் வழக்கமான முறையில் பாடம் நடத்துகையில், பல நேரங்களில் மாணவர்களுக்கு அந்த வகுப்பு 'போர்' அடிக்கிறது என்கிறார்களே. எப்படி பாடத்தின் மீது மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிவா:&lt;/b&gt; 'போர்' அடிக்கிறது என மாணவர்கள் கூறக்கூடிய பாடங்களைத் தொடங்கும் முன் ஆசிரியர்கள், அந்தப் பாடத்தின் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் சில செய்திகளைக் கூறிவிட்டுத்தான் பாடத்திற்குள் புக வேண்டும். அப்போதுதான் ஈர்ப்பினை ஏற்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அண்ணா:&lt;/b&gt; தமிழ்நாட்டிலேயே தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லை என்கிற நிலை இருக்கிறது. இந்தத் தமிழை நான் ஏன் கற்க வேண்டும்? இதனால் எனக்கு வேலை கிடைக்குமா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இதே மாதிரி கேள்வியை இங்கிலாந்தில் எதிர்கொண்டுள்ளீர்களா? அதற்கு உங்கள் பதில் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிவா: &lt;/b&gt;அங்கே தமிழ் படிக்க வரும் பலரும் இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். அவர்களிடம் நான் கூறுவது, தமிழ் மக்களுடன் இணைந்து பழக, அவர்களின் பண்பாட்டினையும் பழக்க வழக்கங்களையும் உணரத் தமிழ் மொழி உங்களுக்கு உதவும் என்பதே. வேலை என்ற கண்ணோட்டத்தில் அங்கு மொழியைக் கற்க இயலாது. தமிழர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதும் ஆங்கிலேயர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதும் வெவ்வேறு. இரண்டுக்குமான ஆசிரியர்களும் வேறு வேறானவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அண்ணா:&lt;/b&gt; மொழிபெயர்ப்பு என்ற துறை சார்ந்து தமிழுக்கு வேலை வாய்ப்பு இருக்குமே? ஒரு சொல்லுக்கு இவ்வளவு எனக் கட்டணம் நிர்ணயித்திருப்பார்களே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிவா:&lt;/b&gt; உண்டு. தமிழ் அகதிகள் பலரும் அங்கே தங்கியுள்ளதால், இங்கிலாந்து நீதித் துறை, நிர்வாகத் துறை ஆகியவற்றில் தமிழர் தொடர்பான செய்திகளைப் பதிய அரசு சார்பிலேயே தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் உண்டு. ஆனால், தனிப்பட்ட வகையில் தமிழ் மொழியைவிட, இசை - நடனம் போன்ற தமிழ்க் கலைகள் கற்பிப்பவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உண்டு. தமிழ் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குக் குறைவான ஊதியமே நிர்ணயித்துள்ளார்கள். அதிகத் தேவை உள்ள மொழிகளுக்கு ஒரு சொல்லை மொழிபெயர்க்க 50 ரூபாய் கூட கொடுப்பார்கள். தேவையைப் பொறுத்துக் கட்டணம் மாறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அண்ணா: &lt;/b&gt;செம்மொழி மாநாட்டு அனுபவங்கள் எப்படி இருந்தன?&lt;br /&gt;&lt;br /&gt;சிவா: சிறப்பாகவே இருந்தன. அதனால்தானே உங்களை எல்லாம் சந்திக்க முடிந்தது! ஆனால், மாநாடு முடிந்த பிறகு ஒரு கல்லூரியில் பேசச் சென்றிருந்தேன். அங்கு பி.டெக் போன்ற தொழில்நுட்பம் பயிலும் 300 மாணவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டுமே செம்மொழி - இணைய மாநாட்டுக்கு வந்திருந்தார். மற்றவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை. மாநாட்டுக்கு இலட்சக் கணக்கானோர் வந்திருந்தனர். ஆனால், பளளி - கல்லூரி மாணவர்களை அதிகம் இடம் பெறச் செய்திருக்கலாம். ஒரு பள்ளிக்கு இவ்வளவு பேர் என அனுப்பச் சொல்லியிருந்தால், மாநாட்டின் பயன் அதிகம் பேரைச் சென்றடைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு எங்கள் உரையாடல் அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TDTMv7Pq4gI/AAAAAAAAA0U/TwSffNjFOds/s1600/Sivapillai_Annakannan2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="272" src="http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TDTMv7Pq4gI/AAAAAAAAA0U/TwSffNjFOds/s640/Sivapillai_Annakannan2.jpg" width="500" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பின்னர் மகிழ்வுடன் விடை பெற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் படம் தவிர, மேற்கண்ட இரு படங்களை முனைவர் கோவலன்  எடுத்தார். கோவலன்  இருக்கும் படத்தினைச் சிவா பிள்ளை எடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-248626751771334832?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/248626751771334832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=248626751771334832' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/248626751771334832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/248626751771334832'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2010/07/blog-post.html' title='சிவா பிள்ளையுடன் சிறு உரையாடல்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_fBVVUdipqtM/TDTJvDcV0EI/AAAAAAAAA0E/JVUPNndQjGQ/s72-c/Sivapillai_AK_Na.Ganesan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-1181900673934752323</id><published>2009-12-24T13:09:00.001+05:30</published><updated>2009-12-24T13:27:17.825+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இ-நேர்காணல்'/><title type='text'>தமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்</title><content type='html'>&lt;img alt=" தமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்" class="imgbor fl mr" src="http://www.newsonweb.com/newsimages/May2009/b7bcfc7d-f45f-43f3-bb5f-ff288ffcca271.jpg" title="தமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்" /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" title="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"&gt;தமிழ் விக்கிப்பீடியா&lt;/a&gt;,&amp;nbsp; இன்று இந்திய மொழிகளில், பல தர அளவீடுகளில் முன்னணியில் நிற்கும் ஒரு கட்டற்ற கலைக் களஞ்சியம். இதில் 2009 மே 30 அன்று வரை 18,226 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2003இல் இதனை முறையாக உருவாக்கியதிலிருந்து இன்றைய வளர்ச்சி நிலை வரை இதற்குத் துணை நிற்பவர், இ. மயூரநாதன்; இவர், இது வரை பல்வேறு தலைப்புகளில் &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mayooranathan" target="_blank" title="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mayooranathan"&gt;2760 கட்டுரைகளை&amp;nbsp; தொடங்கி எழுதியுள்ளார்.&lt;/a&gt; இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார்; கட்டடவியல் கலைஞர். தம் ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக, ஆக்கபூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;விக்கிபீடியாவைப் பற்றி ஒரு பொதுவான அறிமுகத்தைத் தாருங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இது ஒரு கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டம். பல மொழிகளில் இயங்கும் இந்த விக்கிப்பீடியாக்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்களிப்புச் செய்து வருகின்றனர். இதில் எவரும் கட்டுரைகளைப் புதிதாக எழுதவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும், திருத்தவும் முடியும். இதற்காகப் பதிவு செய்து கொள்வது கூட அவசியம் இல்லை. விக்கிப்பீடியா ஐந்து அடிப்படைகளைக் கொண்டது. 1) கலைக் களஞ்சியம் வடிவில் அமைதல், 2) கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு அமைதல், 3) கட்டற்ற உள்ளடக்கம், 4) அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், 5) இறுக்கமான சட்ட திட்டங்கள் இல்லாமை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;விக்சனரி, விக்கி செய்திகள், விக்கி பல்கலைக்கழகம், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி நூல்கள், விக்கி இனங்கள், விக்கி பொது... எனப் பல பிரிவுகளைக் கண்டேன். இந்த விக்கி என்பதை விவரியுங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: விக்சனரி என்பது ஒரு அகரமுதலி. விக்கிச் செய்திகள், செய்திகளைத் தரும் ஒரு விக்கி மீடியாத் தளம். விக்கி மேற்கோள் என்பதில் பல்வேறு வகையான மேற்கோள்கள் தொகுக்கப்படுகின்றன. விக்கி மூலம் என்பது ஒரு முக்கியமான ஒரு விக்கித் திட்டம் இதில் பல மூல ஆவணங்களின் பிரதிகள் உள்ளன. விக்கி இனங்கள் பலவகையான உயிரினங்கள் தொடர்பான தகவல்களைத் தருவது. விக்கி பொது என்பது, பொது உரிமைப் பரப்பில் உள்ள படிமங்களைக் சேகரித்து வைக்கும் ஒரு விக்கித் திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;விக்கி என்பது ஒருவரின் பெயரா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இல்லை. விக்கி என்பது ஹவாய் மொழியில் "விரைவு" என்னும் பொருள் கொண்டதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;இதை யார், எப்போது, ஏன் தொடங்கினார்கள்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இத் திட்டம் 2001ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. ஜிம்மி வேல்ஸ் (அமெரிக்க இணையத் தொழில்முனைவர் - American &lt;span id="IL_AD3"&gt;Internet Entrepreneur&lt;/span&gt;), லாரி சாங்கர் (அமெரிக்க மெய்யியலாளர் - American Philosopher) என்போர் இணைந்து விக்கிப்பீடியாவை நிறுவினர். உண்மையில் இதற்கு முன்னர் "நூப்பீடியா" என்னும் ஒரு கலைக்களஞ்சியத் திட்டத்தை ஜிம்மி வேல்ஸ் தனது தனியார் நிறுவனத்தின் மூலம் நடத்தி வந்தார். அது இதைப் போல யாரும் பங்களிக்கத்தக்க ஒரு கலைக் களஞ்சியம் அல்ல. ஏன் விக்கிப்பீடியாவைத் தொடங்கினார் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;என்சைக்ளோபீடியா என்பதை நினைவூட்டும் வகையில்தான் விக்கிப்பீடியா எனத் தலைப்பு இடப்பட்டதா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: ஆம். இது "விக்கி" ,"என்சைக்கிளோப்பீடியா என்னும் இரு சொற்களின் சேர்க்கையினால் உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;267 மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாவில் &lt;/b&gt;&lt;b&gt;ஆங்கில&amp;nbsp;மொழி 28,97,231&amp;nbsp;கட்டுரைகளுடன் &lt;/b&gt;&lt;b&gt;முதல் இடத்தில் உள்ளது. தமிழ், 18,226 கட்டுரைகளுடன் 68ஆம் இடத்தில் உள்ளது. தமிழ் விக்கிபீடியா எப்போது தோன்றியது? அதற்கு முன்முயற்சிகள் எடுத்தோர் யார் எவர்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ் விக்கிப்பீடியாவுக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டதையே குறிக்கிறது. அப்போது ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்றுப் பக்கமே இருந்தது. அவ்வாண்டு நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது. செப்டெம்பர் 2003இல் ஒரு தமிழ் அன்பர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான ஒரு பக்கத்தைத் திறந்துவிட்டார். இது ஆங்கில இடைமுகத்தோடு கூடிய ஒரு பக்கம். இதில் இருந்த ஓரிரு சொற்கள் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பானவை அல்ல. இது ஒரு சோதனை முயற்சியாக இருக்கலாம். பின்னர் நான் நவம்பர் முதல் பகுதியில் தமிழ் இடைமுகத்தை உருவாக்குவதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்தேன். அத்துடன் அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கினேன். அது முதல் முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது எனலாம்.&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;இந்திய மொழிகளில் தெலுங்கு (42,918), இந்தி (32,681), மணிப்புரி (23,414), மராத்தி (23,211), பெங்காலி (19,674) ஆகியவை தமிழைக் காட்டிலும் அதிகக் கட்டுரைகளுடன் உள்ளன. அவர்களுக்கு அதிக விழிப்புணர்வு இருப்பதாகக் கொள்ளலாமா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: அப்படிச் சொல்வதற்கு இல்லை. சில இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் உட்படப் பல விக்கிப்பீடியாக்களில் புள்ளி விபரங்களில் கட்டுரை எண்ணிக்கைகளைக் கூடுதலாகக் காட்டும் நோக்கில் மிக மிகச் சிறிய அல்லது வெற்றுக் கட்டுரைகளை ஆயிரக்கணக்கில் தானியங்கிகள் மூலம் உருவாக்கியுள்ளனர். இந்த விடயத்தில் நாம் தொடக்கம் முதலே கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம். கூடியவரை கட்டுரைகள் பயனுள்ள தகவல்களைக் கொண்டவையாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், முன்னர் கூறியது போல் பொதுவான கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளுள் ஆறாவது இடத்தில் இருந்தாலும், பல முக்கியமான தர அளவீடுகளில் முன்னணியிலேயே உள்ளது. விக்கிப்பீடியாவில் இரண்டு முறைகளில் கட்டுரை எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது. ஒரு முறையில் கட்டுரையின் அளவைக் கவனிக்காமல் எல்லாக் கட்டுரைகளையுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் இன்னொரு முறையில் 200க்கும் குறைந்த எழுத்துகளைக் கொண்ட மிகச் சிறிய கட்டுரைகளைத் தவிர்த்து விட்டுக் கணக்கெடுக்கிறார்கள். இந்த இரண்டாம் முறையின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் முதல் நிலையில் உள்ளதைக் காணலாம். இதில் 3.4 மில்லியன் சொற்களுக்கு மேல் உள்ளன. அத்துடன் தொடர்ச்சியாக மிகவும் முனைப்பாக இயங்கும், இந்திய மொழிகளில் உள்ள மிகச் சில விக்கிப்பீடியாக்களில் தமிழும் ஒன்று. &lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் என்ன?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: ஆங்கில மொழி பேசுவோருக்கு ஆங்கில விக்கிப்பீடியாவின் முக்கியத்துவத்தையும் அது அவர்களுக்கு ஆற்றும் பங்கையும் விட, தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மக்களுக்குக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் அவர்களுடைய வளர்ச்சிக்குக் கூடிய பங்காற்றக் கூடியது என்பதும் எனது கருத்து.&lt;br /&gt;உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு, உலகின் பல்வேறு அறிவுத் துறைகள் தொடர்பிலான, தமிழ் மொழி மூலமான, முதன்மையான, பொது உசாத்துணை வளமாக இருப்பதற்கான வாய்ப்பு, விக்கிப்பீடியாவுக்கு உண்டு. எண்ணற்ற கட்டுரைகளை உள்ளிடுவதற்கான இடவசதிக்குப் பஞ்சம் இல்லை. பல்வேறு மொழி விக்கிப்பீடியாக்களிலும் காணப்படும் கோடிக்கணக்கான தகவல்களையும் படிமங்களையும் காப்புரிமைப் பிரச்சினைகள் இன்றிப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி; உலகின் எந்த மூலையிலும் இருந்து இலகுவாக அணுகக்கூடிய வசதி; உலகின் எப்பகுதியிலுமிருந்து, எவரும் இலகுவாகப் பங்களிப்புச் செய்யக்கூடிய வசதி; இவற்றுக்கான தொழில் நுட்பத் திறன்களையும், நிதித் தேவைகளையும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனங்களையும் சேர்ந்த ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி என்பன தமிழ் மக்களுக்கு மிகப் பயன் தரக்கூடியவை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் எல்லாப் பகுதிகளிலும் குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்காகப் பொதுவான கலைச்சொற்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தளம் இதுவரை கிடையாது. இதனால் ஒரு பகுதியினருடைய நூல்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் குறைகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெற்றதாகத் தெரியவில்லை. இவ்விடயத்தில் தமிழ் விக்கிப்பீடியாவை மிகத் திறமையாகப் பயன்படுத்த முடியும். இந்த வகையில் விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களில் ஒன்றான விக்சனரியுடன் இணைந்து பணியாற்ற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற முன்னேறிய நாடுகளில் வழங்கும் மொழிகளைப் போலன்றித் தமிழ் மொழியில் விபரமான கலைக் களஞ்சியங்களை வெளியிடக்கூடிய வசதிகளோ, அப்படி வெளியிட்டாலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளிலாவது அவற்றை இற்றைப்படுத்தித் திருத்தி வெளியிடக்கூடிய வசதியோ நமக்கு இல்லை. வாதத்துக்காக இது முடியும் என்று வைத்துக் கொண்டாலும்கூட அவற்றை வாங்கிப் பயன்படுத்தக்கூடிய வசதி நம்மில் மிக மிகப் பலருக்குக் கிடைக்காது. இந்தப் பின்னணியில் விக்கிப்பீடியா தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு பெரும் கொடை எனலாம். மிகக் குறைந்த பணம் மற்றும் நேரச் செலவுகளுடன் மிகப் பெரிய கலைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கக்கூடிய வாய்ப்பு நம் கையில் உள்ளது. இதனை உணர்ந்துகொண்டு பயன்படுத்திப் பயனடைய நாம் முயல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் அனைத்து உயர் அறிவுத் துறைகளையும் தழுவிய மொழியாக வளர வேண்டும். இது தொடர்பில் முக்கியமான பணி, நமது தாய்மொழி மீது நம்மவர்களுக்கே உள்ள நம்பிக்கையின்மையை இல்லாமலாக்க உதவுவதுதான். தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு சாதாரண கலைக் களஞ்சியமாக மட்டுமன்றித் தமிழ் மொழி மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் சின்னமாகவும் வளர்த்து எடுக்க முடியும். இதனால் எல்லோருக்கும் தமிழ் மொழியின் வல்லமை குறித்த நம்பிக்கை இன்மையைப் போக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் எழுதக்கூடிய வல்லமை கொண்ட துறை வல்லுனர்களும், பிற அறிஞர்களும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முன்வர வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் போன்றவர்கள் இக் கலைக் களஞ்சியத்தை நம்பகத்தன்மை கொண்ட முழுமையான ஒன்றாக வளர்த்தெடுக்க தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும்.&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழ் விக்கியில் கட்டுரைகள் என்ற சொல் பயன்பாட்டினை விளக்குங்கள். குறிப்புகள், செய்திகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றிலிருந்து இங்குள்ள கட்டுரைகளை வேறுபடுத்த முடியுமா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இங்கே கட்டுரை என்பது கலைக்களஞ்சிய வடிவில் அமைந்த ஒரு ஆக்கத்தைக் குறிக்கும். இது பிற மொழிக் கட்டுரைகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், செய்திகள், குறிப்புகள் என்பதில் இருந்து இது வேறுபட்டது. விக்கிப்பீடியாவில், கட்டுரைகள் என்பதைத் தவிர மேலும் பல விதமான பக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, படிமப் பக்கங்கள், வழிமாற்றுப் பக்கங்கள், உதவிப் பக்கங்கள், உரையாடல் பக்கங்கள், தொகுப்பு வரலாற்றுப் பக்கங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;ஓரிரு வரிகள் கொண்ட சிறு குறிப்புகளைக் குறுங்கட்டுரைகள் என்ற தலைப்பில் கண்டேன். இது பொருந்துமா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இவ்வாறான கட்டுரைகளை ஆங்கில விக்கியில் Stub என்பார்கள். இதையே தமிழில் குறுங்கட்டுரை எனத் தமிழில் குறிப்பிடுகின்றோம். பொது விதிகளின் படி இதை ஒரு கட்டுரை என்று கூறமுடியாவிட்டாலும் மேலும் விரிவாக்குவதற்கான ஒரு ஆரம்ப நிலைக் கட்டுரையாக இதைக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;ஒலிபெயர்ப்புகளில் தமிழ் விக்கியின் கொள்கை என்ன? ஆலன் பார்டர் எனத் தமிழகத் தமிழ் நாளிதழ்கள் எழுதும் பெயர், அலன் போடர் என இருக்கக் கண்டேன்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இருக்கக்கூடிய முக்கியமான ஒரு பிரச்சினை. தமிழ் விக்கிப்பீடியாவில் உலகின் பல பாகங்களிலும் இருந்து தமிழர்கள் பங்களிக்கிறார்கள். இவர்களில் பலர், இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் தமிழ்நாட்டில் எழுதுவது போல் ஆலன் பார்டர் என்று எழுதுவதில்லை. அலன் போடர் என்றுதான் எழுதுவார்கள். இது ஆங்கிலப் பெயர்களை ஒலிபெயர்க்கும் பல சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினை. இது பற்றி ஒரு முடிவான கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை. ஆனால், ஒரு முறையில் யாராவது எழுதும்போது, மற்ற முறையையும் அடைப்புக் குறிக்குள் தரலாம் என்று பரிந்துரை செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;மணித்தியாலங்கள், திகதி.. என இலங்கைத் தமிழின் மணம் அதிகமாக வீசுகிறது?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் கூடிய தொகுப்புகளைச் செய்தவர்களில் பெரும்பாலோர் இலங்கைத் தமிழராக இருப்பதைக் காணலாம். இதனால் இந்தத் "தமிழ் மணம்" தவிர்க்க முடியாததே. ஆனால், இந் நிலை இப்போது முன்னரிலும் குறைவாகவே உள்ளது. மேலும் பல பங்களிப்பாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வரும்போது இந்தச் சமமின்மை நீங்கிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழ் விக்கியில் ஆங்கிலத்தைத் தவிர்க்கும் முயற்சி இருப்பினும் வடசொற்கள் நிறைய கலந்திருக்கின்றன. இதில் மொழித் தூய்மை பேணும் முயற்சி ஏதும் உண்டா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: ஆம். இயன்ற அளவு வட மொழி தவிர்த்து எழுதுவது என்பதே எமது குறிக்கோள். ஆனால், பல சொற்கள் தமிழ் போலவே மாறிவிட்டதனால், எழுதும் எல்லோருக்குமே அது வட சொல் எனத் தெரியாது. தெரிந்தாலும் அதற்கு ஈடான தமிழ்ச் சொல் தெரிவதில்லை. இதை விட புழக்கத்திலுள்ள வட சொற்களை நீக்குவது சரியில்லை என்று வாதிடும் பங்களிப்பாளர்களும் இருக்கின்றனர். இதனால், படிப்படியாகத்தான் ஏதாவது செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;கட்டிடம் என்பதை விட, கட்டடம் எனக் கூறுவதே சரி. எண்ணிணால், நூல்கலை எனப் பல தட்டச்சுப் பிழைகளையும் கண்டேன். தமிழ் விக்கிபீடியாவில் இலக்கணம், மொழி நடை ஆகியவற்றைச் சீரமைக்க வழியுண்டா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: நீங்கள் சொல்வது சரிதான். இத்தகைய பிழைகளை விக்கிப்பீடியாவில் மிகச் சுலபமாகவே திருத்த முடியும் ஆனால், இதற்குப் பல பங்களிப்பாளர்கள் வேண்டும். கட்டுரைகளாக எழுதாவிட்டாலும், தமிழ் அறிவு உள்ளவர்கள் இத்தகைய பிழைகளைத் திருத்தவாவது உதவி செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;ஒருவர் உள்ளிடும் ஆக்கம், அவருடைய சொந்த ஆக்கம் என்பதை எப்படி கண்டறிவீர்கள்? காப்புரிமையைப் பொறுத்த அளவில் விக்கிபீடியாவின் நிலை என்ன?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை ஒருவருடைய ஆக்கம் அவருடைய சொந்த ஆக்கமாக ஆகாது. ஒவ்வொரு கட்டுரையின் உருவாக்கத்திலும் பலர் பங்கு பெறுவதால் இதில் எவருக்கும் தனியுரிமை கிடையாது. விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே குனூ கட்டற்ற ஆவண உரிமம் என்னும் உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இதன்படி எவரும் இக்கட்டுரைகளைப் பிரதி செய்யவோ, மாற்றவோ, விநியோகிக்கவோ முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;கட்டுரையை எழுதியவர் / திருத்தியவரின் பெயரை அந்தந்தக் கட்டுரைகளில் காட்டுவது அவர்களை ஊக்குவிக்கும்தானே? இப்படி பெயர்கூட இல்லாமல் எப்படி தன்னார்வலர்கள் முன்வருகிறார்கள்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: கட்டுரைகளைத் தொடங்கியவர்கள், விரிவாக்கியவர்கள், திருத்தியவர்கள், என்ன திருத்தம் செய்தார்கள், எவ்வளவு தகவல்களைச் சேர்த்தார்கள் போன்ற எல்லா விபரங்களும் திருத்த வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட்டுள்ளன. உள்ளிடப்படும் எந்த விபரமுமே அழிந்து போவதில்லை. ஐந்து வருடத்துக்கு முன் நான் தொடங்கிய கட்டுரை ஒன்றின் அக்கால வடிவத்தை இன்றும் பார்க்க முடியும். ஒவ்வொரு கட்டுரைப் பக்கத்தின் மேற்பகுதியிலும் காணப்படும் "வரலாறு" என்னும் பொத்தானை அழுத்தினால் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு செய்தியை இருவர் இரு கோணத்தில் எழுதினால் அதில் விக்கி&lt;/b&gt;&lt;b&gt;ப்&lt;/b&gt;&lt;b&gt;பீடியாவின் நிலை என்ன? உதாரணத்திற்குப் பிரபாகரனைப் போராளி என ஒருவரும் தீவிரவாதி என ஒருவரும் எழுதினால் விக்கிப்பீடியா எதை ஏற்கும்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: நடுநிலை நோக்கு என்பது விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இதனால், கட்டுரைகளை எழுதும் எவரும் தமது சொந்தக் கருத்துகளைக் கட்டுரைகளில் சொல்ல முடியாது. ஒருவரை உலகத்தில் உள்ள அனைவருமே தீவிரவாதி என்பார்களானால், அவரைத் தீவிரவாதி என எழுதலாம். ஆனால் இன்னொரு பகுதியினர் அவரைப் போராளி என்பார்களானால், இரு கருத்துகளையும் கட்டுரையில் குறிப்பிட வேண்டும். "ஒரு பகுதியினர் தீவிரவாதி என்கின்றனர்; ஆனால் வேறு சிலரோ அவரைப் போராளி என்கின்றனர்" என்பது போல் எழுதுவதே முறை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;கட்டுரைகளின் கீழ் அடிக்குறிப்புகள், சுட்டிகள், விளக்கங்கள் ஆகியவற்றைத் தருவது, ஆய்வாளர்களின் பாணி ஆயிற்றே! நம் கட்டுரையாளர்கள், இந்தப் பயிற்சியை எப்படிப் பெறுகிறார்கள்?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இப்போதுள்ள பெரும்பாலான பங்களிப்பாளர்கள் இது தொடர்பில் பழக்கம் உள்ளவர்கள் தான். அப்படியான பழக்கங்கள் இல்லாதவரும் கூட பங்களிக்கும் போது பழகிவிடலாம். பிற பயனர்களின் உதவியைப் பெறவும் முடியும். நிற்க! இவற்றை உரிய முறையில் அமைப்பதற்கான வார்ப்புருக்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;கூகுள் தேடுபொறியில் தமிழில் தேடினால், விக்கிபீடியாவின் தரவுகள் முதலில் இடம் பெறுகின்றன. இதற்கு ஏற்ப, தகுந்த குறிச் சொற்கள் இடுகிறீர்களா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இதற்கு நாங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கூகுள், விக்கிப்பீடியாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தேடு பொறியை அமைத்துள்ளதாகக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;பொதுவாகத் தலைப்புகள் நீல நிறத்தில் இருக்க, சில தலைப்புகள் சிவப்பு நிறத்தில் உள்ளன. அவை முக்கியம் எனக் காட்டுவதற்காகவா? புதியவை எனக் காட்டுவதற்காகவா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: விக்கிப்பீடியாவில் நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள சொற்கள் உள்ளிணைப்புக்களைக் குறிக்கின்றன. நீல இணைப்புகள் அச் சொற்கள் குறிக்கும் தலைப்பில் கட்டுரைகள் இருப்பதைக் குறிக்கின்றன. அவற்றை அழுத்திக் குறிப்பிட்ட கட்டுரைப் பக்கத்துக்குச் செல்ல முடியும். சிவப்பு இணைப்புகள் அத்தலைப்புகளில் இன்னும் கட்டுரைகள் எழுதப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன. அந்த இணைப்புகளின் மீது அழுத்தும்போது அத்தலைப்புகளில் புதிய கட்டுரைகளை எழுதுவதற்கான தொகுப்புப் பக்கம் கிடைக்கும். அங்கே புதிய கட்டுரைகளை எழுதத் தொடங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;விக்கிப்பீடியாவில் உள்ள 'மணல் தொட்டி' வசதி குறித்துச் சொல்லுங்கள். இந்தப் பெயரைச் சூட்டியவர் யார்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இது புதிய பங்களிப்பாளர்கள் பயிற்சி செய்வதற்கான இடம். இங்கே ஏற்கெனவே உள்ள கட்டுரைகளைக் குழப்பிவிடுவோமோ என்ற பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்யலாம். ஆங்கிலத்தில் "sand box" என்று இருப்பதை நான் தான் "மணல் தொட்டி" என்று மொழி பெயர்த்தேன். இது ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கிறதே என்று சிலர் கேட்டார்கள். ஆனாலும், நமக்கும் இது பொருந்தி வருவதால்தான் அச் சொல்லைத் தொடக்கத்தில் நான் பயன்படுத்தினேன். சிறுவயதில் எழுத்துகளை மணல் மீது எழுதிப் பழகுவது உண்டல்லவா? பல பங்களிப்பாளர்களும் இதனை ஏற்றுக்கொண்டதால் இது நிலைத்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;விக்கிப்பீடியா பக்கங்களில் விளம்பரங்கள் வெளியிடாதது ஏன்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: ஒரு கலைக் களஞ்சியத்தில் விளம்பரங்கள் இருப்பது பொருந்தாது என்பதனாலாக இருக்கலாம். விளம்பரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால், இதன் விளம்பரப் பெறுமானம் ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர்கள் வரை இருக்கக்கூடும் எனக் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழ் விக்கியில் உள்ள ஒலிப்பதிவுகள் 'ஆக்' (ogg) வடிவில் இருக்கின்றன. இதை எப்படி கேட்பது? விக்கியில் பயன்படுத்தும் அனைத்துமே கட்டற்ற மென்பொருள்கள்தானா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இது எனக்கும் பிரச்சினையாகத்தான் உள்ளது. 'ஆக்' (ogg) வடிவிலான ஒலிப்பதிவு எதையும் என்னால் கேட்க முடியவில்லை. இவையெல்லாம் கட்டற்ற மென்பொருள்களே.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழ் விக்கியில் உள்ள தரவுகள், தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகின்றனவா?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மயூரநாதன்: முடிந்தவரை செய்கிறோம். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல பங்களிப்பவர்கள் கூடுதலாக வரும்போது இதனை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? தள நிர்வாகிகள், கட்டுரையாளர்கள், பயனாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 9,000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். பங்களிப்பவர்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவே. கடந்த ஐந்து வருட காலத்தில் ஐந்து தொகுப்பாவது செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 250 வரையில் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தவர்கள் சுமார் 60 பேர். தற்போது ஓரளவு தீவிரமாகச் செயற்படுபவர்கள் 20 -25 பேர் இருக்கலாம். இவர்களில் 17 நிர்வாகிகளும், அதிகாரி தரத்தில் நால்வரும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;இவர்கள் அனைவரும் பகுதி நேரத் தன்னார்வலர்களா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: அனைவரும் ஓய்வு நேரங்களின் பங்களிப்புச் செய்பவர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;நிர்வாகிகள் / அதிகாரிகள் தர நிலை குறித்துச் சொன்னீர்கள். இந்த நிலைகளுக்கு வருவதற்கு வேண்டிய தகுதிகள் என்னென்ன?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: இவற்றுக்குச் சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் கிடையாது அதே போல் சிறப்புச் சலுகைகளும் இல்லை. பொதுவாக ஒருவருடைய பெயரை நிர்வாகி பதவிக்கோ, அதிகாரி பதவிக்கோ இன்னொருவர் நியமனம் செய்யலாம் அல்லது தானே தன்னை நியமித்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இது தொடர்பாக விரும்பும் பயனர்கள் வாக்களிப்பர். அக்கால முடிவில் அவருக்கு இருக்கும் ஆதரவைப் பொறுத்து அதிகாரி நிலையில் உள்ள ஒருவர் அவருக்கு நிர்வாகி அல்லது அதிகாரி அணுக்கத்தை வழங்கலாம். நிர்வாகி தரத்தில் உள்ள ஒருவர் தொகுப்புகளின்போது கட்டுரைகளை நீக்குதல் போன்ற சில கூடுதல் பணிகளைச் செய்ய முடியும். நிர்வாகி அல்லது அதிகாரிகளுக்கான அணுக்கம் அளித்தல், அதிகாரி தரத்தில் உள்ளவர்களுக்கான மேலதிக அணுக்க வசதி ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தீவிரமாகச் செயலாற்றும் சிலரின் பெயர்களைக் குறிப்பிடலாமா?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது தீவிரமாகச் செயலாற்றுபவர்களில், சுந்தர், நற்கீரன், ரவிசங்கர், சிவகுமார், உமாபதி, கனக சிறீதரன், பேராசிரியர் செல்வக்குமார், பேராசிரியர் வி.கே, குறும்பன், கார்த்திக்பாலா, டானியேல் பாண்டியன், தேனி. எம். சுப்பிரமணி, அருண், செல்வம், பரிதிமதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களைவிட தற்போது குறைவாகவே பங்களித்தாலும் முன்னர் குறிப்பிடத்தக்க பங்களித்தவர்களாகப் பின் வருபவர்களையும் குறிப்பிட முடியும்: சந்தோஷ்குரு, கலாநிதி, மயூரேசன், மு. மயூரன், சிறீனிவாசன், கோபி, நிரஞ்சன் சக்திவேல், டெரென்ஸ், சந்திரவதனா, வினோத், சிந்து, விஜய ஷண்முகம், பாலாஜி, வைகுண்டராஜா, பாலச்சந்திரன், வேர்க்லோரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;இவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள்.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மயூரநாதன்: நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;உங்கள் பணி / தொழில் குறித்துச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மயூரநாதன்: நான் கடந்த 30 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வருகிறேன். இலங்கையில் கட்டடக் கலையில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 15 ஆண்டுகள் இலங்கையிலேயே பணியாற்றினேன். பின்னர் 1993ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து பணி செய்யத் தொடங்கினேன். கடந்த 15 ஆண்டுகளாக இங்கே பணி புரிந்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;உங்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வம் பிறந்தது எப்படி?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மயூரநாதன்: பொதுவாகவே தமிழில் அறிவுத் துறைகளை வளர்க்க வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு சிறு வயது முதற்கொண்டே உள்ளது. 2003ஆம் ஆண்டில் ஒரு வலைத்தளம் மூலம் விக்கிப்பீடியா பற்றி அறிந்தேன். அங்கே ஒரு அன்பர் தமிழிலும் இதனைத் தொடங்க முடியும் என்று குறிப்பொன்றை விட்டிருந்தார். அன்றிலிருந்து இத்திட்டத்தில் ஈடுபடத் தொடங்கிக் கடந்த 5 1/2 ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்களித்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தனி நபராக 2760க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய அனுபவத்தை விவரியுங்கள். உங்களுக்கு விருப்பமான துறைகள், தலைப்புகள் என்னென்ன? உங்கள் கட்டுரைகளின் மூலம் எவை? விவரங்களை எவ்வாறு திரட்டுகிறீர்கள்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: நான் எழுதிய கட்டுரைகள் என்பதிலும் நான் தொடங்கிய கட்டுரைகள் என்று சொல்வது தான் பொருத்தமானது. நான் தொடங்கிய &lt;script src="http://www.chennaionline.com/tamil/js/tiny_mce/themes/advanced/langs/en.js" type="text/javascript"&gt;&lt;/script&gt; கட்டுரைகள் பலவற்றை வேறு பலர் விரிவாக்கி உள்ளனர். அது போலவே நானும் பிற பங்களிப்பாளர்கள் தொடங்கிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை விரிவாக்கி உள்ளேன். நான் தொடங்கிய பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தவையே. இவற்றைச் செய்ததில் உள்ள அனுபவம் என்பதிலும், என்ன அடிப்படையில் இவற்றைச் செய்தேன் என்று சொல்கிறேன். பெரும்பாலும் நான் கட்டுரைகளை எழுதும்போது தனித் தனிக் கட்டுரைகளாக அன்றி ஒரு தொகுதியாகவே எழுதுவதுண்டு. இதனால் ஒரு குறிப்பிட்ட தலைப்பைத் தெரிவு செய்து கொண்டு அது தொடர்பாக 25, 50 எனக் கட்டுரைகளை எழுதுவது உண்டு. எடுத்துக்காட்டாக, சோழர்களைப் பற்றி ஒரு தொகுதியாகக் கட்டுரைகள் எழுதினேன் அண்மையில் முடிச்சுகள் என்னும் தலைப்பிலும் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினேன். இதனால், ஒரு கட்டுரையில் இருந்து இன்னொரு கட்டுரைக்கு இணைப்புகள் கொடுத்து ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் செல்லும் வாய்ப்பை அதிகரிக்க முடிகிறது. அத்துடன் ஒரே விடயத்தில் எழுதும்போது, தகவல்கள் சேகரிப்பதும், எழுதுவதும் இலகுவாகவும் அமைகின்றது. நாம் பல துறைகளில் கட்டுரைகளைத் தொடங்கியுள்ளேன். முக்கியமாகக் கட்டடக் கலை, பிற கலைகள், தமிழ், மொழியியல், சூழலியல், வரலாறு, அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் இவற்றுள் அடங்கும். பல தகவல்களை நான் ஆங்கில விக்கியில் இருந்து பெறுவதுண்டு. இவை தவிர என்னிடமும் ஓரளவு நூல்கள் உள்ளன, இவற்றிலிருந்தும் தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;கிலோமீட்டர், கனமீட்டர் எனப் பலவற்றை அப்படியே பயன்படுத்தும் நிலையில் இருக்கிறோம். அறிவியல், தொழில்நுட்பச் சொற்களுக்கும் இதே நிலைதான். மொழிபெயர்ப்பிலும் ஒலிபெயர்ப்பிலும் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மயூரநாதன்: மொழிபெயர்ப்பிலும், ஒலி பெயர்ப்பிலும் வரக்கூடிய முக்கிய சவால்கள் பெரும்பாலும் கலைச்சொற்கள் தொடர்பானவையும், ஆங்கிலப் பெயர்களை ஒலிபெயர்த்தல் தொடர்பானவையும் ஆகும். இவை தவிர அண்மைக் காலத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாடு தொடர்பிலும் சவால்கள் உள்ளன. கலைச் சொற்கள் தொடர்பில் பெரும்பாலான கலைச்சொற்களுக்கு ஏற்கெனவே இருக்கும் கலைச்சொல் தொகுப்புகளில் உள்ள கலைச் சொற்களையே பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள முக்கிய பிரச்சினை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களுக்கு இடையிலான வேறுபாடுகள் ஆகும். எனக்கு இலங்கையில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் பழக்கமானவை. ஆனால், இவற்றைப் பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதனால் பல அகராதிகளிலும் தேடி உரிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலச் சொற்களின் ஒலி பெயர்ப்பிலும் முக்கியமான சிக்கல் தமிழ் நாட்டவர், இலங்கைத் தமிழர் இடையிலான உச்சரிப்பு வேறுபாடுகள் ஆகும். இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் விக்கிப்பீடியாவின் உரையாடல் பக்கங்களில் இருப்பதைக் காணலாம். எனினும் கலந்துரையாடல்கள் மூலம் இணக்கத்துக்கு வர முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;நீங்கள் உருவாக்கிய புதிய சொற்கள் எவை?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: நான் பொதுவாகப் புதிய சொற்களை உருவாக்குவதில் ஈடுபடுவதில்லை. எனினும் அவ்வப்போது தேவை ஏற்பட்டால் ஓரிரு சொற்களை உருவாக்குவது உண்டு. இப்பொழுது ஞாபகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழ் விக்கிபீடியாவில் என்னென்ன துறைகளில் பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள்? இன்னும் என்னென்ன துறைகளில் பங்களிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: பங்களிப்பவர்களில், பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பம், கணினித் துறைகளைச் சேர்ந்தவர்களே. இவர்களைத் தவிரக் கணிதம், மின்னியல், கட்டடக் கலை, உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். எனினும் இவர்களிற் பலர் பல்துறை ஆர்வம் கொண்டவர்கள். பல துறைகள் தொடர்பான கட்டுரைகளை எழுதக் கூடியவர்கள். எனினும் பல முக்கிய துறைகளில் ஆர்வலர்கள் வேண்டும். எடுத்துக்காட்டாக, மருத்துவம், சட்டம், பொருளியல் போன்ற பல துறைகளில் நுணுக்கமாகக் கட்டுரைகளை எழுதக் கூடியவர்களின் பங்களிப்புத் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;புதிதாகப் பங்களிக்க விரும்புவோருக்கு உங்கள் குறிப்புகள் என்னென்ன?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிதாகப் பங்களிக்க வருவோர், தமிழில் உள்ளீடு செய்யத் தெரிந்திருப்பது அடிப்படையானது. இதற்கான வழிகாட்டிகளை விக்கிப்பீடியாவிலே பார்க்க முடியும். தவிர ஏற்கெனவே அனுபவம் பெற்ற பயனர்களிடம் இது தொடர்பில் உதவி பெற்றுக்கொள்ளவும் முடியும். தற்போது சில இடங்களில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்புவோருக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகின்றன. இவ்விடங்களுக்குச் செல்ல முடிந்தவர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக விக்கிப்பீடியாவின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியம். இது பலர் கூடி உருவாக்கும் ஒரு கலைக் களஞ்சியம். ஒருவர் எழுதும் கட்டுரையில் இன்னொருவர் திருத்தங்களைச் செய்ய முடியும். புதிய கருத்துகளைச் சேர்க்க முடியும். கட்டுரையின் அமைப்பே மாறிவிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கு அவசியம். ஆனால், இவ்வாறான மாற்றங்கள் எழுந்தமானமாக நடைபெறுவது இல்லை. சர்ச்சைக்கு உரிய மாற்றங்கள் எனில், முதலில் உரையாடல் பக்கத்தில் கலந்துரையாடல் நிகழும். நான் கட்டுரைகளை எழுதுகிறேன் என்றில்லாமல், பலருடன் நானும் கூட்டாக ஒரு கலைக் களஞ்சியத்தை உருவாக்குகிறேன் என்னும் மனப்பாங்கு இருக்க வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழ் விக்கியின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;மயூரநாதன்: தனித்தனி மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சியைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான பதவிகளோ அல்லது குழுக்களோ எதுவும் கிடையாது. முறைப்படியாகச் சேர்ந்து இயங்குவதற்கான அமைப்பு முறைகளும் கிடையாது. ஆனாலும், கலந்துரையாடல்களின் மூலம் விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சி குறித்த இலக்குகளையும் நடைமுறைகளையும் ஓரளவுக்கு வகுத்துக்கொள்ள முடியும். தமிழ் விக்கிப்பீடியாவிலும் இத்தகைய கலந்துரையாடல்கள் மூலம் சில திட்டங்கள் உருவாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடைய அடிப்படை நோக்கம் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அக் கட்டுரைகள் முழுமையானவையாகவும், தரமுள்ளவையாகவும் அமைவதை உறுதி செய்வதுமே. இதற்கான முதன்மைத் தேவை, பங்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகும். &lt;br /&gt;தற்போது பங்களித்து வரும் பயனர்களின் புவியியற் பரம்பலைக் கவனித்தால் இப் பரம்பலில் உள்ள சில குறைபாடுகளைக் கவனிக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பவர்கள் சுமார் 10 நாடுகளிலிருந்து பங்களிப்புச் செய்கின்றனர். இவர்களில் இந்தியா, இலங்கை ஆகிய தாயகப் பகுதிகளில் வாழ்வோர் அரைப் பங்கினருக்கும் குறைவே. பெரும்பாலோர் தாயகப் பகுதிகளுக்கு வெளியே வாழும் தமிழர்களே. உலகத் தமிழர்களில் 95% மக்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து பங்களிப்பவர்கள் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே. இந் நிலையை மாற்றுவதற்குத் தாயகப் பகுதிகளிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து &lt;script src="http://www.chennaionline.com/tamil/js/tiny_mce/themes/advanced/langs/en.js" type="text/javascript"&gt;&lt;/script&gt; பல புதிய பங்களிப்பாளர்களை உருவாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இணையத்துக்கு வெளியில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துவதற்கும், ஆர்வமுள்ளவர்களுக்கு இது குறித்த பயிற்சிகளை அளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர்கள் சிலர் விக்கிப்பீடியா ஆர்வலர்கள் சிலருடன் இணைந்து இவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதுவரை பெங்களூரிலும், சென்னையிலும் பயிற்சிப் பட்டறைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;தரத்தைப் பொறுத்தவரை தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் பெருமளவில் முன்னேற இடம் உண்டு. கூடியமட்டிலும் சான்றுகளுக்கு முன்னுரிமை தந்து சுட்டுகிறோம். எனினும் பல கட்டுரைகளில் மேற்கோள்கள் சுட்டப்பட வேண்டியுள்ளது. பொதுவான தமிழ் நடை பற்றிய குறைபாடுகளும் உண்டு. இவற்றைக் கவனித்து உரிய திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம். வரும் நாட்களில் இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இப்போதுள்ள குறைந்த எண்ணிக்கையிலான பங்களிப்பாளர்களுடன் இவ்வாறான பணிகளைச் செய்து முடித்தல் கடினம். பல புதியவர்கள் பங்களிக்க முன்வந்தால் தான் இவற்றைத் திறம்படச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிச் சிந்திக்கும் போது, தமிழ் மக்களுக்குத் தனித்துவமாக இருக்கக்கூடிய தேவைகள், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள், சாதக பாதக நிலைமைகள் என்பன பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக புதிய அறிவுத் துறைகளில் உருவாகும் அறிவுச் செல்வங்களைத் தமிழில் கொண்டு வருவதில் உள்ள பிரச்சினைகள் பற்றித் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலம் தான் விக்கிப்பீடியாவைத் தமிழில் மக்களுக்குப் பயன் தரத்தக்க வகையில் வளர்த்தெடுக்கலாம்.&lt;br /&gt;ஆங்கிலம் போன்ற மொழிகளிலுள்ள விக்கிப்பீடியாக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுடன் நமது பிரச்சினைகளை ஒப்பிட முடியாது. உலக மொழி என்ற அளவில் ஆங்கில மொழிக்கு உலக அளவில் பெரும் சாதக நிலை உண்டு. உயர்கல்விக்கு உரிய மொழியாகத் தமிழை நாங்கள் பயன்படுத்தாமை காரணமாக தமிழர்களான அறிஞர்கள் பலர், தமிழ் மூலம் தங்கள் அறிவை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பது ஒருபுறம் இருக்க, உயரறிவுத் தரம் கொண்ட கட்டுரைகளைத் தமிழில் யார் பயன் படுத்துவார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே எவ்வாறான கட்டுரைகள் தமிழ் மக்களுக்குப் பயன்படும், உயரறிவுத் தரம் கொண்ட கட்டுரைகளின் தேவை எத்தகையது போன்ற விடயங்களைச் சீர் தூக்கிப் பார்த்துத் தமிழ் விக்கிப்பீடியா வளர்த்து எடுக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;இவ்வளவு நேரம் பொறுமையாகப் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் பணியும் விக்கிப்பீடியாவின் வீச்சும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயூரநாதன்: என்னை உங்களுடன் உரையாட அழைத்தமைக்காகவும், தமிழ் விக்கிப்பீடியா பற்றிக் கூறுவதற்கு வாய்ப்புத் தந்தமைக்காகவும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;நன்றி: &lt;a href="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?page=5&amp;amp;NEWSID=f9a75700-62f0-40b0-9f04-6c55160ac0f0&amp;amp;CATEGORYNAME=TCHN"&gt;சென்னை ஆன்லைன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-1181900673934752323?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/1181900673934752323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=1181900673934752323' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/1181900673934752323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/1181900673934752323'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2009/12/blog-post_4780.html' title='தமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-8502305127589016961</id><published>2009-12-24T13:01:00.001+05:30</published><updated>2009-12-24T13:29:34.628+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இ-நேர்காணல்'/><title type='text'>இணையத்தில் பள்ளிக்கூடம்: ஆர்.செல்வக்குமார் உடன் இ-நேர்காணல்</title><content type='html'>&lt;img alt=" இணையத்தில் பள்ளிக்கூடம்: ஆர்.செல்வக்குமார் உடன் இ-நேர்காணல்" class="imgbor fl mr" src="http://www.newsonweb.com/newsimages/May2009/4e6f92e3-f9ad-491e-9169-b6c1be36d23f1.jpg" title="இணையத்தில் பள்ளிக்கூடம்: ஆர்.செல்வக்குமார் உடன் இ-நேர்காணல்" /&gt; &lt;br /&gt;&lt;em&gt;&lt;a href="http://www.mastermindseacademy.com/" title="http://www.mastermindseacademy.com"&gt;MasterMinds E Academy&lt;/a&gt; என்ற அமைப்பின் நிறுவனரான ஆர்.செல்வக்குமார், இணையப் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்துகிறார். திருவண்ணாமலை, மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு இவர் சென்னையில் இருந்தபடியே பாடம் நடத்துகிறார். ஒரே நாளின் வெவ்வேறு நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. 2009 மே 29 அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை திருவண்ணாமலையில் உள்ள மாணவர்களுக்கு இவர் ஆங்கில வகுப்பு எடுத்தார். அந்த நேரத்தில் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணனை அந்த வகுப்பிற்கு விருந்தினராக அழைத்தார்; வகுப்பு நடைபெறும் விதத்தினை நேரடியாக விளக்கினார்; விருந்தினருடன் மாணவர்களும் ஒலி வழியே உரையாடினர். அதே நாளன்று மதியம், அண்ணா கண்ணன், ஆர்.செல்வக்குமாருடன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: உங்கள் &lt;span class="IL_AD" id="IL_AD4"&gt;MasterMinds&lt;/span&gt; E &lt;span class="IL_AD" id="IL_AD5"&gt;Academy&lt;/span&gt; என்னென்ன பணிகளை ஆற்றுகிறது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா:&amp;nbsp; மாணவர்களுக்கு பேச்சுக் கலையை சொல்லிக் கொடுத்து (&lt;span class="IL_AD" id="IL_AD1"&gt;Spoken English&lt;/span&gt; + &lt;span class="IL_AD" id="IL_AD3"&gt;Soft Skills&lt;/span&gt;), வேலை வாங்கித் தருகிறோம். மின்னல் கணிதம் - கணக்குப் பாடத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தரும் ஒரு பாடத் திட்டம். இதையும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறோம். தவிர தற்போது 4 நான்கு புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறோம். அனைத்தும் குழந்தைகளுக்கானவை. தற்போது ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லித் தரும் விசிடி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். மொத்தம் 15 விசிடிக்கள். முதல் விசிடி வெளியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: இணையப் பள்ளியை ஏன், எப்படி, எப்போது தொடங்கினீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகின்றது. எங்களது நோக்கம் கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய கல்வி தருவதுதான். ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், கிராமப்புறங்களுக்கு வருவதற்குப் பயிற்சியாளர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. பணம் மற்றும் தொலைவு இரண்டும் மிக முக்கியமான காரணங்கள். எனவே இங்கிருந்தபடியே தமிழகத்தில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் எப்படி கல்வியை எளிதாகக் கொண்டு செல்வது என்று யோசித்தபோது தோன்றியதுதான் “சாட்டிலைட் வழிக் கல்வி“. ஆனால் “சாட்டிலைட் வழிக் கல்வி“ மிகவும் காஸ்ட்லி. அதுவுமல்லாமல், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வகுப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அதற்காகப் பள்ளிகளோ, கல்லூரிகளோ செலவு செய்யத் தயாராக இல்லை. எனவே “சாட்டிலைட் கல்விக்கு மாற்றாகக் கிடைத்ததுதான் இணைய வழிக் கல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: இணையப் பள்ளி எப்படி செயல்படுகிறது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: முதலில் பாடத் திட்டம் வகுக்கப்படுகின்றது. தற்போதைய (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பாடத் திட்டம் 90 மணி நேரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல மின்னல் கணிதம் 64 மணி நேரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ, வீடியோ மற்றும் பவர் பாயிண்ட் வடிவங்களும் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: இணைய வகுப்பறை எப்படி இருக்கும் என நம் வாசகர்களுக்கு விரிவாகச் சொல்லுங்கள்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: யாகூ அல்லது ஹாட் மெயிலின் (Chat room)அரட்டை அறையை பார்த்திருக்கின்றீர்களா? ஒரு இணைய வகுப்பு அறை அப்படித்தான் இருக்கும். நமது இணைய வகுப்பறைத் திரையை இரண்டாகப் பிரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. இடப் பக்கம் 2. வலது பக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;இடப் பக்கத்தை white board என்று சொல்வார்கள். இதுதான் திரையின் முக்கால் பகுதி. இதில் நீங்கள் டைப் செய்யலாம்.பென்சில் எடுத்து எழுதலாம். பிரஷ் எடுத்து வரையலாம். வட்டம் மற்றும் சதுரம் வரையலாம். அழகான கோடு இழுக்கலாம். கணக்குப் பாடங்களுக்குத் தேவையான கிராஃப் வரையலாம். பின்னர் செய்தவை அனைத்தையும் இரப்பர் எடுத்து அழிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் வழக்கமான வகுப்பறையில் உள்ள ஒரு பலகையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யலாம், அதற்கு மேலும் செய்யலாம். அதாவது அதை ஒரு தொலைக்காட்சி திரையைப் போல பயன்படுத்தி வீடியோக்களை ஒளிபரப்பலாம். ஆசிரியர் தன் திரையில் ஒளிபரப்பும் வீடியோ, மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். அதே போல ஆசிரியர் ஒரு பவர்பாயிண்ட், வேர்டு அல்லது PDF கோப்புகளை அதில் தவழ விடலாம். அதையும் மாணவர்கள் அனைவரும் பார்க்க முடியும். தேவைப்பட்டால் ஒரு ரேடியோ போல ஒலிபரப்பிலும் ஆசிரியர் ஈடுபடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, திரையின் வலது பக்கம். வலது பக்கம் திரையின் கால் பகுதிதான். இதனை மூன்றாகப் பிரிக்கலாம் வலது மேல் மூலை, வலது நடுப் பகுதி, வலது கீழ் பகுதி. &lt;br /&gt;&lt;br /&gt;இனி வலது மேல் மூலைக்கு வருவோம். அதில்தான் பயிற்சியாளரின் வீடியோ தெரியும். அதை மாணவர்கள் பார்க்கலாம். அதே போல் மாணவர்கள் வெப் காமிரா வைத்திருந்தால், அதே இடத்தில் அவர்களுடைய வீடியோவை ஆசிரியர்&amp;nbsp; பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வலது நடுப்பகுதியில்தான் எந்தெந்த மாணவர் வகுப்பில் (Log in) இணைந்துள்ளனர் என்பது தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வலது கீழ்ப்பகுதி அரட்டை அறை. அதில் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை மாணவர்கள் டைப் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பில் தொடர்ந்து ஆசிரியர் பேசிக் கொண்டிருப்பார். எந்த மாணவருக்காவது சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்பது எளிது. அந்த மாணவர் தனது பெயருக்கு எதிரே உள்ள ஐகானை கிளிக் செய்தால், அந்த ஐகானிலிருந்து ஒரு கை உயரும். அதை ஆசிரியர் பார்த்து, அந்த மாணவருக்கு பேச அனுமதி தருவார். இனி அந்த மாணவர் ஆசிரியருடன் பேசலாம். இதை மற்ற மாணவர்கள் அனைவரும் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக ஒரு வகுப்பில் ஆசிரியரும் யாராவது ஒரு மாணவரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். எந்த மாணவராவது தேவையில்லாமல் பேசி, அத்து மீறினால் அவரை வெளியேற்றக் கூடிய (Block) கட்டுப்பாடு ஆசிரியருக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இது ஒரு நிஜ வகுப்பறையைப் போலவே இயங்கும். குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: மாணவர்கள் எங்கே, எப்படி உங்களுடன் ஒருங்கிணைகிறார்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: நாங்கள் Franchisee model வைத்திருக்கின்றோம். தற்போது திருவண்ணாமலை, மதுரை ஆகிய இரு நகரங்களிலும் சிறப்பாகச் செயல்படுகின்றது. மாணவர் சேர்க்கை அங்குதான் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட Franchisee மையங்கள் வழியாக நாங்கள் விளம்பரப்படுத்துகின்றோம். வந்து அணுகும் மாணவர்களுக்கு அங்கிருக்கும் ஆலோசகர்கள் எமது NetSchool பற்றி எடுத்துக் கூறுவார்கள். அங்கிருக்கும் ஆலோசகர்கள் எங்களால் நேரடியாகவும், இணையம் வழியாகவும் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள். அதாவது &lt;span class="IL_AD" id="IL_AD2"&gt;Train the Trainers&lt;/span&gt; என்று ஒரு வகுப்பை நடத்தி அதன் மூலம் பயிற்சியாளர்களை உருவாக்குகிறோம். அவர்கள்தான் மாணவர்களுடன் பேசி இதைப் பற்றி விளக்குகிறார்கள். அது மட்டுமல்லாமல், அவர்களே சாதாரண முறையில் வகுப்பும் எடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: உங்களின் பிரான்சைஸ் எனப்படும் உரிமம் பெற்ற மையங்கள் எவ்வளவு உள்ளன? எங்கெங்கு உள்ளன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: தற்போது சென்னையில் மூன்று மையங்களும், திருவண்ணாமலையில் இரண்டு மையங்களும், மதுரையில் 19 (கிராமப்புற) மையங்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: ஒரு மையத்தில் எவ்வளவு கணினிகள் இருக்கும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: இணைய வழிக் கல்வியில் ஒரே நேரத்தில் 15 மாணவர்களுக்கு எளிதாக வகுப்பு எடுக்கலாம். அதிக பட்சம் ஒரே நேரத்தில் 20 மாணவர்கள். ஆளுக்கொரு கணினி இருந்தால் மிகக் கச்சிதமாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் ஒரே ஒரு கணினி இருந்தாலும் போதுமானது. திருவண்ணாமலையில் தற்போது ஒரே ஒரு கணினியைக் கொண்டுதான் வகுப்பு நடைபெறுகின்றது. ஒரே நேரத்தில் 10 மாணவர்கள் வரை வகுப்பில் கலந்து கொள்கின்றார்கள். நிச்சயமாக ஒலிவாங்கி (மைக்) மற்றும் ஒலிபெருக்கி (ஸ்பீக்கர்கள்) தேவை. ஏனென்றால் பாடங்கள் முழுக்க முழுக்க ஆடியோ அல்லது வீடியோ சார்ந்தவையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: மாணவர்கள் தனிப்பட்ட ஆர்வத்தின் பேரில் வருவது சரி; இதற்குப் பள்ளிகளின் ஒத்துழைப்பு உண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: உண்மையைச் சொல்லப் போனால் இது வரையில் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ள அனைவருமே தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மட்டும்தான். இன்னமும் பல பள்ளி நிர்வாகங்களுக்கு “இணைய வழிக் கல்வியின்” எளிமையும் வலிமையும் புரியவில்லை.&amp;nbsp; காரணம் அவர்கள் இணைய வழிக் கல்வியை ஒரு “டெக்னாலஜி”யாகத்தான் பார்க்கிறார்கள். இணைய வழிக் கல்விக்கு இன்டர்நெட் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவை என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் ஒரு இமெயில் அக்கவுண்டைத் திறந்து பார்த்துப் பயன்படுத்துவது போல இணைய வழிக் கல்வி வகுப்பை நடத்துவதும் மிக மிக எளிமையானது. எனவே இணையம் என்பது இரண்டாம் பட்சம்தான். எதைச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்? எப்படி சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம். இன்னொன்று பள்ளிகளும் கல்லூரிகளும் இது மிக செலவு பிடிக்கும் விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு மாதத்திற்கான இணைய சந்தா அதாவது 1500 ரூபாய் இருந்தால் போதும். இணையக் கல்வியை நடத்திவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: அருமை, இதை நீங்கள் எப்படி, எங்கிருந்து கற்றீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;செல்வா: அடிப்படையில் நான் ஒரு மென்பொருள் வல்லுனர். அதாவது அந்தக் காலத்து DOS Familyஐச் சேர்ந்தவன். கிட்டத்தட்ட இருபது வருடமாகத் தொடர்ந்து கணிணிக் கல்வி கற்றுக்கொண்டே இருக்கின்றேன். அதுவும் இணையம் வந்தவுடன் கற்பது அதிகமாகிவிட்டது. அதுவுமல்லாமல் தற்போது கூகுள் போன்ற தேடல் பொறிகளும், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற உலகளாவிய நட்பு வட்டாரங்களும் நமக்கு அமுதசுரபி போல விஷய ஞானத்தை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு எடுத்து, எவ்வளவை மற்றவர்களுக்குக் கொடுக்கிறீர்கள் என்பதுதான் தற்போதைய நிலை.&lt;br /&gt;ஓப்பன் சோர்ஸ் ஒரு வரப்பிரசாதம். அதில் எல்லாமே இலவசமாக இருக்கிறது. இணையப் பள்ளியை நடத்தத் தேவையான மென்பொருட்கள் உட்பட. எனவே நான் எது தேவையென்றாலும் உடனே ஓப்பன் சோர்ஸை நாடுகிறேன். தேடுவது உடனே ஒரு மாயக் கண்ணாடி போல நம் முன் இலவசமாக வந்து நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: இணையக் கல்விக்கு உதவும் மென்பொருள்கள் என்னென்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: நீங்கள் மென்பொருள் வல்லுனராக இருந்தால் Moodle என்கின்ற மென்பொருளை உங்களுக்கு ஏற்ப (customize) வடிவமைத்துக் கொள்ளலாம். என்னால் அது கூட முடியாது என்றால் &lt;a href="http://www.wiziq.com/" title="http://www.wiziq.com"&gt;http://www.wiziq.com&lt;/a&gt; போன்ற வலைத்தளங்கள் இலவச இணைய வகுப்புகளைத் தருகிறார்கள். நான் இதைத்தான் பயன்படுத்துகிறேன். இது ஒயிட்போர்டு வசதியுடன் கூடியது. அதாவது இதில் எழுதலாம், வரையலாம், அழிக்கலாம், ஆடியோக்களை ஒலிக்க விடலாம், வீடியோக்களைக் காட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல PalTalk Scene என ஒன்று இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் இதைத்தான் பயன்படுத்தி வந்தேன். இங்கு ஒயிட்போர்டு கிடையாது. அதாவது எழுதவோ, வரையவோ முடியாது. ஆனால் இதுவும் அருமையான ஒரு தளம்.&lt;br /&gt;&lt;br /&gt;PalTalk Scene, WizIQ இரண்டு தளங்களிலும் நீங்கள் இலவசமாக இணைந்து கொள்ளலாம். வகுப்புகள் நடத்தலாம். தேவைப்பட்டால் ஒரு மாணவராக மற்ற வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: இணைய வகுப்பறையில் மாணவர்களும் நீங்களும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வகுப்புகள் நடத்தியதுண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: பல முறைகள் நடத்தியிருக்கின்றேன். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம் என்பதைத் தவிர, அதனால் வகுப்பில் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லை. எனவே பொதுவாக நான் மட்டும் வெப் காமிராவைப் பயன்படுத்துகிறேன். அதாவது மாணவர்கள் என்னைப் பார்க்கலாம். மாணவர்களையும் நான் பார்த்தே ஆக வேண்டும் எனும்போது அவர்களையும் வெப் காமிரா பயன்படுத்த அனுமதிக்கிறேன். சில வகுப்புகளில் அவர்களுடைய body language பற்றிப் பேச வேண்டியதிருக்கும். அம்மாதிரி சமயங்களில் வெப் காமிரா அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: இந்த இணைய வகுப்பறை (Virtual Classroom) வசதியைத் தமிழகத்தில் வேறு யார் பயன்படுத்துகிறார்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: இதை வைத்துப் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக &lt;a href="http://www.2tion.org/" title="http://www.2tion.org"&gt;2tion.com&lt;/a&gt; என்கிற இணையதளம் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வரவேற்கிறது. நான் சொல்லி சில வீட்டுப் பெண்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களுக்குக் கல்வி, குறிப்பாகத் தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதம் சொல்லித் தருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்குப் போக முடியாத பெண்களும், ஓய்வு பெற்ற அனுபவஸ்தர்களும் முதியோர்களும் வீட்டிலிருந்தபடியே ஆன்-லைன் டியுஷன் போல வகுப்பு நடத்தலாம். ஒரே ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும். என்னை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கத் தயாராக உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: தொழில் நிறுவனங்களும் பயன்படுத்துகின்றனவா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: டாடா போன்ற பெரிய நிறுவனங்களில் தங்களது பணியாளர்களுக்கு மேல்கல்வி தேவைப்படும்போது இது போன்ற கல்வி முறையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வகுப்புகள் அவர்களுக்கு மட்டுமே அனுமதி தரும். வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: இந்த இணைய வகுப்பறையில் மொத்த வகுப்பு நேரத்தையும் பதிவு செய்யும் வசதி உள்ளது. இப்படிப் பதிந்து, ஆசிரியர் இல்லாத போதும் மாணவரே மீண்டும் கற்கும் வாய்ப்பு இருக்கிறதே! இதை நம் மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்துகிறார்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: கொஞ்சம் கொஞ்சமாக இந்த முறை தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. Passive Learning அதாவது Virtual learning-இல் ஒரு பலம் என்னவென்றால் எங்கும், எப்போதும், எதையும் கற்கலாம். ஆரம்பத்தில் எங்கள் இணையப் பள்ளியில் ஆசிரியர்களே தடுமாறினார்கள். பின்னர் மாணவர்கள் அதைப் புரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. தற்போது அனைத்தும் சரியாகி வழக்கமான ஒரு வகுப்பாகவே மாறிவிட்டது. நாங்கள் குறிப்பாக Active Learning Method என்கின்ற முறையைப் பயன்படுத்துகின்றோம். அதாவது இங்கு பயில்வதுதான் முக்கியம், பயிற்சி தருவது அல்ல. This is not teacher centric; this is student centric. It's all about learning, not about teaching.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: தேர்வுகளை எப்படி நடத்துகிறீர்கள்? மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்களா என்பதை எப்படி அறிகிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: மொத்தம் 90 மணி நேரம். ஒவ்வொரு பத்து மணி நேரத்திற்கும் ஒரு Self Assesment உள்ளது. அதற்கான படிவங்களை நாங்கள் ஆன்லைனிலும் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட Franchisee மையங்களிலும் இருக்கும். அது தவிர பயிற்சியாளர் மாணவர்களை எடை போடும் Test தனியாக உண்டு. ஆனால் தனியாக Test நடத்துவதில்லை. குறிப்பிட்ட சில நாட்களில் வகுப்புகளின் ஆரம்பத்தில் நடக்கும். பின்னர் அதை அடிப்படையாக வைத்து விவாதம் நடத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ முதல், அவன் அடுத்தது, அவள் கடைசி என்று மார்க் போட்டு 'ராங்க்கிங் சிஸ்டம்' இதில் கிடையவே கிடையாது. ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு நிலையில்தான் இருப்பார். ஒருவருக்கு நன்றாக பேச வரும்; எழுத வராது. சிலருக்கு எழுத வரும்; பேச வராது. எனவே அனைத்தும் அனைவருக்கும் இருக்கும் என்பது சாத்தியமில்லை. இதை மாணவர்களுக்குப் புரிய வைக்கிறோம். பலம் எது என அடையாளப்படுத்தி அதை வளர்க்க உதவுகிறோம். எது பலவீனம் என்பதை அடையாளப்படுத்தி அதை நீக்க உதவுகிறோம். எல்லாமே சகஜமான உரையாடலாகத்தான் இருக்கும். வழக்கமான வகுப்பறைகள் போல பிரம்படி மிரட்டல்கள் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: எந்தெந்த ஊர்களில் எவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: சுமாரான எண்ணிக்கையைத் தருகிறேன். திருவண்ணாமலையில் கிட்டத்தட்ட 40 மாணவர்களும், மதுரையில் 30 மாணவர்களும், சென்னையில் 20 மாணவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: Windows XP, Photoshop, Computers ஆகியவற்றையும் கற்பிக்கிறீர்கள். ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றையும் கற்பிக்கிறீர்கள். எதற்கு அதிக மாணவர்கள் இருக்கிறார்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: தற்போது நான் அதிகம் கவனம் செலுத்துவது ஆங்கிலம், அடுத்தது கணிதம், மற்றதெல்லாம் அதற்கு அப்புறம்தான். ஏனென்றால் கிராமப்புற மாணவர்களின் மிக முக்கிய தேவை, ஆங்கிலம் மற்றும் பேச்சுக் கலைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: இதற்கு நீங்கள் பெறும் கட்டணம் எவ்வளவு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: Franchisee மையங்கள் வழியாக ஆங்கில வகுப்பில் சேருபவர்கள், 1500 ரூபாய் கட்ட வேண்டும். இதற்குத் தவணை முறையும் உண்டு. கணித வகுப்பில் சேருபவர்கள் 1200 ரூபாய் கட்ட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: மொத்தம் 90 மணி நேரத்திற்கும் சேர்த்து 1500 ரூபாய், அப்படித்தானே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: ஆமாம். இது தவிர ஒரு பைசா கூட நாங்கள் வாங்குவதில்லை. பல நேரங்களில் 90 மணி நேரத்தைக் கடந்தும் மாணவர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் படிக்க நாங்கள் அனுமதிக்கின்றோம். காரணம், ஏற்கெனவே நான் சொன்னது போல இது Student centric, not Teacher centric. மாணவர்களுக்குப் புரிவதுதான் முக்கியம். பாடப் புத்தகங்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: இதில் சேர விரும்புவோ யாரை அணுக வேண்டும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: ஒரே எண் தான 044-43556972 அல்லது 9940142149. இது இரண்டுமே எமது சென்னை அலுவலக எண்கள். இதில் அழைத்தாலே போதும், உலகின் எந்த மூலையிலிருந்தும் எமது வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம். அல்லது &lt;a href="mailto:jollyenglish@gmail.com" title="jollyenglish@gmail.com"&gt;jollyenglish@gmail.com&lt;/a&gt; என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் நீங்கள் தயாரித்துள்ள பாடங்களின் சிறப்புகள் என்னென்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: இரண்டுமே நான் ஏற்கெனவே கூறியது போல Active Learning முறையில் உருவாக்கப்பட்ட பாடத் திட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: Easy Skills, Easy English, Easy Word Fun, Easy Science, Easy Lateral Thinking ஆகிய புத்தகங்களை எழுதி இருக்கிறீர்கள். Easyக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம், நம் கல்வி முறை Easy ஆக இல்லை என்பதாலா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: தற்போது நமது கல்வி முறை நிச்சயமாக Easyயாக இல்லை. இன்னமும் மனப்பாடக் கல்வி முறை நீடிக்கிறது. ஆங்கிலப் பாடத்தில் எனக்கு Grammar தெரிந்திருந்தாலும் ஷேக்ஸ்பியரின் அப்பா பெயர் தெரியாவிட்டால் நான் பெயிலாகிவிடுவேன். வெறும் மனப்பாடமே மார்க் போடும் என்பதால்தான், பத்தாம் வகுப்பில் மாநிலத்தில முதலாவதாக வரும் மாணவனை விட, புத்திசாலியான, மார்க் குறைச்சலாக எடுத்த மாணவன் நல்ல வேலையில் சேருகின்றான். எனவே இந்த முறையிலிருந்து மாற எல்லாப் பள்ளிகளுமே முயன்று கொண்டிருக்கின்றன. ஆனால் கல்வி என்பது பெரும் வியாபாரமாக இருப்பதால் சோதனை முயற்சிகளுக்குப் பள்ளிகள் அஞ்சுகின்றன. சோதனைக் காலங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால், கல்விச் சந்தையில் தங்களது டிமாண்ட் குறைந்துவிடும் என்று நினைக்கின்றார்கள். எனவே புதிய Active Learning முறைக்கு மாறப் பல வருடங்கள் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: நம் மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறன் எந்த அளவில், வேகத்தில் உள்ளது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: உண்மையில் நான்தான் மாணவர்களிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்கின்றேன். இன்று அவர்களுக்கு Knowledgeக்குப் பஞ்சமில்லை. இன்டர்நெட், டிவி எனப் பல வகைகளில் விஷயங்கள் அவர்களை வந்து தாக்கிக்கொண்டே இருக்கின்றன. எனவே அவர்கள் மிக வேகமாகச் செயல்படுகின்றார்கள். அவர்களுக்கு ஈடுகொடுத்து ஒரு நண்பனைப் போல கட்டுப்படுத்தி முறைப்படுத்துவது மட்டும்தான் என்னைப் போன்ற ஆசிரியர்களின் வேலை என நான் நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா: இன்னும் பல கிராமங்களுக்கு இணையப் பள்ளியை எடுத்துச் செல்வது. அதற்காகத் தொண்டு நிறுவனங்களுடன் கை கோர்க்க முடிவு செய்திருக்கின்றேன். ஏனென்றால் அவர்கள்தான் ஏற்கெனவே கிராமங்களில் தங்கள் கிளைகளை வைத்துப் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுடன் கைகோர்ப்பதன் மூலம் மேலும் பல கிராமங்களைச் சென்றடைய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது டெக்னாலஜி வளர்ந்து இன்று 3G வந்துவிட்டது. எனவே 3D வகுப்பறைகள் இனி எளிதில் சாத்தியப்படும். இதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்கெனவே &lt;a href="http://secondlife.com/" title="http://secondlife.com"&gt;http://secondlife.com&lt;/a&gt; வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஒரு 3டி இணையப் பள்ளியை நடத்தும் முயற்சியை ஏற்கெனவே தொடங்கி, பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா: பாடங்களையும் ஆசிரியர்களையும் அதிகரிக்க எண்ணமுண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா:&amp;nbsp; நிச்சயமாக. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். டெக்னாலஜி அல்லது தொழில்நுட்பம் தற்போது இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றது. ஆனால் எப்போதும் போல நல்ல பாடத் திட்டங்களும், சிறப்பான ஆசிரியர்களும் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர்கள் கிடைப்பது மிகக் கடினமாக இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் நினைத்தால், எளிமையான பாடத் திட்டங்களையும், அருமையான ஆசிரியர்களையும் எளிதாக உருவாக்க முடியும். என் போன்றவர்களுக்கு விரிவாக்கத்தில் நேரப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை உள்ளது. அதனால்தான் நான் தொண்டு நிறுவனங்களை அணுகி அவர்கள் மூலமாக Train the Trainers பயற்சி வழியாக ஆசிரியர்களை உருவாக்குவதை முதல் கட்டமாகச் செய்ய முயன்று கொண்டிருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அண்ணா:&amp;nbsp; நல்ல முயற்சி. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வா:&amp;nbsp; நன்றி. கற்போம் கற்பிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=9b7938ce-d985-4b0e-89e2-0797ea3dab0b&amp;amp;CATEGORYNAME=TCHN"&gt;சென்னை ஆன்லைன் &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-8502305127589016961?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/8502305127589016961/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=8502305127589016961' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/8502305127589016961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/8502305127589016961'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2009/12/blog-post_572.html' title='இணையத்தில் பள்ளிக்கூடம்: ஆர்.செல்வக்குமார் உடன் இ-நேர்காணல்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-8222114962518246185</id><published>2009-12-24T13:00:00.001+05:30</published><updated>2009-12-24T13:30:18.272+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இ-நேர்காணல்'/><title type='text'>எட்டும் தொலைவில் தமிழீழம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்</title><content type='html'>&lt;img alt=" எட்டும் தொலைவில் தமிழீழம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்" class="imgbor fl mr" src="http://www.newsonweb.com/newsimages/April2009/cb014d10-deab-46bb-ac4f-cb05715a792d1.jpg" title="எட்டும் தொலைவில் தமிழீழம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்" /&gt;&lt;br /&gt;மறவன்புலவு க. சச்சிதானந்தன், காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர்; ஐ.நா. உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றியவர்; &lt;a href="http://www.tamilnool.com/" title="www.tamilnool.com"&gt;www.tamilnool.com&lt;/a&gt;, &lt;a href="http://thevaaram.org/" title="http://thevaaram.org"&gt;http://thevaaram.org&lt;/a&gt; ஆகிய இணையதளங்களை உருவாக்கி நடத்துபவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்.... எனப் பல பெருமைகளுக்கு உரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வர் கருணாநிதியுடன் நட்புப் பூண்டவர். 27.04.2009 அன்று சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதத்தின் போது அவரைச் சந்தித்தார். உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார். அதே நாளன்று மதியம், சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன், சச்சிதானந்தனுடன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; இன்று கலைஞரைச் சந்தித்து என்ன பேசினீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்: &lt;/strong&gt;உண்ணாவிரதம் வெற்றிபெற வேண்டும். ஈழத்தில் போர் நிறுத்தம் வரவேண்டும். விரைந்து அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் எனக் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்ததும் தொலைக்காட்சியினர் பேட்டி கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இராசபக்சா அரசு கொடுமையான அரசு. யார் சொல்லையும் கேட்காத அரசு. ஒபாமா சொல்லிக் கேட்கவில்லை. பிரித்தானியப் பிரதமர் சொல்லிக் கேட்கவில்லை. தோக்கியோக் கூட்டு நாடுகள் பல முறை சொல்லியும் கேட்கவில்லை. இந்தியா பல முறை சொல்லியும் கேட்கவில்லை. வேறு வழியில்லை என்பதால் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கலைஞர் உண்னா நோன்பு இருக்கிறார். ஈழத் தமிழருக்கு இதனால் நன்மையே கிடைக்கும் எனக் கூறிவிட்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: &lt;/strong&gt;இது உச்சக்கட்ட நாடகம் என்று வைகோ கூறியிருக்கிறாரே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt; தமிழக உள்கட்சி அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. எல்லோருடைய ஆதரவும் ஈழத் தமிழருக்குத் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; கலைஞர் உங்கள் காதில் கிசுகிசுத்தது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt; சேதுக் கால்வாய் தொடர்பாக மூன்று நாள்களுக்கு முன் உங்கள் தொலைக்காட்சிப் பேட்டியைப் பார்த்தேன். நன்றாக இருந்தது எனக் கலைஞர் என்னிடம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; இந்தப் போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்?&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt; போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள் வானிலிருந்து கொடும் தாக்குதலை இன்று (27.4.2009) மணி 12.50க்கும் 13.10க்கும் இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்த்தியதாகப் செய்தித் தொடர்பாளர் புலித்தேவன் கூறிய செய்தி மின்னம்பலத்தில் உள்ளதே.&lt;br /&gt;&lt;br /&gt;இராசபக்சாவின் கபட நாடகத்தின் உச்சக் கட்டம் இதுவன்றோ? சொல்வதைச் செய்யமாட்டார், செய்வதைச் சொல்லமாட்டார். இராசபக்சாவின் உண்மை வடிவத்தை உணராதார் பேதைகளே!&lt;br /&gt;&lt;br /&gt;1050 ஆண்டுகளுக்கு முன் சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் இவ்வாறு ஏமாற்றியதால் இராசராசன் படையெடுத்து இலங்கையின் பாதியைக் கைப்பற்றினான். பின்னர் இராசேந்திரன் முழுமையாகக் கைப்பற்றி மகிந்தனைச் சிறைப்பிடித்தான். சிங்களத்தை வென்றதால் சிங்களாந்தன் என்ற சோழ மன்னரின் பட்டப் பெயரில் தமிழகத்தில் ஊர் ஒன்று இருப்பதை நினைவூட்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மகிந்தனுக்கும் அதே கதி விரைவில் வரும். பொறுத்திருந்து பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; அப்படியானால், போர் நிறுத்தம் என்பது வெறும் வார்த்தைதானா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt; எல்லோருக்கும் ஏமாற்றமே. இராஜபக்சா யார் சொல்லையும் கேட்கமாட்டார். இந்தியா அவரை வற்புறுத்தியதில்லை. பிரபாகரன் இல்லாத சூழலை இந்திய அதிகார வர்க்கம் விரும்புகிறது. இஃது இராசபக்சாவுக்குத் தெரியும். தமிழக மக்களையோ, அரசியல் தலைவர்களையோ இந்திய அதிகார வர்க்கம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. பொட்டு அம்மானையாவது சரணடையச் சொல்லுங்கள் என இந்திய அதிகாரிகள் கொழும்பில் வைத்துத் தமிழர் கூட்டமைப்புச் சம்பந்தனைக் கேட்டதை மறக்கமுடியுமா? இந்தியாவுக்கு விருப்பமானதைச் செய்து கொடுக்கும் இராசபக்சே, போரைத் தொடருவார். கலைஞருக்கு மேலும் அவப்பெயர் தேடுவதில் இராசபக்சாவின் பிரித்தாளும் ததந்திரம் வெற்றி பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; இதை அறிந்தால், கலைஞர் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்குவாரா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt; அவரின் அடுத்த நடவடிக்கையை நான் ஊகிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; தமிழ் ஈழத்துக்கு இலங்கைக்குள் இடமில்லை எனக் கோதபாயா ராஜபக்சே கூறியுள்ளாரே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt; போரை நடத்துவதற்கும் இனப் படுகொலையைத் தொடர்வதற்கும் சிங்களவர் கொண்டுள்ள அறிந்தும் அறியாதது போலச் சொல்லும் காரணங்களை மேலோட்டமாகவே பார்க்க. ஆழமான பொருள் அதில் இல்லை. தமிழீழம், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம். இதை அறியாதவரல்ல கோதபாயா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; ஈழத் தமிழர் சிக்கல் தீரத் தமிழ் ஈழமே ஒரே வழி என்ற ஜெயலலிதாவின் அறிவிப்புக் குறித்து?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. போர் நிறுத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தனியான ஈழத் தமிழர் தாயகத்தில் ஈழத் தமிழருக்கு இயல்பான உரிமைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. மேல் இரண்டும் இல்லை எனில் விடுதலை பெற்ற தனி நாடாக ஈழம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. 10,000 கோடி ஈழத் தமிழர் மீளமைப்பு நிதி.&lt;br /&gt;&lt;br /&gt;5. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாகர்கோயில் கூட்டத்தில் இந்த ஐந்து அம்சத் திட்டத்தை முன்வைத்த ஜெயலலிதா, மூன்றாவது அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறார். சேலம் கூட்டத்தில் முதல் இரண்டுக்கும் வாய்ப்பில்லை எனக் கூறி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பகோணம் இரவிசங்கரை ஜெயலலிதா மேற்கோள் காட்டியதை அந்த இரவிசங்கர் மறுத்திருக்கிறார், மீண்டும் இராசபக்சாவைச் சந்திக்கும் இரவிசங்கரின் நப்பாசையில் இருப்பவர் இரவிசங்கர். இலங்கையில் அமைதியைக் கொணர்ந்தால் நோபல் பரிசு தனக்கும் கிடைக்கும் என்ற கனவில் இருப்பவர் இரவிசங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா சொன்னதற்காக மட்டுமல்ல, ஈழத் தமிழரின் ஒரே அரசியல் நோக்கம் தமிழீழம் என்பதால் சேலம் பேச்சு வரலாற்றுப் பதிவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; இலங்கையை ஆதரிக்கும் சீனா, ஈழத்துக்கு எதிராகச் செயல்படுவது போல் இருக்கிறதே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt; முன்பு இங்குள்ள பொதுவுடைமைவாதிகள் எம் அரசியல் நோக்கத்தை ஏற்கவில்லை. 2.10.2008 சென்னை உண்ணா நோன்பு பொதுவுடைமைக் கட்சிகளின் உபயம். அன்று முதலாகத் தமிழகத்தையே ஈழத்தை நோக்கி விழிக்க வைத்தவர்கள் அவர்கள். ஈழத் தமிழரின் அளவற்ற பொறுமையே சிங்களவரின் வெறுமையைத் தோலுரித்துக் காட்டியது பொதுவுடைமைவாதிகளுக்கு. சீனாவுக்கும் அதே நிலைதான். காலம் கனியும். சீனா எங்களை ஏற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; இந்தச் சூழலில் ஈழ மக்களும் விடுதலைப்புலிகளும் செய்ய வேண்டியவை என்னென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt; நம்பிக்கையே வாழ்வு. ஈழத் தமிழர் விதிவிலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.:&lt;/strong&gt; தமிழீழம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சச்சிதானந்தன்:&lt;/strong&gt; எட்டுகின்ற தொலைவில்தான்..!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=86cc2f4f-53be-448b-b3a8-a3eba521663c&amp;amp;CATEGORYNAME=TCHN"&gt;சென்னை ஆன்லைன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-8222114962518246185?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/8222114962518246185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=8222114962518246185' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/8222114962518246185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/8222114962518246185'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2009/12/blog-post_9857.html' title='எட்டும் தொலைவில் தமிழீழம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-4426491761821581037</id><published>2009-12-24T12:57:00.001+05:30</published><updated>2009-12-24T13:31:06.250+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இ-நேர்காணல்'/><title type='text'>ஒலி இதழ்: 'பிரைம் பாயின்ட்' சீனிவாசனுடன் இ-நேர்காணல்</title><content type='html'>&lt;div style="float: left; margin: 0pt 5px 0pt 0pt;"&gt;&lt;img alt=" ஒலி இதழ்: 'பிரைம் பாயின்ட்' சீனிவாசனுடன் இ-நேர்காணல்" class="imgbor fl mr" src="http://www.newsonweb.com/newsimages/April2009/e23db538-3fc8-4319-8f75-54a1e93eea421.jpg" title="ஒலி இதழ்: 'பிரைம் பாயின்ட்' சீனிவாசனுடன் இ-நேர்காணல்" /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.poduniversal.com/" title="www.poduniversal.com"&gt;பாட்யூனிவர்சல்&lt;/a&gt; என்ற ஒலி இதழின் ஆசிரியர் 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன். புகழ்மிகு அறிஞர்கள் பலருடன் தொலைபேசி வழியே உரையாடி, அதனைப் பதிந்து, தன் தளத்தில் வெளியிடுகிறார். அவரைச் &lt;a href="http://www.chennaionline.com/tamil" title="http://www.chennaionline.com/tamil"&gt;சென்னை ஆன்லைன்&lt;/a&gt; தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை (Chat) வழியே நேர்கண்டார். இந்த உரையாடலில், ஒலிப்பதிவுகள் (பாட்காஸ்ட்) தொடர்பான பல்வேறு செய்திகளைச் சீனிவாசன் பகிர்ந்துகொண்டார். அந்த இ-நேர்காணல் இதோ இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: பாட்காஸ்ட் என்பதைத் தமிழில் இணையவழி ஒலிபரப்பு எனலாமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: நான் அதை இணைய ஒலி இதழ் என்று கூறியும் எழுதியும் வருகிறேன். இது ரேடியோ போன்று ஒலிபரப்பு இல்லை. ரேடியோவில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் கேட்க முடியும். ஆனால், பாட்காஸ்ட்டை எந்த நாளும், எந்த நேரமும் கேட்கலாம். 2006ஆம் ஆண்டு நான் வெளியிட்ட இணைய ஒலி இதழகளை இன்றும் கேட்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: பாட் மாகசைன் என்பதை அவ்வாறு கூறலாம். பாட்காஸ்ட் என்பது வெப்காஸ்ட், பிராட்காஸ்ட், டெலிகாஸ்ட் என்பது போல் ஒரு செயலைத்தானே குறிக்கிறது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: நான் இதுவரை அதற்கான் தமிழ் வடிவத்தைப் பார்க்கவில்லை. நான் பாட் மாகசைன் என்று தான் கூறி வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: சரி, இந்த ஒலி இதழ் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: ஜூன் மாதம் 2006இல், நான் பிளாக் காம்ப் போயிருந்தேன். அப்போது தான் முதன் முறையாக பிளாக் என்றால் என்ன என ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்த்தேன். அந்த UnConference, பல இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். நான் ஒருவன் மட்டும் தான் வயதானவன். எல்லோரும் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்கள். அப்போதுதான், எனக்கு பிளாக் மேல் ஆர்வம் வந்தது. நான் அடுத்த நிலைக்குப் போகலாம் என்று தீர்மானித்தேன். பிளாகின் அடுத்த நிலை பாட்காஸ்ட்தான். கிட்டத்தட்ட 2005 முதல் தான் பாட்காஸ்ட் பிரபலமாக ஆரம்பித்தது. உடனே, பாட்காஸ்ட் பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்தேன். பாட்பசார் (podbazaar) என்கிற இணையதளத்தில், நிறைய இந்தியர்கள் பாட்காஸ்ட் துவங்க ஆரம்பித்திருந்தார்கள். இதை அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய தம்பதியினர் நடத்துகிறார்கள். இதன் தலைவர், சுஜாதாவின் அறிமுகம் கிடைத்தது. அவரையே முதன்முதலில், gizmo மூலம் ஒரு பேட்டி கண்டு அதை அவர்கள் தளத்தில் வெளியிட்டேன்.&amp;nbsp; இது தான் என் முதல் பாட்காஸ்ட் (&lt;a href="http://www.podbazaar.com/dashboard/144115188075856257" title="http://www.podbazaar.com/dashboard/144115188075856257"&gt;http://www.podbazaar.com/dashboard/144115188075856257&lt;/a&gt;) 2006 ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: gizmo என்பது என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: gizmo என்பது skype மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஒலிப் பதிவுக்கு நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள்கள், கருவிகள் பற்றிச் சொல்ல முடியுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: ரிகார்டிங்கிற்கு, ஒரு mp3 ரிகார்டர் வைத்துள்ளேன். அதில் நேரடியாக ரிகார்ட் செய்யலாம். மேலும் டெலிபோன் மூலம் ரிகார்ட் செய்கிறேன். இப்போது, audacity என்கிற மென்பொருளை உபயோகப்படுத்துகிறேன். சில சமயம் மொபைல் போனிலும் ரிகார்ட் செய்திருக்கிறேன். அனைத்தையும் audacity மூலம்தான் எடிட் செய்து, music ஐ மிக்ஸ் செய்து வெளியிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: இதுவரை எவ்வளவு ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: ஜூலை 2006இல் பாட்பசார் (Podbazaar) தளத்தில் பாட்காஸ்டுகளை வெளியிடத் தொடங்கினேன். செப்டம்பர் 2006 முதல் யூடியூபிலும் (YouTube) வெளியிடத் தொடங்கினேன். மார்ச்சு 2007 முதல் பிலிப் டிவியிலும் (Blip.tv) வெளியிட்டு வருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் இது வரை பாட்பசார் (Podbazaar) தளத்தில் 122 ஒலிப்பதிவுகளை (ஆடியோ மட்டும்) வெளியிட்டுள்ளேன். அவை 56,381 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. பிலிப் டிவியில் 72 ஒலிப்பதிவுகளை (ஆடியோவுடன் வீடியோவும்) வெளியிட்டுள்ளேன். அவை 42,679 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. யூடியூபில் 21 ஒலிப்பதிவுகளை (வீடியோ மட்டும்) வெளியிட்டுள்ளேன். அவை 38845 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. ஆக மொத்தம் 215 ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளேன். அவை 1,37,905 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: எத்தகைய ஒலிப்பதிவுகளை நேயர்கள் அதிகமாக விரும்புகிறார்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: பாட்யூனிவர்சல், சீரியஸான பாட்காஸ்டுகளை மட்டுமே வெளியிட்டு வருகிறது. இவையே எந்த நேரத்திலும் கேட்க ஏற்றவையாக இருக்கும். நாங்கள் எல்லா விஷயங்களிலும் ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;மதம், ஆன்மீகம் தொடர்பான 17 ஒலிப்பதிவுகள் 37,357 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. மொத்த டவுன்லோடுகளில் இவை 27.1%. இதே போன்று, டாக்டர் கலாம் மற்றும் அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடைய 26 ஒலிப்பதிவுகள் 36,470 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. மொத்த டவுன்லோடுகளில் இவை 26.4%. இவை அல்லாத இதர 172 ஒலிப்பதிவுகள் 64,078 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. மொத்த டவுன்லோடுகளில் இவை 46.5%.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவரங்களிலிருந்து நாங்கள் கண்டறிந்தவை, ஆன்மீக ஒலிப்பதிவுகளையும் கலாம் தொடர்பான ஒலிப்பதிவுகளையும் அதிகமாக விரும்புகிறார்கள் என்பதையே. இன்னொன்று, எங்கள் ஒலிப்பதிவுகள் இந்தியாவை மையமாகக் கொண்டிருப்பதால் இந்தியர்கள் அதிகமாக இவற்றைக் கேட்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பிராட்பாண்டு, 3ஜி ஆகியவற்றின் அறிமுகத்தினால் ஒலிப்பதிவுகளை இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் அதிகம் பேர் விரும்புவார்கள். 2010இல் ஒலிப்பதிவுகளுக்கான நேயர்கள் 5 மடங்கு அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: பிலிப் டிவி, யூடியூப் ஆகியவற்றில் வெளியிடுவதையும் ஒலிப்பதிவுகளாகக் கணக்கிடலாமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: நான் பாட்பசார், பிலிப் டிவி, யூடியூப் (podbazaar, bliptv, youtube) மூன்றையுமே பயன்படுத்துகிறேன். ஓடியோ, பாட்பீன் (odeo, podbean) ஆகியவற்றையும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், அவற்றை நான் கணக்கில் எடுக்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஆக, வீடியோ வடிவில் இருப்பதையும் ஒலிப்பதிவாக நாம் கணக்கிடலாம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: ஆமாம். ஆடியோ, வீடியோ இரண்டையும் கணக்கிடலாம். ஆடியோ வடிவம், ஒலிபரப்பிற்கு மிகவும் ஏற்றது. இதனை ஐபாடுகளிலும் டவுன்லோடு செய்யலாம். நான் www.poduniversal.com தளத்தில் இப்போது ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியைப் பற்றிய ஒலிப்பதிவினை ஒலி, ஒளி வடிவங்களில் அளித்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: தொலைபேசி வழி ஒலிப்பதிவு குறித்து விரிவாகச் சொல்லுங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: டாக்டர் கலாம் அவர்களை ஆறு முறை தொலைபேசியில் ரிகார்ட் செய்திருக்கிறேன். முதலில் அவர்கள் நேரத்தைத் தீர்மானித்த பிறகு, அவர்களது நம்பரை டயல் செய்வேன். நம் தொலைபேசியில் ஒரு ஜாக் இணைத்து, அதன் ஒரு பகுதியை என்னுடைய லாப்டாப்பில் செருகி விடுவேன். நம்முடைய பேட்டியைத் துவங்குமுன், எதிர் முனையில் இருப்பவரிடம் நாம் ரிகார்ட் செய்கிறோம் என்று தெரிவிப்பதுதான் மரபு. அவர்களது உரையாடலை audacityஇல் ரிகார்ட் செய்து விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: அப்துல்கலாம் உள்ளிட்ட பெரும் பிரமுகர்களை நேர்கண்டிருக்கிறீர்கள். அவர்கள் இந்த முயற்சியை எப்படி பார்த்தார்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: முதன் முதலில் டாக்டர் கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவி முடிந்து வந்தவுடன் அவருக்கு என்னுடைய ஆசையை தெரிவித்தேன், அவரை இண்டர்வியூ செய்ய வேண்டுமென்று. அபோது இமெயிலில், அவரைப் பற்றி நான் ஏற்கெனவே செய்திருந்த ஒலிப்பதிவுகளை அனுப்பியிருந்தேன். அதையெல்லாம் அவர் பார்த்துவிட்டு, ஒரு நாள் மாலை திடீரென்று என்னுடைய மொபைலுக்கு போன் செய்து, பாட்காஸ்ட் பற்றிய முழு விவரங்களையும் சுமார் 20 நிமிடங்கள் கேட்டறிந்தார். எப்படி ரிகார்ட் செய்கிறேன், எந்த மென்பொருள் உபயோகப்டுத்துகிறேன் என்பது பற்றியெல்லாம் கேட்டறிந்தார். அதற்கு பிற்கு, அதே நாள் இரவு 8 மணிக்கு நேரம் கொடுத்தார். அப்போதுதான் அவரை முத்ல் முதலாக தொலைபேசியில் ரிகார்ட் செய்து வெளியிட்டேன். அண்மையில் கூட, தேர்தல் தொடர்பாக இளைஞர்களுக்கு என் பாட்காஸ்ட் வழியே தான் அறிவுரை வழங்கினார். அதை நான் தான், பத்திரிகைகளுக்குச் செய்தியாகக் கொடுத்தேன். பல பிரபலங்கள் என்னுடைய பாட்காஸ்ட்டைக் கேட்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: நீங்கள் நேர்கண்ட முக்கிய பிரமுகர்களில் சிலரைச் சொல்லுங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: டாக்டர் கலாம், டி. எஸ். கிருஷ்ணமூர்த்தி, விக்கிபீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், டாடா நிறுவனத்தில் இரண்டாம் நிலையிலுள்ள கிஷோர் சவுக்கர், பல எம்.பிக்க்ள், இந்தியா விஷன் நூலைக் கலாமுடன் இணைந்து எழுதிய டாக்டர் ஒய். எஸ். ராஜன், அணமையில், சிதம்பரம் மீது ஷூ வீசிய ஜர்னைல் சிங்கையும் அடுத்த தினம் மொபைலில் பேட்டி கண்டு வெளியிட்டேன்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;அ.க.: இன்னாரைப் பேட்டி எடுக்கலாம் என எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? பலரும் அறிஞர்களாய் இருக்கிறார்களே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: இது பாட்யூனிவர்சல். எந்த சப்ஜெக்டும் எடுக்கலாம். மனத்தில் தோன்றும் போது, உடனடியாக தொலைபேசியில் பேட்டி கண்டுவிடுவேன். பிரபலங்களில், இரா. செழியன், மற்றும் என். விட்டல் கூட என்னிடம் பேட்டி கொடுத்துள்ளார்கள். பல வெளிநாட்டுப் பிரபலங்களும் பேட்டி கொடுத்துள்ளார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: நேரில் பார்க்காமல் பேட்டி கொடுக்க மாட்டேன் என யாரேனும் சொன்னதுண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: இதுவரை அந்தப் பிரச்சினை வந்ததில்லை. இமெயில் அனுப்பினால், அவர்கள் உடனடியாக poduniversal தளத்திற்குச் சென்று பார்க்கிறார்கள். உடனடியாக ஒத்துக்கொண்டு விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: இத்தகைய ஒலிப் பதிவின் காப்புரிமை, பேட்டி கொடுத்தவர் - எடுத்தவர் இருவருக்கும் உரியதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: காப்புரிமை, பதிப்பாளருக்குத்தான் உண்டு. இந்தப் பேட்டிகள், பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் சார்பில் எடுக்கிறேன். ஆனால் நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. நல்ல விஷயங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது தான் என் ஆவல். பாட் யூனிவர்சலுக்கு கிரெடிட் கொடுத்து அதை யார் வேண்டுமானாலும் உபயோகிக்க அனுமதிக்கிறேன். பலர் என்னிடம் அனுமதி கேட்டு உபயோகிக்கிறார்கள். பல சமயங்களில், பாட் யூனிவர்சலில் வந்தவுடன், மெயின் லைன் மீடியாக்களும் பிக் அப் செய்கின்றன. உதாரணம், அண்மையில் தேர்தல் தொடர்பாக, கலாம் கொடுத்த பேட்டி, இந்தியா முழுவதும் வெளிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஒலிப்பதிவின் கால எல்லை அனைத்தும் 10 - 12 நிமிடங்கள் என இருக்கிறதே? இது திட்டமிட்டதா? அதற்குள் முடித்துவிடுவீர்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: இண்டர்நெட்டில், இளைஞர்கள் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் கேட்க ஆர்வமாக இருக்க மாட்டார்கள். பத்து நிமிடத்தில் இருந்தால், கேட்பதற்கு ஆர்வம் வரும். அதனால் தான், நான் 15 நிமிடங்களுக்கு மிகாமல் செய்வேன். சில சமயங்களில், சில பிரபலங்களின் பேட்டிகூட இருந்தாலும் கேட்பார்கள். அண்மையில் நான் வெளியிட்ட எஸ். வி. சேகர் பேட்டி, அதிகமான நேரம் இருந்தாலும், நிறைய பேர் கேட்டார்கள். இன்னும் கேட்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஒலிப் பதிவுகளை எப்படி திருத்துகிறீர்கள் (எடிட் செய்கிறீர்கள்)? இசை சேர்க்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: இண்டர்நெட்டில், இசைக்கும் காப்பிரைட் உண்டு. அதனால், திரு. ரங்கசாமி பார்த்தசாரதி அன்புடன் கொடுத்த இசையை நான் உபயோகிக்கிறேன். நான் முன்பு சொன்னபடி, அடாசிடியில் எடிட் செய்கிறேன். இது ஒரு ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;அ.க.: தொலைபேசியில் பேட்டி எடுக்கும்போது மின் தடை, பிற தடைகள் ஏற்பட்டதுண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: மின் தடை ஏற்பட்டாலும், தொலைபேசி வேலை செய்யும். இதை நான் லேப்டாப்பில் தான் ரிகார்ட் செய்கிறேன். அப்படி ரிகார்ட் செய்யும் போது, மெயின் பவரைத் துண்டித்து விடுவேன். மெயின் பவரில் ரிகார்ட் செய்யும் போது ஒரு 'ஹிஸ்' சவுண்டு வரும். அதைத் தவிர்க்க, பாட்டரியில் தான் ரிகார்ட் செய்கிறேன். அதனால், பவர் இல்லாவிட்டாலும், எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஆங்கிலத்தில் தொடங்கிய உங்கள் ஒலி இதழ் முயற்சி, தமிழுக்கு எப்போது வந்தது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: ஒரு வருடம் முன்பு தமிழில் &lt;a href="http://vetripadigal.blogspot.com/" title="http://vetripadigal.blogspot.com"&gt;'வெற்றிக் குரல்'&lt;/a&gt; என்கிற பெயரில் வெளியிடுகிறேன். இதுவரை ஆங்கிலத்தில் சுமார் 200 பாட்காஸ்ட் செய்திருக்கிறேன். தமிழில் 10 செய்திருக்கிறேன். தமிழில் இதுவரை, எனக்குத் தெரிந்தவரை யாருமே, பாட்காஸ்ட் செய்யவில்லை. தமிழில், நிறைய பாட்காஸ்ட் வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: அப்படி இல்லை... தமிழ் சிஃபியில் நான் தமிழில் ஏராளமான ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளேன். பேச்சுகள், பேட்டிகள், பாடல்கள், கவிதை வாசிப்பு... என விதவிதமாகப் பல்வேறு கருப்பொருள்களில் வெளியிட்டுள்ளேன். ஒலிப் பத்திகளைத் (Audio Columns) தொடங்கினேன். நா.கண்ணன்(கொரியா), ஆர்.எஸ்.மணி (கனடா), ரமணன் (விசாகப்பட்டினம்), பெங்களூரிலிருந்து ஷைலஜா, நாகி நாராயணன், சென்னையிலிருந்து சுகதேவ், குடவாயில் சகோதரிகள்... எனப் பலரும் அதில் பங்கேற்றார்கள். அறிஞர் அண்ணாவின் 18 சொற்பொழிவுகள், 15.8.1947இல் நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற போது நேரு ஆற்றிய உரை, ராஜாஜியின் உரை, எழுத்தாளர் ஜெயகாந்தனின் பேட்டி, விமலா ரமணியின் 3 மணிநேர வானொலிப் பேட்டி ஆகியவற்றை வெளியிட்டுள்ளேன். இசை ஆல்பமும் வெளியிட்டோம். சென்னை ஆன்லைன் தளத்தில் திருப்பாவையின் அனைத்துப் பாடல்களையும் ஒலி வடிவில் கேட்கலாம். பலரின் பேட்டிகளையும் கேட்கலாம். இதன் ஆறாம் திணை இணையதளத்தில் செய்திகளை ஒலி வடிவில் வழங்கி வந்தார்கள். தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையதளத்தில் பல ஒலிக் கோப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிலரும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: அதற்குத்தான் நான் சொன்னேன். எனக்குத் தெரிந்தவரை என்று. பலர் செய்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஒலிப் பதிவை வணிக ரீதியில் பயன்படுத்தும் உங்கள் முயற்சிகளை விவரிக்க முடியுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: பாட்காஸ்ட்டில் கார்ப்பொரேட் பாட்காஸ்ட் என்று வந்துவிட்டது. பாட்காஸ்ட் ஒரு மார்க்கெட்டிங் டூல். அது நெட்டில் இருப்பதால், கூகுள் சர்ச்சில் வருவது எளிது. பல பன்னாட்டு நிறுவனங்கள் கார்ப்பொரேட் பாட்காஸ்ட் த்யாரித்து வெளியிடுகிறார்கள். அநத கார்ப்பொரேட் பாட்காஸ்ட் தயாரித்துக் கொடுக்கும் முயற்சியிலும் தற்போது இறங்கியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: கார்ப்பொரேட் பாட்காஸ்ட் என்றால் என்ன? இதற்கு அவர்கள் கட்டணம் செலுத்துகிறார்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: கார்பொரேட் பாட்காஸ்ட் என்பது, கம்பெனிகள், தங்களுடைய நிறுவனங்களைப் பற்றியோ அல்லது தங்களது பிராடக்ட் பற்றியோ ஒரு விளம்பரப் படம் எடுப்பது போல், பாட்காஸ்ட் செய்து விடலாம். அதைப் பற்றிக்கூட நான் &lt;a href="http://corporatepodcast.blogspot.com/" title="http://corporatepodcast.blogspot.com"&gt;http://corporatepodcast.blogspot.com&lt;/a&gt; என்கிற பிளாகில் எழுதியுள்ளேன். இது ஒரு மார்க்கெட்டிங் டூல். டாகுமெண்டரி தயார் செய்பவர்கள், அதற்கு சார்ஜ் செய்வதில்லையா? அதுபோல், கார்ப்பொரேட் பாட்காஸ்ட் தயாரிப்பதற்கும் சார்ஜ் செய்கிறேன். அது டாகுமெண்டரி தயாரிப்பதில் ஆகும் செலவில் மிக மிகக் குறைந்த அளவே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: இணையதளங்களில் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு வீடியோ, பிளாஷ், கிராபிக்ஸ்... போன்ற கவர்ச்சிகரமான முறைகள் இருக்கையில் ஒலிப்பதிவு எவ்வாறு அவர்களைக் கவரும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: அவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடனதல்ல. அவை அனைத்தும், complementary to each other.. தற்போது, சோஷியல் மீடியா பாப்புலராக வரும்போது, SEO பற்றியெல்லாம் பேசுகிறோம். இது சோஷியல் மீடியா வகையைச் சார்ந்த்து. கூகுள் சர்ச்சில் சீக்கிரம் வந்துவிடும். ஆனால், பிளாஷ் அப்படி வருவதாக எனக்குத் தெரியவில்லை. அனைத்தும், ஒன்றுக்கு ஒன்று துணையானது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், சோசியல் மீடியா அபரிமிதமான அளவு வளர்ச்சி அடைந்து விடும். இது இளைஞர்களூக்கான மீடியா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: நீங்கள் தயாரிக்கும் காப்பொரேட் பாட்காஸ்ட், அந்த நிறுவனங்களின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்குமா? உங்கள் இணையதளத்தில் இடம் பெற்றிருக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: அவர்களது இணைய தளத்திலும் வெளியிடுவார்கள். என்னுடைய தளத்திலும் போடுவேன். விளம்பரத்திற்குப் பல யுக்திகள் உண்டு. எந்த யுக்தியால் அல்லது டூலால் வியாபாரம் ஆகியது என்று கண்டுபிடிக்க முடியாது. அனைத்து டூல்களையும் உபயோகிக்க வேண்டும். பாட்காஸ்ட்டும் ஒரு முக்கியமான, இளைஞர்களைக் கவரக்கூடிய சாதனம். டாகுமெண்டரி பிலிம் பண்ணுகிறார்கள். அதற்குச் செலவு அதிகம். பாட்காஸ்ட்டில் செலவு மிகவும் மிகவும் குறைவு. ரீச் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: எடுத்துக் கொடுத்த பிறகு அது, நிறுவனங்களின் உரிமைப் பொருளாகிவிடுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: அந்தப் பிரச்சனை இதுவரை எழவில்லை. தற்போது, என்னுடைய கஸ்டமர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகச் செய்து கொடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: நேரடியாக இணையதளத்தில் மட்டும் கேட்காமல், எம்பி3 வடிவில் தரவிறக்கவும் வாய்ப்பளித்துள்ளது ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: பல இடங்களில் பிராட்பேண்ட் சரியாக இருக்காது. கேட்பதற்கு பிராட்பேண்ட் வேண்டும். அது சரியாக இல்லையேன்றால், பதிவிறக்கம் செய்து கேட்க வசதி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஒருவரைப் பேட்டி எடுப்பதன் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருடன் உரையாட முயன்றதுண்டா? (கான்பிரன்ஸ் கால்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: இதுவரை முயற்சி செய்ததில்லை. இதனைச் செய்ய வாய்ப்பு உண்டு. அதன் தொழில் நுணுக்கங்களைச் சரியாக அறிந்துகொள்ள் வேண்டும். தேவைப்பட்டால் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஒலி இதழ், வணிக ஒலிப்பதிவு குறித்துப் பயிற்சி அளிக்கும் திட்டம் உண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: என்னிடம் வந்து கேட்பவர்களுக்கு என் அனுபவத்தை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்துகொள்கிறேன். பல விஷயங்கள், நான் என் அனுபவத்தில் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டேன். அதைக்கூட கேட்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். என்னுடைய ஆசை பலர் பாட்காஸ்ட் செய்ய வேண்டும் என்பது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: நல்ல பாட்காஸ்டுகளை, இப்போது போன்று தரமான பாட்காஸ்டுகளை வெளியிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஒலிப்பதிவினைப் பேட்டி எடுக்க மட்டும் பயன்படுத்துகிறீர்களே, உங்கள் சொந்தப் பேச்சினைப் பதிய முயலவில்லையா? உங்கள் சொந்தக் கருத்துகளைப் பேசலாம் இல்லையா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: நான் தொலைக்காட்சிகளில் அளித்த பேட்டிகள், நான் சில சமயங்களில் பேசிய பேச்சுகள், சிலவற்றை வெளியிட்டுளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: மற்றவர்களைப் பேட்டி எடுப்பதை விட நாம் பேசி வெளியிடுவது, மிக எளிது இல்லையா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: இன்றும், நான் இமயம் டி.வியில் பேசிய attitude பற்றிய ஒலி இதழ் அதிக அளவில் கேட்கப்படுகிறது. அது தமிழ்ப் பேச்சு.&amp;nbsp; நாமே பேசி வெளியிடுவது சுலபம். இருந்தாலும், நாமே பேசிக்கொண்டிருந்தால, யார் கேட்பார்கள். ஒன்று அல்லது இரண்டு சரி. அறிஞர்கள், பிரபலங்களின் பேட்டிகளை விரும்புவார்கள். பல தரப்பட்ட கருத்துகளையும் கொடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: அது சரி. ஊக்கம் மிகுந்த தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். அன்புகூர்ந்து பதில் அளித்தமைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீனிவாசன்: மிக மிக நன்றி. என்னுடைய கருத்துகளைக் கேட்டதற்கு. ஜெய் ஹிந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: :-) வந்தே மாதரம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-weight: normal;"&gt;நன்றி: &lt;a href="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=b5bc2375-741e-4676-a598-a9fba52e5b58&amp;amp;CATEGORYNAME=TTN"&gt;சென்னை ஆன்லைன் &lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-4426491761821581037?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/4426491761821581037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=4426491761821581037' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/4426491761821581037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/4426491761821581037'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2009/12/blog-post_24.html' title='ஒலி இதழ்: &apos;பிரைம் பாயின்ட்&apos; சீனிவாசனுடன் இ-நேர்காணல்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-1311522659471385097</id><published>2009-12-24T12:55:00.001+05:30</published><updated>2009-12-24T13:32:07.463+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இ-நேர்காணல்'/><title type='text'>'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல்: பகுதி 3</title><content type='html'>&lt;div style="float: left; margin: 0pt 5px 0pt 0pt;"&gt;&lt;img alt=" 'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல்: பகுதி 3" class="imgbor fl mr" src="http://www.newsonweb.com/newsimages/July2009/8613a8ac-d791-4e48-bdb4-d74f984c5d1a1.jpg" title="'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல்: பகுதி 3" /&gt;&lt;/div&gt;&lt;em&gt;தமிழ் மரபு அறக்கட்டளை (&lt;a href="http://www.tamilheritage.org/" title="http://www.tamilheritage.org"&gt;http://www.tamilheritage.org&lt;/a&gt;) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (சுபாஷினி டிரெம்மல்), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி - ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல், ஜெர்மனியில் வசிக்கிறார். &lt;span class="IL_AD" id="IL_AD5"&gt;Hewlett Packard&lt;/span&gt; நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். இந்த அமைப்பின் பல்வகைப் பணிகள் குறித்து இந்த உரையாடல் அமைந்தது. அந்த இ-நேர்காணல் வருமாறு:&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=4ea614d5-c39a-41da-933a-fb7b65f91942&amp;amp;CATEGORYNAME=TCHN" title="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=4ea614d5-c39a-41da-933a-fb7b65f91942&amp;amp;CATEGORYNAME=TCHN"&gt;தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=96552ea9-3959-48cf-b1dc-619fdd2bbe0d&amp;amp;CATEGORYNAME=TCHN" title="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=96552ea9-3959-48cf-b1dc-619fdd2bbe0d&amp;amp;CATEGORYNAME=TCHN"&gt;தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;===============================================&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;&lt;a href="http://voiceofthf.blogspot.com/" title="http://voiceofthf.blogspot.com"&gt;மண்ணின் குரல்&lt;/a&gt; என்ற ஒலி (ஆடியோ) வலைப்பதிவு; &lt;a href="http://video-thf.blogspot.com/" title="http://video-thf.blogspot.com/"&gt;நிகழ்கலை&lt;/a&gt; என்ற ஒளி (வீடியோ) வலைப்பதிவு; &lt;a href="http://news-thf.blogspot.com/" title="http://news-thf.blogspot.com/"&gt;என்ன சேதி&lt;/a&gt; என்ற செய்தி வலைப்பதிவு; &lt;a href="http://image-thf.blogspot.com/" title="http://image-thf.blogspot.com/"&gt;Image Heritage&lt;/a&gt; என்ற நிழற்பட வலைப்பதிவு ஆகியவற்றைக் குறித்து விளக்குங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வெளியிடப்படும் பதிப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படியாகக் கொண்டவை. இதனைத் தவிர்த்து, பல்வேறு தனித் தனி விஷயங்கள் பார்வைக்கு வரும் பொழுது, அவையும் தமிழர் மரபு சார்ந்தனவாக இருக்கும் போது அதனையும் பதிப்பித்து வைக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் அவற்றையும் தொகுக்க ஆரம்பித்தோம். அதனை வலைப்பக்கத்தில் தனித் தனி பக்கத்தில் வைப்பதை விட வலைப்பூக்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைப் பதிப்பிக்க விரும்பினோம். அதன் அடிப்ப்டையில் தோன்றியவை தான் இந்த நான்கு வலைப்பூக்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; * மண்ணின் குரல் என்ற ஒலி (ஆடியோ) வலைப்பதிவு;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; * நிகழ்கலை என்ற ஒளி (வீடியோ) வலைப்பதிவு;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; * என்ன சேதி என்ற செய்தி வலைப் பதிவு;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; * Image Heritage என்ற நிழற்பட வலைப்பதிவு&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்குமே அதன் பெயரில் குறிப்பிட்டுள்ளது போல ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு,&amp;nbsp; தகவல் மற்றும் நிழல்கலை ஆகியனவற்றைப் பதிப்பிக்கப் பயன்படுத்தப்படும் வலைப்பூக்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;சொந்தத் தளம் வைத்திருக்கும் நீங்கள், மரபுசார் ஆக்கங்களைச் சேமிக்க, இலவசமாகக் கிடைக்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தியது ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: தமிழ்மணம் வலைப்பதிவர் குழுமத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் பற்றிய அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்ற காரணத்தால் இதனை ஆரம்பித்த போது எங்கள் சொந்தத் தளத்திலே இல்லாமல் blogger.com வழி எங்கள் பதிவுகளைப் பதிப்பிக்க ஆரம்பித்தோம். தற்போது&amp;nbsp; wordpress மென்பொருளை எங்கள் சர்வரில் இணைத்திருக்கின்றோம். இந்த நான்கு வலைப்பூக்களையும் படிப்படியாக இந்த மென்பொருள் வலைப்பூ பகுதிக்கு மாற்றும் செயல்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த மாற்றத்திற்குப் பின்னர் 4 வலைப்பூக்களும் எங்கள் சொந்தத் தளத்திலிருந்தே வெளியிடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு வலைப்பூக்களில் 'மண்ணின் குரல்' சற்று மாறுபட்ட ஒன்று. ஏனைய மூன்று வலைப்பூக்களிலும் அவ்வப்போது தகவல்கள் கிடைக்கும் போது மட்டுமே செய்திகள் பதிப்பிக்கப்படுகின்றன. ஆனால் 'மண்ணின் குரல்' வலைப்பூவில் தொடர்ந்து மாதா மாதம் புதிய வெளியீடுகளை வழங்கி வருகின்றோம். 2007ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு அன்று இந்த வெளியீட்டைத் தொடங்கினோம். இதுவரை தொடர்ந்து 2 வருடங்களுக்கு மேலாக பல வெளியீடுகளை இந்த வலைப்பூவின் வழி செய்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;என்னென்ன வகையான வெளியீடுகள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: 'மண்ணின் குரல்'&amp;nbsp; ஒலிப் பதிவுகளைத் தாங்கி வருகின்ற ஒரு பகுதி. தமிழர் மரபு சார்ந்த எல்லா வகையான விஷயங்களும் அவை பற்றிய செய்திகளும் தொகுக்கும் வகையில் இந்தச் செய்திகள் இருக்க வேண்டும் என்பதே எண்ணம். ஆக இந்தப் பதிப்புகளில் மொழி, இலக்கியம், வாய்மொழி இலக்கியம், வரலாற்றுச் செய்திகள், தத்துவ விளக்கம், பாரம்பரிய இசை, கர்நாடக இசை, சமையல் கலை, உழவர் வாழ்க்கை, கல்வெட்டுகள், நூல் விமர்சனம் எனப் பல வகைப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்படுகின்றன. உதாரணமாக:&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; * திரு.வி.க. பற்றிய சிந்தனைகள்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; * உழவர் வாழ்க்கை நிலை&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; * இப்போது பெரும்பாலும் வழக்கில் இல்லாத சில சமையல் குறிப்புகள்&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; * இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் குடி பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவு&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; * மதராச பட்டினத்தின் கதை&lt;br /&gt;&lt;br /&gt;எனச் சில தொடர் பேச்சுகளும் மாதா மாதம் வெளியிடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டுமன்றி தமிழ் மரபு தொடர்பான சமகால நிகழ்வுகளின் பதிப்புகளும் கூட இணைக்கப்படுகின்றன. இதன் வழி மரபு தொடர்பான பல்வகைப்பட்ட செய்திகள் உலக மக்களுக்கு இணையம் வழி வழங்க முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;இந்த ஆக்கங்களை எவ்வாறு திரட்டுகிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: மாதாமாதம் இந்தச் செய்திகளைத் திரட்டி வெளியிடுவது சுலபமான காரியம் அல்ல. சில தொகுப்புகளை நானே முழுப் பொறுப்பு எடுத்துக்கொண்டு சேகரித்து வெளியிடுகிறேன். உதாரணமாக நரசய்யா அவர்களுடனான பேட்டியை அவர் கனடாவில் இருந்த சமயத்தில் தொலைபேசி வழியாக பதிவு செய்தேன். அதே போல இன்னம்பூரான அவர்களது பேட்டி, முனைவர் லோகநாதன் அவர்களது பேட்டி, திருமதி நவனீதத்துடனான நாட்டுப்புறப் பாடல்கள் தொடர்பான தொகுப்பு, குமரனுடனான இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனது தமிழ்நாடு மற்றும் மலேசிய பயணங்களின் போதும் நான் நேரடியாகப் பேட்டிகளைப் பதிந்து வந்திருக்கின்றேன். உழவர்கள் வாழ்க்கைப் பற்றிய பேட்டி, ஓலைச் சுவடி அறிஞர் பேராசிரியர் மாதவனுடனான் பேட்டி போன்றவை சில உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஒலிப்பதிவுகளைச் செய்து அனுப்பி உதவுகின்றனர். உதாரணமாக தமிழ்த்தேனீயார், சந்திரசேகரன், கவியோகி வேதம் போன்றோர் எனக்கு அனுப்பி வைத்த பதிவுகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை மட்டுமன்றி, சிறப்பான சில தகவல்களை இணைய வானொலிகளில் கேட்கும் போது அவற்றையும் பதிவு செய்து வெளியிடுகின்றோம். இப்படி ஒரு கூட்டு முயற்சியாக இந்தப் பதிவுகள் மாதா மாதம் வெளிவருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் சேர்ந்து இவ்வகைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் அவா. தமிழர் கலை கலாச்சார பண்பாட்டுத் தகவலகள் ஏராளமானவை இருக்கின்றன. படிப்படியாக நகர்ப்புற வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பழங்கலைகளின் சுவடுகளை அழித்து வருகின்றன. இது முற்றிலும் தடுக்கப்பட முடியாத ஒன்று. ஆனால் அதனைப் பாதுகாத்து நமது அடுத்த சந்ததியினருக்கு வழங்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. உதாரணமாக வாய்மொழி இலக்கியங்களான தாலாட்டுப் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு, கும்மி, அம்மானை போன்றவை, கிராமிய விளையாட்டுகள், நாடகக் கூத்துக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், சிலா ஆட்டம் போன்றவை அயல் நாடுகளுக்குக் குடி பெயர்ந்து விட்ட தமிழர்களில் பலருக்கு புதிதான ஒன்றே. இக்கலைகள், அதன் நுணுக்கங்கள் போன்றவற்றின் தகவல்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஒரு இனத்தின் முக்கிய அம்சங்கள் அந்த இனத்தின் பண்பாட்டு விழுமியங்கள். வரலாற்று விஷயங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு வைக்கப்படும் போதே அந்த இனத்தின் சிறப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆக, தமிழ் இனத்தின் சிறப்புகளை, சிந்தனை ஆழத்தை, பண்பாட்டுக் கூறுகளை, கலைகளின் பெருமிதத்தை நாம் சுலபமாகக் கருதி விட்டு விடாமல், அதன் சுவடுகள் மறக்கப்படும் முன்னர் அவற்றைத் தக்க முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும். இந்தக் கலைகள் வருங்காலங்களில் வழக்கில் இல்லாமல் போனாலும் இவை இருந்ததற்கான அடையாளங்களாவது இவ்வகை மின்பதிப்புகளின் வழி பாதுகாக்கப்படும்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;பொதிகை, சன், ஜெயா, கலைஞர், ஸ்டார் மூவீஸ் தொலைக்காட்சிகள், ஆஹா எப்.எம், குமுதம்.காம்.... என வெவ்வேறு நிறுவனங்களின் உள்ளடக்கங்களைத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். இதில் காப்புரிமைச் சிக்கல்கள் எழவில்லையா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: தமிழ் மரபு அறக்கட்டளை முடிந்த வரை சுய தயாரிப்புகளை வெளியிடுவதில் தான் ஆர்வம் காட்டி வருகின்றோம். சில வேளைகளில் தமிழர் மரபு தொடர்பான விஷயங்களைக் காண நேரிடும் போது அவற்றை இணைத்து வைப்பது தமிழ் மக்களுக்குப் பயன்படும் என்று கருதும் போது நாங்கள் பிற தொலைக்காட்சி விஷயங்களையும் பதிவு செய்து வெளியிடுகின்றோம். அப்படி செய்யும் போது தயாரித்து வெளியிட்ட நிறுவனத்திற்கு நன்றி என்று எங்கள் வலைப்பகக்த்தில் குறிப்பிடுவதோடு அவர்களுக்கு நாங்கள் கடிதமும் அனுப்பி விடுகின்றோம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;&lt;a href="http://www.chennaisangamam.com/" title="http://www.chennaisangamam.com"&gt;சென்னை சங்கமம்&lt;/a&gt; , &lt;a href="http://www.makkal.tv/culturetamil.aspx" title="http://www.makkal.tv/culturetamil.aspx"&gt;மக்கள் தொலைக்காட்சி&lt;/a&gt; போன்றவை இந்த முயற்சியில் தீவிரமாக இருப்பதைக் கவனித்தீர்களா? இவர்களின் உள்ளடக்கங்களைப் பெற்று வெளியிடவோ, அந்தத் தரவுகளை உங்கள் தளத்தில் பிரதிபலிக்கச் செய்திடவோ ஏதும் முயற்சிகள் மேற்கொண்டீர்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சுபா: இவை வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள். பலரும் இவ்வகை முயற்சிகளில் ஈடுபட்டால்தானே தமிழர்கள் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் மிகப் பெரிய தகவல் வங்கிகளை நாம் இணையத்தில் உருவாக்க முடியும்.&amp;nbsp; ஏனைய வலைப்பக்கத்தில் உள்ள ஒரே தகவலை மீண்டும் த.ம.அ வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு நாம் தொடர்பு ஏற்படுத்தி இணைத்து வைக்கலாம். அப்படி நாம் நமது இசைப் பகுதியில் செய்திருக்கின்றோம்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;யூ டியூப், கூகுள் வீடியோஸ் உள்ளிட்டவற்றின் சேவை, உங்களுக்கு எவ்விதம் பயன்படுகிறது? இவ்வளவு நிமிடங்கள் தான் வீடியோ இருக்கலாம் என்ற கட்டுப்பாடு, சிரமம் தருகிறதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சுபா: இல்லை. அப்படி எந்தக் கட்டுப்பாட்டும் வைத்து பதிவுகளைச் செய்ததில்லை. ஆனால் வீடியோ பேட்டிகள் மற்றும் ஒலிப்பதிவுகள் 30 நிமிடத்திற்குள் இருப்பவனவாக இருந்தால் அதனைப் பார்க்கின்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். ஆக, குறுகிய நேரப் பேட்டிகளைத் தான் வரவேற்கின்றோம். உதாரணமாக தொல்பொருள் ஆய்வாளர் சத்தியமூர்த்தி உடனான பேட்டிகளைச் சொல்லலாம். பேட்டிகள் அளவில் பெரிதாக ஆகும் போது அதனைப் பிரித்துப் பகுதிகளாக ஆக்கி வெளியிடுகின்றோம்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;கலை, பண்பாடு, இசை, இலக்கியம், தமிழர் மரபு தொடர்பான பல தரவுகள் நிறைய தளங்களில் இருக்கையில் அவற்றின் இடுகைகளை RSS feed மூலமோ, வேறு வகையிலோ தமிழ் மரபு அறக்கட்டளையின் தளத்தில் பிரதிபலிக்கச் செய்வது சாத்தியம்தானே?&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சுபா: இவை சாத்தியமே. முதல் இரண்டு பேட்டிகளில் நான் குறிப்பிட்ட ஒரு முக்கிய அம்சத்தை நாம் மீண்டும் நினைவுகூர வேண்டும். நமது வலைப்பக்கத்தை மேற்பார்வை செய்பவர் எண்ணிக்கை மிகக் குறைவு. எந்த ஊழியரும் இந்தத் தொண்டூழிய நிறுவனத்தில் முழு நேர அல்லது பகுதி நேர வேலையில் இல்லை, உடனுக்குடன் தொழில்நுட்ப மாற்றங்களையும் ஏனைய பிற வலைப்பக்கங்களுக்கான மாற்றங்களையும் செய்வதற்கு. ஆக நேரம் கிடைக்கும் வேளையில் ஓரிருவர் மட்டுமே இந்த வலைப்பக்க மேற்பார்வையைக் கவனிப்பதால் பல விஷயங்களை உடனுக்குடன் கவனிப்பதில் சிரமத்தை மேற்கொள்கிறோம். வலைப்பக்க மேம்பாடு என்பது ஒரு தொடர் நடவடிக்கை. ஆக, இப்படி பல்வேறு வெளியீடுகளை RSS feed வழி சேர்க்கத் தொடர்ந்து முயற்சி நடந்து வருகின்றது. நமது வலைப்பூக்கள் சிலவற்றில் RSS feed&amp;nbsp; இணைக்கப்பட்டு இவ்வகைச் செய்திகள் பிரதிபலிக்கின்றன.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;&lt;a href="http://groups-beta.google.com/group/minTamil" title="http://groups-beta.google.com/group/minTamil"&gt;மின் தமிழ்&lt;/a&gt; என்ற உங்கள் குழுமம், 700 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் குழுமத்தின் மட்டுறுத்துனர் என்ற முறையில் இடுகைகள், விவாதங்கள், மறுமொழிகள் ஆகியவற்றை மதிப்பிட முடியுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சுபா: இன்றைய எண்ணிக்கையின் படி 743 அங்கத்தினர்கள் மின் தமிழ் குழுமத்தில் பதிந்திருக்கின்றனர். இந்தக் குழுவின் மட்டுறுத்துனர்களாக நானும் முனைவர் நா.கண்ணனும் உள்ளோம். இருவருமே தொழில் அடிப்படையில் பல நாட்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதால் ஒருவருக்கு ஒருவர் எங்களைத் தயார்படுத்திக்கொண்டுதான் இந்த மட்டுறுத்தர் வேலையைச் செய்கின்றோர்.&amp;nbsp; விவாதங்கள் சில வேளைகளில் தனிப்பட்ட தாக்குதல்களாகச் சென்று விடும் நிலையையும் சில வேளைகளில் சந்தித்திருக்கின்றோம். தொடர்ச்சியாக ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் உணர்ச்சிப்பூர்வமாக மாறி, தனிப்பட்ட தாக்குதல்களாகவும் கூட மாறி விடக் கூடிய வாய்ப்பும் இந்தத் திறந்தவெளி கருத்துப் பரிமாற்றத்தில் ஏற்பட மிகப் பல வாய்ப்புகள் உண்டு. ஆக, சில குறிப்பிட்ட நபர்களின் செய்திகள் த.ம.அ யின் நோக்கத்திற்கு உட்பட்டதாக இல்லாத வேளையில் அந்த நபருக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பி விளக்குவோம். பலன் இல்லையானால் தேவையற்ற இடுகைகள அனுப்புபவர்களின் மின்னஞ்சல் முகவரியைத் தடை செய்து விடுவோம்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;மட்டுறுத்தல் என்பது ஒரு மிகப் பெரிய பொறுப்பும் கூட. மின் தமிழ் அங்கத்தினர் பலருக்கும் மின்பதிப்பாக்கம் என்பது பொதுவான ஒரு விருப்பமாக இருந்தாலும் அவரவருக்கு ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று உள்ளது. உதாரணமாக, சங்க இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள், கல்வெட்டுகளில், சிற்பங்களில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள், இசையில் மட்டுமே ஆர்வம், வைஷ்ணவ இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம், சைவ இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம், வரலாற்றுச் செய்திகளில் மட்டுமே ஆர்வம், நாடகத் துறையில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள் எனப் பிரிக்கலாம். ஆனாலும், பல்வேறு விருப்பம் உள்ள அனைவரையும் இணைக்கும் ஒரே நோக்கமாக மின்பதிப்பாக்கம் என்பது இருக்கின்றது. ஆக இந்தப் பல்வேறு வகைப்பட்ட ஆர்வத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக மின்தமிழ் இயங்கி வருகின்றது. இதனைச் சீராகப் பாதுகாப்பது, மட்டுறுத்துவது சுலபமான ஒன்றல்ல எனத்தை இந்த மடலாடற் குழு ஆரம்பித்த சமயத்திலிருந்தே பார்த்து அனுபவித்து வருகின்றோம்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;திருக்குறளை உரிய புகைப்படங்களுடன் வெளியிடுவதான 'பார்வையில் பட்ட குறள்' (http://image-thf.blogspot.com/2008/06/215.html) என்ற உத்தி நன்றாக உள்ளது. இது யாருடைய யோசனை?&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சுபா: இது த.ம.அறக்கட்டளையின் தலைவர் முனைவர் நா.கண்ணனின் யோசனை. இதனை அவரே மேற்பார்வை செய்து, பதிப்பித்தும் வருகின்றார்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;2009 ஜனவரி 1 அன்று நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதி(CMS)யில் என்னென்ன புதிய வசதிகள் உள்ளன?&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சுபா: இந்த உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதி, தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரங்களை முறைப்படுத்தி, திறம்பட பதிப்பிப்பதற்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. Content Management System எனப்படும் மென்பொருள், கடந்த சில ஆண்டுகளில் தகவல் மேற்பார்வை மற்றும் பதிப்பித்தல் பயன்பாட்டில் மிகச் சிறந்த மென்பொருளாக இருந்து வருகின்றது. முதலில் drupal&amp;nbsp; மென்பொருளைப் ப்யன்படுத்தியும் அதற்குப் பின்னர் joomla சரியாகப் பொருந்தும் என்றும் தீர்மானித்து இந்த மென்பொருளை நிறுவினோம். இதன் தமிழ் எழுத்துரு மோடூலை தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான சர்வேஸ்வரன் உருவாக்கி இருக்கின்றார். இந்த மோடூல் Tamil (Sri Lanka) என்ற பெயரில் Joomla Open Source&amp;nbsp; மென்பொருளாக உள்ளது. ஜூம்லா பயன்படுத்தும் அனைவரும் இந்த மென்பொருளை தங்கள் வலைத்தளங்களில் நிறுவி அதன் பயனைப் பெறலாம். &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;2009 ஜனவரி 1 அன்று வெளியான த.ம.அறக்கட்டளையின் இந்த உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியில் (Content Management System) தமிழ் மரபு சார்ந்த பதிப்புகள் எல்லாம் முறையாக தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் அனைத்து நடவடிக்கைகள், அறிவிப்புகள், வெளியீடுகள், நிகழ்ச்சித் தொகுப்புகள் எனப் பல்வேறு தரப்பட்ட விஷயங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதன் முகவரி: &lt;a href="http://thfcms.tamilheritage.org/" title="http://thfcms.tamilheritage.org/"&gt;http://thfcms.tamilheritage.org/&lt;/a&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;இந்தப் பக்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் படிப்படியான வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், கடந்த 8 ஆண்டுகள் உலகின் பல இடங்களில் நடைபெற்ற பற்பல சந்திப்புகள், நிகழ்வுகள் பற்றிய புகைப்படக் கூடம் ஒன்றும் உள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;முதுசொம் வளங்கள் என்ற தலைப்பில் என்னென்னவற்றைச் சேகரித்து வருகிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சுபா: இதுவே தமிழ் மரபு அறக்கட்டளையின் அனைத்து மின் பதிப்புகளையும் தாங்கி வரும் பகுதி. இந்த வளங்கள் பகுதியில் இதுவரை ஓலைச் சுவடிகள், புராணங்கள், தமிழ்ப் பெரியார்கள், சித்த மருத்துவம், தமிழ் அமைப்புகள், கலைகள், தத்துவ விசாரணை, புலம் பெயர்வு, வரலாறு, தமிழின் அழகு, உழவுத் தொழில், தமிழ் எழுத்தாளர்கள், கல்வெட்டுகள் என்னும் தலைப்புகளில் செய்திகள், கட்டுரைகள், ஒலிப்பதிவுகள், நிழற்படங்கள், காணொளிப் படங்கள் எனப் பல்தரப்பட்ட தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு தலைப்புக்கு உள்ளேயும் மேலும் சில கிளைப் பகுதிகள் உருவாக்கப்பட்டு தகவல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தமிழ் மரபு சார்ந்த எல்லா விதமான தகவல்களையும் படிப்படியாக இங்கு இணைத்து வெளியிட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம்.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம், தமிழர் வரலாற்றோடு சம்பந்தப்பட்டது. தமிழர் தம் மொழி, மரபு, கலை, பண்பாட்டு விஷயங்கள் கால ஓட்டத்தில் மறக்கப்படாமல் அவை மின்வெளியில் பதிப்பிக்கப்பட்டு இத்தகவல்கள் உலகத் தமிழர்களுக்கு கிடைக்கும் வகையில் செய்வதே எங்கள் எண்ணம்.&amp;nbsp; தமிழ் மொழியை வழக்கில் பயன்படுத்துவதையே தவிர்க்கும் பல தமிழர்கள், "எனக்குத் தமிழ் தெரியாது" என்று சொல்வதில் வெட்கப்படாத, கூச்சப்படாத பல தமிழர்கள் நம்மிடையே உள்ளனர். சிலர் விரும்பியே தமிழ்க் கலைகள், பண்பாட்டு மரபு விஷயங்களை ஒதுக்கிவிடுகின்றனர். ஒரு சிலர் தெரிந்து கொள்ள வாய்ப்புகளோ, வசதிகளோ இல்லாமல் இருக்கின்றனர். புலம் பெயர்ந்து அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கு ஆர்வம் இருந்தும் போதிய தகவல்கள் இல்லாததால் தமிழர் வரலாற்று விஷயங்கள், கலாச்சார விழுமியங்கள் படிப்படியாக வழக்கு ஒழிந்து மறக்கப்பட்ட ஒன்றாக ஆகி வருகின்ற நிலை காணப்படுகின்றது. ஆக, இதனை நிவர்த்தி செய்ய ஒரு மாபெரும் விழிப்புணர்ச்சி தேவை.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சிதிலமடைந்த ஆலயங்களை மற்றும் கலைக்கூடங்களைப் பேணிக் காப்பதில் பொறுப்புள்ள ஒரு சமுதாயம், அழிந்து வரும் பழம் நூல்களை மின்பதிப்பாக்கம் செய்து பாதுகாக்கும் ஒரு சமுதாயம், வாய்மொழிச் செய்திகளை வரலாற்று ஆவணங்களை தமது ஓய்வு நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேடி அதனைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வமிக்க ஒரு சமுதாயமாக நமது தமிழ் மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கலந்துரையாடலை வளர்ப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து முயன்று வருகின்றது.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி அரங்கமான 'மின்தமிழ்' மடலாடற் குழு, இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கின்றது. அந்த வகையில் சில திட்டங்கள் வரையறுக்கப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. மின்நூல்கள், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவுகளோடு மேலும் எவ்வாறு&amp;nbsp; சிறந்த&amp;nbsp; மின்பதிப்பாக்கங்களை உருவாக்கலாம் என்ற வகையில் ஆய்வும் கலந்துரையாடலும்&amp;nbsp; தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.&amp;nbsp; நிழல் வெளியில் தமிழ் மரபு சார்ந்த விஷயங்கள் தமிழ் மொழி, தொன்மை, பண்பாடு, மற்றும் கலை - கலாச்சார அம்சங்களின் மேல் காதல் கொண்ட அனைவருக்கும் பயன் பெற வேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டமாக அமைகின்றது.&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;அண்ணா: &lt;strong&gt;தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டங்கள் அனைத்தும் முழு வெற்றி பெற வாழ்த்துகள். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;சுபா: இந்தப் பேட்டிகளின் வழி பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கங்களை உங்கள் இதழின் வாசகர்கள் தெரிந்து கொள்ள் வழி ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கும், இந்தப் பேட்டிகளைப் பிரசுரிக்கும் "சென்னை ஆன்லைன்"&amp;nbsp; குழுவினருக்கும்&amp;nbsp; தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் எனது நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=316d6593-2977-4111-a4bf-e46989549e80&amp;CATEGORYNAME=TCHN"&gt;சென்னை ஆன்லைன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-1311522659471385097?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/1311522659471385097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=1311522659471385097' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/1311522659471385097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/1311522659471385097'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2009/12/3.html' title='&apos;தமிழ் மரபு அறக்கட்டளை&apos; சுபா உடன் இ-நேர்காணல்: பகுதி 3'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-1380155457873431274</id><published>2009-12-24T12:51:00.000+05:30</published><updated>2009-12-24T12:51:03.379+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இ-நேர்காணல்'/><title type='text'>மின் நூல்கள்: சுபாஷினி டிரெம்மல் உடன் இ-நேர்காணல்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.newsonweb.com/newsimages/April2009/9dfe4b65-5cdd-47ff-a7e2-ef8114df42491.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.newsonweb.com/newsimages/April2009/9dfe4b65-5cdd-47ff-a7e2-ef8114df42491.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;தமிழ் மரபு அறக்கட்டளை (&lt;a href="http://www.tamilheritage.org/"&gt;http://www.tamilheritage.org&lt;/a&gt;) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (சுபாஷினி டிரெம்மல்), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி - ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல், ஜெர்மனியில் வசிக்கிறார். Hewlett Packard நிறுவனத்தில் ஐடி கன்சல்டனாகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். இந்த அமைப்பின் மின்னூலாக்க பணிகள் குறித்து இந்த உரையாடல் அமைந்தது. அந்த இ-நேர்காணல் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://annakannan-interviews.blogspot.com/2009/06/blog-post.html"&gt;'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - முதல் பகுதி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழில் மின்னூல் உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியதன் நோக்கம் என்ன?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: பல அரிய தமிழ் நூல்கள் ஒரு முறை சுவடி நூல்களிலிருந்து அச்சுப் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட பின்னர் மறுபதிப்பிற்கு வருவதில்லை. இப்படி பல நூல்கள் நாள் செல்லச் செல்ல மறக்கப்பட்ட ஒன்றாகிப் போவதோடு அழிந்தும் விடுகின்றன. இவை மின்னாக்கம் செய்யப்படும் போது பாதுகாக்கப்படுவதோடு பயன்பாட்டிற்கும் கிடைக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் தமிழ் மொழி அறிந்தோர் தமிழகத்திலும் இலங்கையிலும் மட்டுமே இருந்த நிலை மாறி, தற்போது உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற நிலை உள்ளது. இதனைக் கவனிக்கும் போது தமிழ் மக்களின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கும் தமிழ் நூல்களை கிடைக்கச் செய்வது முக்கியமான ஒரு விஷயம். அதிலும் குறிப்பாக நூல்களை இணையத்தின் வழி வழங்குவது மிக முக்கியமான ஒரு செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாமல் இணையம் நூல்களை நிரந்தரப்படுத்தும் வழிகளை நமக்குத் தந்திருக்கின்றது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்வது அவசியம் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;நூல்களை இணையத்தில் நிரந்தரப்படுத்தல் என்பது மாயையோ என்ற ஐயம் ஏற்படுகிறது? நிரந்தரப்படுத்தும் நோக்கத்துடன் வந்த எவ்வளவோ இணைய தளங்கள் தடயமில்லாமல் அழிந்துள்ளதை அண்மைக் காலத்தில் நாம் பார்த்துள்ளோம்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒரு நூலை நாம் microfilm தொழில்நுட்பம் வழியும், இணையத்தில் கிடைக்கினற பல்வேறு வகைகளிலும் நிச்சயமாக நிரந்தரப்படுத்தலாம். தொழில்நுட்பம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பம் மாறும் போது அதற்கேற்றாற் போல இந்த இணையப் பதிப்புகளையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது ஒரு சங்கிலித் தொடர் போன்ற முயற்சி. ஆனால் எந்த வகையிலுமே எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்துவிட்டால் பல சிறந்த நூல்களை நாம் இழக்க நேரிடும். ஏற்கெனவே பல ஓலைச் சுவடி நூல்கள் மற்றும் பல பழம் நூல்களை நாம் இப்படி இழந்திருக்கின்றோம். உதாரணமாக பெரிய எழுத்து நூல்கள் என்ற 1930களில் வெளிவந்த சில பழம் நூல்களை த.ம. அறக்கட்டளை மின்பதிப்பு செய்தோம். இவ்வகை நூல்கள் இப்போது மறுபதிப்பு காண்கின்றனவா என்றால் கேள்வியே.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;ஹேக்கர், வைரஸ் போன்ற சிக்கல்களாலும் பல இணைய தளங்கள் அழிந்துள்ளனவே?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: ஆமாம்.  எல்லா இணைய பக்கங்களுக்கும் இவ்வகை பிரச்சனைகள் எழுவது இப்போது சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. இதனைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. த.ம.அறக்கட்டளை நமது வலைப்பக்க்த்திற்கு இப்போது சிறந்த பாதுகாப்பு மென்பொருளை இணைத்துள்ளோம். Authentication, login / password போன்ற விஷயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்துகின்றோம். அதோடு ஒவ்வொரு மாதமும் சர்வரின் முழு backup எடுத்து வைத்துக் கொள்கின்றோம். இப்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் தான் நாம் சர்வரை இவ்வகை பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;இத்தகைய இடர்ப்பாடுகள் இருக்கையில் நிரந்தரப்படுத்தல் என்பது மாயை தானே?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: திருடன் இருக்கின்றான் என்பதற்காக யாரும் விலையுயர்ந்த பொருளை வாங்குவதில்லையா? அது போலத்தான். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலில், நமக்கு (அதாவது தமிழ்ச் சமுதாயத்திற்கு) உள்ள பிரச்சனை என்பது பதிப்பிக்கப்படாமல் நூல்கள் மற்றும் பதிப்பிக்கப்பட்டு, ஆனால் மறுபதிப்பு காணாது அழிந்து வரும் நூல்களைப் பாதுகாப்பது என்பது. இதை நாம் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை வைத்து செய்து தான் ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, இணயத்தில் நூல்களை மின்பதிப்பாக்கும் போது அதனை எப்படி பாதுகாப்பது என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழல் இருக்கிறதே?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: கணினி தொழில்நுட்பம் அறிந்தோர் பாதுகாப்பு முறைகளையும் அறிந்தே இருக்கின்றனர். தற்போதெல்லாம் சிறந்த firewall, security மென்பொருட்கள் கிடைக்கின்றன. வலைபக்கத்தை நிர்வகிப்பவர்கள் இவ்வகை தொழிநுட்பத்தைக் கவனித்து அதற்கேற்றாற்போல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கணினி உலகில் ஒரு முக்கிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் நிரந்தரப்படுத்தினாலும் ஏதாவது ஒரு வகையில் அழிந்து விடுமே என நினைத்து எதையுமே செய்யாமல் இருந்தால் நமது வரலாற்றை பிரதிபலிக்கும் பல நூல்கள நாம் இழக்க நேரிடும். கணினி webmasterகள் எப்போதும் backup வைத்திருக்கும் சூழ்நிலையில் வலைப்பக்கம் பாதிக்கப்பட்டாலும் கூட மீண்டும் அதனை விரைவாகச் சரி படுத்திவிட முடியும். எங்களின் சில மின்பதிப்பாக்க முயற்சியின் போது சிதைந்த பல நூல்கள், அதாவது அச்சு வடிவத்தில் உள்ள நூல்களைக் காணும் அனுபவமும் கிடைத்தது. இதனைக் காணும் போது எவ்வளவு சீக்கிரம் பழம் நூல்களை நாம் மின்பதிப்பு செய்து இனையத்தில் பாதுகாக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நாம் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தான் மேலும் மேலும் வலுப்பெறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;மதுரைத் திட்டம், சென்னை நூலகம், நூலகம்.நெட், தமிழம்.நெட், தேவாரம்.ஆர்க் ஆகியவற்றிலிருந்து உங்கள் முயற்சி எந்த வகையில் வேறுபட்டது?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையில் முக்கியமாகக் கருதப்படுவது ஒரு நூலினை அல்லது ஓலைச் சுவடியை அப்படியே முழுமையாக மின்பதிப்பாக்கம் செய்வது. தட்டச்சு செய்தோ அல்லது பிற மாற்றங்கள் செய்தோ பதிப்பிக்கப்படுவது, த.ம. அறக்கட்டளையைப் பொறுத்தவரை அடுத்த நிலையிலேயே உள்ளது. புத்தகங்களின் ஒவ்வொரு பக்கங்களும் எந்த மாற்றமுமின்றி அப்படியே ஸ்கேன் செய்யப்பட்டு முழுமையாக html  கோப்புகளாகவோ அல்லது pdf கோப்புகளாகவோ நமது வலைப்பக்கத்தில் பதிப்பிக்கப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்ட ஏனைய இணைய முயற்சிகளும் தமிழ் நூல்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவையே. நமது எண்ணிலடங்காத் தமிழ் நூல்களை, தமிழர்களின் சிந்தனைக் கருவூலங்களைப் பலரும் சேர்ந்து முயன்றுதான் மினபதிப்பாக்கங்களாகக் கொண்டுவர முடியும். அதற்கு இந்த ஒரு சில முயற்சிகள் மட்டும் போதாது. மாபெரும் எழுச்சி ஏற்பட வேண்டும். குறிப்பாகப் பலகலைக்கழகங்கள், நூலகங்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் திட்டங்களை வகுத்து அதனைச் செயலாற்ற முடியும். கல்லூரி மாணவர்களையும் கூட இவ்வகைப் பணிகளில், ஆய்வுகளில் ஈடுபடுத்த முடியும். இதற்கு ஆர்வம் தான் தேவை. அந்த விழிப்புணர்ச்சியைத்தான் தமிழ் மரபு அறக்கட்டளை தனது மின் செய்தி அரங்கமான மின்தமிழ், இ-சுவடி, போன்றவற்றிலும் அவ்வப்போது நிகழ்த்தி வரும் கலந்துரையாடல்கள் வழியும் மற்றும் வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்த  தமிழகத்துக்கான பயணங்களின் போதும் செய்து வரும் களப்பணி, கருத்தரங்கங்கள், சந்திப்புக் கூட்டங்கள் வழி ஏற்படுத்தி வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;மின்னூல் உருவாக்கத்தில் ஒரே வேலையைத் திரும்பச் செய்யும் வாய்ப்புகள் உண்டா? நீங்கள் உருவாக்கிய அதே மின்னூலை வேறு யாரும் மீண்டும் ஆக்கியுள்ளனரா? அல்லது, வேறு யாரும் புரிந்த பணியை நீங்கள் மீண்டும் ஆக்கியுள்ளீர்களா? இவற்றைத் தவிர்க்க, மின்னூல் உருவாக்குவோரை ஒருங்கிணைக்க, ஒரு பொது அமைப்பு இருந்தால் நல்லது இல்லையா? அதற்கு ஏதும் முயற்சிகள் எடுத்துள்ளீர்களா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் எனக்குத் தெரிந்து ஒரே நூல் ஒரு முறைக்கு மேற்பட்டு மின்பதிப்பு செய்யப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாகத் தமிழ் மரபு அறக்கட்டளையில் ஓலைச் சுவடி மின்பதிப்பாக்கத்திற்கும் மிகப் பழைமையான நூல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. பழம் நூல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் முயற்சிகள் மிகக் குறைவு. நீங்கள் குறிப்பிடும்படி ஒரு பொது அமைப்பு இருப்பது உதவும்.ஆனால் யார் அந்த பொது அமைப்பை நிர்வாகிப்பது என்பதே பெரும் பிரச்சனையாகி விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ஆனாலும் இவ்வகை முயற்சி நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.. இணையத்தில் நூல் பதிப்பிக்கபப்ட்டிருந்தால் அதனைத் தமிழில் ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்து தேடு இயந்திரத்தின் வழியும் தேடிப் பார்க்க முடியும். அப்படி தேடும் போது மின்பதிப்பாக்கம் செய்ய விரும்பும் ஒரு நூல் ஏற்கெனவே செய்யப்பட்டிருந்தால் அதனைத் தெரிந்துகொள்ள முடியும். ஆக, இணையத்தில் மின்பதிப்பாக்கப்பட்ட மின்நூல்களின் database ஒன்று இருக்க வேண்டியது மிக மிக அவசியம். இதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;சம கால நூல்களையும் மின்னூல்களாக்க வேண்டிய தேவை இருக்கிறதே. இதற்கு உங்கள் திட்டத்தில் இடமுண்டா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: இது முக்கியமான ஒன்றும் கூட. ஆனால் இதில் பெரும்பாலும் காப்பிரைட் பிரச்சனை எழுவதற்கான வாய்ப்பு பெரிதாக இருப்பதால் நூலின் உரிமையாளர்களின் ஒப்புதல் கிடைக்கும் போது அதனை மின்பதிப்பு செய்து விட முடியும். இப்படித்தான் பெருங்கவிக்கோ அவர்களின் ஒரு நூல், சுத்தானந்த பாரதியாரின் ஒரு நூல என சில சமகால நூல்களை வெளியிட்டிருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;மின்னூல்களைப் படக் கோப்புகளாகச் சேமிப்பது சிறந்த வழியாகத் தெரியவில்லையே? இவற்றில் தேடும் வசதி இல்லை?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: மின்னூல்களைச் சேர்க்கும் போது அதை இணைக்கும் வலைப் பக்கத்தில் நூல் தொடர்பான keywords சிலவற்றைச் சேர்க்க வேண்டும். இது தேடுதலைச் சுலபமாக்கும். தேடும் வசதி என்பது தட்டச்சு செய்து பதிப்பிக்கும் நூல்களுக்குப் பயன்படுத்தலாம். jpeg படங்களாக அல்லது pdf நூலாக இணைக்கபடும் போது இந்த வசதி குறைகின்றது. ஆனால் இதனைப் போக்கச் சில வழிமுறைகள் உள்ளன. வடிவமைக்கப்படுகின்ற html பக்கத்திலேயே நூலைப் பிரதிபலிக்கும் keywords சேர்த்து விடலாம். இது ஓரளவிற்கு இந்தக் குறையைத் தீர்க்கக்கூடியது. இப்போது புதிதாக page turning என்று சொல்லப்படும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றின் வழி மின் நூல்கள் செய்யப்படும் போது தேடுதல் வசதியும் கிடைக்கின்றது. இதனை இப்போது சோதித்து வருகின்றோம். சோதனைக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை நமது மின் நூலாக்கத்தில் பயன்படுத்த உள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;வாசிப்பினைத் தூண்டும் விதமாக உங்கள் மின்னூல்களின் வடிவமைப்பு இல்லை; பக்கங்களைப் புரட்டும் வசதி, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் தாவிச் செல்லும் வசதி, பக்கக் குறியீடு (புக்மார்க்), அந்த நூலுடன் தொடர்புடைய நூல்கள் / பக்கங்களின் இணைப்புகள்,  வசதிகள் போன்றவை இல்லை. ஒரு பழைய நூலினை அர்த்தம் புரிந்து படிக்கத் தகுந்த அகராதி, கலைக் களஞ்சியம், உரைகள், தேடுபொறி போன்ற வசதிகள் இணைக்கப்படவில்லை. பக்கங்களை அப்படியே ஒளிவருடி மூலமாக்கும் போது பழைய நூல்களின் காகிதத் தரத்தின்படி பின்னுள்ள பக்கத்தின் எழுத்துகளும் தெரிகின்றன. நம் மின்னூல்களின் தரம், போதுமான அளவில் இல்லை. வடிவமைப்பில் அதிகாலை.காம் (Flipping Book Joomla Component Demo version), விகடன்.காம் ஆகியவற்றின் மின் மலர்களும் சில நல்ல வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இவை வண்ணத்திலும் உள்ளன. உங்கள் மின்னூல்களின் வடிவமைப்பினை மறு ஆய்வு செய்வீர்களா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: வாசிப்பினைத் தூண்டும் வகையில் நூல் இல்லை என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. பல்கலைக்கழககங்கள், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகளின் ஆன்லைன் வலைப்பங்கள் போன்றவற்றில் pdf முறை கொண்டு தயாரிக்கப்பட்ட மின்நூல்களின் பயன்பாடுதான் மிக அதிகம். உதாரணத்திற்கு ஆரக்கிள் மென்பொருள் வலையகத்தின் Document Libraryஐப் பார்த்தால் இது தெரியும். மின்னூல்கள் HTML மற்றும் pdf வகையில் செய்யப்பட்டு வெளியிடப்படுவது பரவலான ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம். Flipping book மற்றும் turning the page போன்ற புதிய மின்நூல் தயாரிப்பு முறைகள் இப்போது கணிசமாக மின் நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. இது கடந்த 3 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு மின் நூலாக்கத் தொழில்நுட்பம். turning the page தொழில்நுட்பத்தை British Library மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது. அதன் நூலக மின் நூல்கள் பல இந்தத் தொழில்நுட்பத்தின் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைக் கடந்த 2 மாதங்களாக த.ம. அறக்கட்டளைக் குழுவினரும் பயன்பாட்டிற்காக ஆய்ந்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மேலும் ஒரு விஷயம் - நீங்கள் குறிப்பிடும் உதாரண வலைப்பக்கங்களோ அல்லது ஏனைய உலகத் தரம்வாய்ந்த இணைய நூலகங்கள் போலவோ தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு வர்த்தக அடிப்படையிலான நிறுவனமோ அல்லது சிறந்த பொருளாதார பக்கபலம் உள்ள ஒரு நிறுவனமோ அல்ல. மாறாக, குறிப்பிட்ட ஒரு சிலர் அதிலும் குறிப்பாக ஏழு அல்லது எட்டு பேர் மட்டுமே தீவிரமாக ஈடுபட்டு இந்த மின்பதிப்பாக்கங்களைத் தங்களது சொந்த நேரத்தில், சொந்தச் செலவில் ஒரு தீவிரத்தன்மையோடு செய்து வருகின்றோம். ஆள் பலமும் பொருளாதார பலமும் சேரும் போது மேலும் பல தொழில்நுட்ப நுணுக்கங்களை நுழைத்து மின் நூல்களைச் சிறப்பாக உருவாக்க என்றுமே தமிழ் மரபு அறக்கட்டளை முயன்றுகொண்டே இருக்கும். அதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;உங்களின் &lt;a href="http://www.tamilheritage.org/uk/lontha/panasaiw/photo17.html"&gt;http://www.tamilheritage.org/uk/lontha/panasaiw/photo17.html&lt;/a&gt; இந்தப் பக்கத்தில் உள்ள ஒரு படக் கோப்பின் அளவு, 192.85 KB (1,97,480 bytes); அதே நேரம் &lt;a href="http://www.tamilheritage.org/uk/lontha/theerpu/theertha.html"&gt;http://www.tamilheritage.org/uk/lontha/theerpu/theertha.html&lt;/a&gt; இந்தப் பக்கத்தில் தீர்த்தகிரி புராணத்தின் 431 பாடல்களையும் தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளீர்கள். இதன் மொத்தப் பக்க எடை, 1,71,327 bytes. இப்படிப் படக் கோப்பாக இடும்போது உங்கள் சர்வரிலும் அதிக இடம் தேவை. வாசகர்களும் அதிகம் தரவிறக்கம் செய்ய வேண்டி இருக்கிறது. இதனைத் தவிர்க்கலாமே?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: பக்கங்களின் அளவு வேறுபடும். அதிலும் வர்ணத்தில் வெளியிடப்படும் போது பக்கங்களின் அளவு மேலும் கூடுகின்றது. இதனைப் போக்க பல்வேறு compression வழிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. வர்ணத்தைப் போக்கி கருப்பு - வெள்ளைப் பக்கங்களாக வெளியிடுகின்றோம். சர்வர் கொள்ளளவு என்பது தற்போதைய நிலையில் ஒரு பிரச்சனையில்லை. ஆனால் பக்கங்களின் அளவு என்பது ஒரு பிரச்சனையே. இதனைச் சரி செய்து சிறப்பான வகையில் மின் நூல்களை உருவாக்கத் தொடர்ந்து முயன்று வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அளவு குறைவாக இருக்கின்றதே என்பதற்காக தட்டச்சு செய்து வெளியிடுவது என்பது த.ம.அறக்கட்டளையின் நோக்கமில்லை. மாறாக நூலின் அசல் பாதிக்காதவாறு அந்நூலை அப்படியே முழுமையாக ஸ்கேன் செய்து சேர்ப்பதே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கம். தட்டச்சு செய்து நூலை வெளியிடும் போது பல எழுத்துப் பிழைகள் சேர்ந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் நூலின் originality பாதிப்படைகின்றது என்பதும் ஒரு முக்கிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தட்டச்சு செய்து நூலை வெளியிடும் போது பல எழுத்துப் பிழைகள் சேர்ந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது என்கிறீர்கள். இது தமிழின் அனைத்துப் பதிப்பகங்களுக்கும் இதழ்களுக்கும் இணைய தளங்களுக்கும் உள்ள சிக்கல். இதற்காகப் படக் கோப்பினை நாடுவது சரியில்லை. மெய்ப்பு (புரூப்) பார்க்கத் தகுந்தவர்களை உருவாக்குவதே சிறந்த வழியாய் இருக்கும் இல்லையா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: அப்படி சொல்லிவிட முடியாது. தமிழ் தவிர்த்து வேறு மொழிகளிலான, உதாரணத்திற்கு ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, லத்தீன், அரபு போன்ற மொழியிலான ஆன்லைன் ஆவண பாதுகாப்பு முயற்சிகள் பொதுவாக படக் கோப்பினை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவையே. ஆவணப் (நூல் இதில் அடங்கும்) பாதுகாப்பைச் செய்யும் முறைகள் வேறுபடும். அதில் ஒன்று, அந்த ஆவணத்தை அதன் வடிவம் மாறாத வகையில் முடிந்த அளவு அதன் அசலை அப்படியே பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சி. இரண்டாவது, அந்த ஆவணத்தின் உள்ளே உள்ள விஷயத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளச் செய்யும் முயற்சி. இது, தட்டச்சு செய்து பாதுகாப்பது. இதில் எது சிறந்தது எது சிறந்ததன்று என்ற கேள்விக்கு இடமில்லை. இவை இரு வேறுபட்ட ஆவணப் பாதுகாப்பு முயற்சிகள். இதனை அப்படித்தான் காண வேண்டும். தமிழ் மரபு அறக்கட்டளை பழம் நூல்களை மின்ன்னாக்கம் செய்யும் போது ஆர்வலர்கள் விரும்பி தங்களுக்குப் பிடித்த நூலைத் தட்டச்சு செய்தும் தருகின்றனர். உதாரணத்திற்கு நமது மின்னூல்கள் தொகுப்பில் உள்ள "எம்பெருமானாருடைய (ஸ்ரீராமாநுஜர்) திவ்விய சரிதம் என்னும் நூலை நமது மின்தமிழ் நண்பர் குமரன் மல்லி அவர்கள் தட்டச்சு செய்து கடந்த சில நாட்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக இப்படி தட்டச்சு செய்து சேர்க்கப்படும் வகையும் த.ம. அறக்க்கட்டளை வலைப்பக்கத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;த.ம.அ. மின்னூல்களை உருவாக்கும் விதங்களை விவரியுங்கள்...&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: த.ம.அ. வலைப்பக்கத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்கள் 2 முறைகளில் செயல்படுத்தப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முறையாகத் திட்டமிட்டு ஒரு திட்டத்தை வகுத்துச் சில பதிப்புகளை வெளியிட்டிருக்கின்றோம். உதாரணமாக பிரித்தானிய நூலகத்தோடு நாம் மேற்கொண்ட ஒரு திட்டத்தின் வழி சில குறிப்பிட்ட நூல்கள் மின்பதிப்பு கண்டன. இது ஒரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக உலகம் முழுதுமுள்ள பல தமிழ் ஆர்வலர்கள் மின்பதிப்பு செய்து வழங்கும் நூல்கள் மின் நூல்களாக உருவாக்கப்பட்டு சேர்க்கப்படுகின்றன. இவ்வகையில் நூல்களை வழங்குபவர்களின் பெயர்களும் த.ம.அ. வலைப்பக்கத்தில் சேர்க்கப்பட்டு மின் தமிழ் செய்தி அரங்கிலும் இச்செய்தியும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது. இப்பொது சென்னையிலும் த.ம. அறக்கட்டளைக்கு ஒரு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் இதுவரை 64 மின் நூல்களை உருவாக்கி இருக்கிறீர்கள். இன்னும் உள்ளனவா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: 64க்கும் மேற்பட்ட நூல்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை நமது வலைப்பக்கத்தில் பல பக்கங்களில் பார்க்கக் கிடைக்கின்றன. குறிப்பாக ebooks பகுதியில் 72 நூல்கள் பட்டியலில் இருந்தாலும் தமிழ் மரபு அறக்கட்டளை பல்வேறு திட்டங்களின் வழி உருவாக்கப்படும் மின் நூல்கள் வெவ்வேறு பக்கங்களில் உள்ளன. உதாரணத்திற்கு; பிரித்தானிய நூலகத் திட்டம், தலபுராணம் திட்டம் போன்ற பகுதிகளில் மேலும் பல நூல்களைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;மின்னூல்களை உருவாக்கும்போது உள்ள படிநிலைகளை விவரியுங்கள். இதற்கு உதவும் கருவிகள், மென்பொருள்கள் என்னென்ன?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: ஸ்கேனரின் வழி நூலைப் பதிவு எடுத்து, பின்னர் பொருத்தமான image editing மென்பொருள் கொண்டு பக்கங்களின் அளவைக் குறைத்து, சரி செய்து பின்னர் அவற்றை html அல்லது pdf writer வழி pdf நூலாக மாற்றுகின்றோம். இதில் மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஸ்கேன் செய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். ஸ்கேன் செய்யும் போது Resolution, வர்ணம் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள். 300 dpi Resolution வைத்து பக்கத்தை கருப்பு - வெள்ளை முறையில் ஸ்கேன் செய்து அதனை tiff formatல் முதலில் சேகரிக்கின்றோம்.  வர்ணத்திலோ அல்லது மிகக் கூடிய Resolution setting  பயன்படுத்தியோ செய்யும் போது  தனிப்பக்கங்களின் டிஜிட்டல் கோப்புக்கள் மிகப்பெரிய கொள்ளளவு பெறுவதால் இது மின்னூலாக்கத்தை பாதிக்கக் கூடும். ஆக ஸ்கேனிங் செய்யும் போதே இந்த விஷயங்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் உள்ள த.ம.அ. பணிக் குழுவை மேற்பார்வை செய்யும் டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் (திவா) அவர்கள் ஸ்டூடியோ பெட்டி ஒன்றினை இதற்காக உருவாக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;மின்னூல்களை உருவாக்கும் முறைகளையும் துணை புரியும் ஆர்வலர்களையும் குறிப்பிடுங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: உலகம் முழுவதிலுமிருந்து பல நண்பர்கள் மின்னாக்கப் பணிகளில் ஆர்வம் கொண்டு தங்களால் இயன்ற வகையில் உதவி வருகின்றனர். தற்போது சென்னையில் ஆர்வத்தோடு ஒரு குழு மின்னாக்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து மின்பதிப்பாக்கச் சந்திப்புகள் நடத்துவது, மற்றும் மின் பதிப்புச் செய்வது போன்ற அரிய தொண்டினை ஆற்றி வருகின்றனர். டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன், கிருஷ்ணமாச்ச்சாரியார் (தமிழ்த்தேனீ), தேவராஜன், சந்திரசேகரன், ராமதாஸ், யுவராஜன், சுகுமாரன், திரு.ஆண்டோ பீட்டர் போன்றோர் இந்தப் பணிக் குழுவின் நடவடிக்கைகளை ஆர்வத்தோடு தொடர்ந்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;இவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். திருமூர்த்தி வாசுதேவன் (திவா) உருவாக்கியுள்ள ஸ்டூடியோ பெட்டியைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் உருவாக்கியிருக்கும் மின்னாக்கக் கையேடு மற்றும் இதன் செயல்முறை விளக்க காணொளி (வீடியோ) ஆகியவை நமது வலைப்பக்கத்தில் உள்ளன. அவற்றை இங்கே காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னாக்கக் கையேடு -  &lt;a href="http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html"&gt;http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html&lt;/a&gt; (கீழே)&lt;br /&gt;காணொளி - &lt;a href="http://www.tamilheritage.org/media/video/digit/digi.html"&gt;http://www.tamilheritage.org/media/video/digit/digi.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;இந்த மின்னூல்களை இதுவரை எவ்வளவு பேர்கள் பார்த்துள்ளார்கள்? மாதாந்தர பக்க நோக்கு எவ்வாறு உள்ளது? இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: மின்னூல்களை வாசிப்பவர்கள் அல்லது இந்த பக்கங்களைச் சென்று காண்பவர்கள் எண்ணிக்கை என்பது மாறுபட்டுத்தான் இருக்கின்றது. சில மாதங்கள் இப்பக்கத்திற்குச் சென்று பார்ப்போரின் எண்ணிக்கை 8 அல்லது ஒன்பது என்ற வகையில் மிகக் குறைவாக இருக்கின்றது. சில சமயங்களில் 836 hits இந்த பக்கத்திற்குக் கிடைத்துள்ளது. சில சமயங்களில் 1072 hits கிடைத்துள்ளது. இது பல்வேறு காரணங்களினால் அமைவது. ஒரு மின்னூல் உருவாக்கப்பட்டு பதிப்பிக்கப்படும் விஷயம், மின்தமிழ் செய்தி அரங்கில் வெளிவரும் போது இப்பக்கத்திற்கான hits கூடுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தின் அதாவது http://www.tamilheritage.org வலைப்பக்கத்தின் hits ஏப்ரல் மாதம் 217,013 ஆகவும் மே மாதம் 177,383  என்பதாகவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;மின்னூல் உருவாக்கத்தில் தனியுரிம மென்பொருள்களை விடத் திறந்தமூல மென்பொருட்களை முயன்று பார்த்ததுண்டா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: ஆமாம். முடிந்த அளவு இவ்வகை மென்பொருட்களைத் தான் பயன்படுத்தி வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா: &lt;b&gt;டிஜிட்டல் லைப்ரரி, பிரிட்டிஷ் லைப்ரரி ஆகியவற்றுடன் இணைந்து த.ம.அ. மேற்கொண்ட திட்டங்கள் என்னென்ன?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா: டிஜிட்டல் லைப்ரரி திட்டத்தில் பங்கு பெற்றபோது நூல்கள், ஓலைச் சுவடிகள், காணொளி, ஒலிப் பதிவுகள் என மின்னாக்கப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. அவற்றை &lt;a href="http://bharani.dli.ernet.in/thf/index.html"&gt;http://bharani.dli.ernet.in/thf/index.html&lt;/a&gt; பக்கத்தில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல பிரிட்டிஷ் லைப்ரரியோடு தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்திய  திட்டம், சிறப்பான ஒன்று. காண்பதற்கு அரிய சில நூல்கள் இந்தத் திட்டத்தின் வழி மின்பதிப்பாக்கம் கண்டன.  &lt;a href="http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html"&gt;http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html&lt;/a&gt;  வலைப் பக்கத்தில் இந்தத் தொகுப்பினைக் காணலாம். இந்தத் திட்டம் மிகச் சிறந்த அனுபவமாகவும் எங்களுக்கு அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த அமைப்பின் ஒலி - ஒளிப் பதிவுகள் குறித்து உரையாடல் தொடரும்)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=96552ea9-3959-48cf-b1dc-619fdd2bbe0d&amp;amp;CATEGORYNAME=TCHN"&gt;சென்னை ஆன்லைன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-1380155457873431274?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/1380155457873431274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=1380155457873431274' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/1380155457873431274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/1380155457873431274'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2009/12/blog-post.html' title='மின் நூல்கள்: சுபாஷினி டிரெம்மல் உடன் இ-நேர்காணல்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-1190222609410649145</id><published>2009-06-02T18:06:00.002+05:30</published><updated>2009-12-24T13:33:11.671+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இ-நேர்காணல்'/><title type='text'>'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல்</title><content type='html'>&lt;div style="margin: 0pt 5px 0pt 0pt; float: left;"&gt;&lt;img alt=" 'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல்" title="'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல்" src="http://www.newsonweb.com/newsimages/April2009/9dfe4b65-5cdd-47ff-a7e2-ef8114df42491.jpg" class="imgbor fl mr" /&gt;&lt;/div&gt;&lt;p&gt;தமிழ் மரபு அறக்கட்டளை (&lt;a title="http://www.tamilheritage.org" href="http://www.tamilheritage.org/"&gt;http://www.tamilheritage.org&lt;/a&gt;) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (சுபாஷினி டிரெம்மல்), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி - ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல், ஜெர்மனியில் வசிக்கிறார். Hewlett Packard நிறுவனத்தில் ஐடி கன்சல்டனாகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். அப்பொழுது இந்த அமைப்பின் பணிகள் குறித்துப் பல செய்திகளை சுபாஷினி பகிர்ந்துகொண்டார். அந்த இ-நேர்காணல் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: தமிழ் மரபு அறக்கட்டளை எதனை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  2001ஆம் ஆண்டு போப்லிங்கன் ஜெர்மனியில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, தமிழில் இன்னமும் பதிப்பிக்கப்படாத, அப்படியே பதிப்பிக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பற்ற நிலையிலும், அழிந்து விடும் நிலையிலும் உள்ள தமிழ் நூல்களை நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தோற்ற விளக்கத்தை நமது வலைப்பக்கத்தில் உள்ள இப்பகுதியில் காணலாம். &lt;a title="http://www.tamilheritage.org/how2contribute.html" href="http://www.tamilheritage.org/how2contribute.html"&gt;http://www.tamilheritage.org/how2contribute.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: இன்னமும் பதிப்பிக்கப்படாத ஓலைச் சுவடிகள் எவ்வளவு உள்ளன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  பனை ஓலைகளில் எழுதப்பட்டு வழி வழியாக குடும்பச் சொத்தாகப் பாதுகாக்கப்பட்டு வரும் இன்னமும் பதிப்பிக்கப்படாத ஒலை சுவடிகளில் ஏறக்குறைய அறுபது விழுக்காடு மருத்துவத் துறை சார்ந்தவை. அவற்றில் பல இன்னும் அச்சிற்கு வரவில்லை என்பது உண்மை. இது தவிர, வான சாஸ்திரம், கணிதம், நாவாய் சாஸ்திரம், இரசவாதம், கோயில் கட்டுமான சாத்திரம், மாட்டு வைத்தியம், இலக்கியம், யோக சாஸ்திரங்கள் போன்ற பல துறை நூல்கள் பதிப்பிக்கப்படாமல், அல்லது மிக, மிக மெதுவாகப் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: பொதுவாக தமிழ் ஒலைச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் என்பது எப்படியுள்ளது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  தனியார் கைவசமுள்ள பல ஓலைச் சுவடி நூல்கள் சரியான பாதுகாப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. முறையாகப் பாதுக்காக்கப்படும் பனை ஓலை நூல்கள் ஒரு நூற்றாண்டு முதல் ஐந்து நூற்றாண்டு வரை வாசிக்கக் கூடிய அளவில் இருக்கும். ஆயின் முறையான, சம்பிரதாய வழியில் வரும் பாதுகாப்பு முறைகளும் விரைவாக மறக்கப்பட்டு வருவதால் பாதுகாப்பகங்களில் உள்ள நூல்கள் கூட விரைவாக அழிந்து வருகின்றன. பனை ஓலைகளிலிருந்து அச்சிற்குக் கொண்டுவரப்பட்ட பல அரிய நூல்கள் மறுபதிப்பு இல்லாமல் பனை ஓலைகளைவிட விரைவாக அழிந்து வருகின்றன. இத்தகைய தமிழ்ப் பொக்கிஷங்கள் அறியப்படும் முன்னரே அழிந்து விடுவது நமது அக்கரையின்மையின் தெளிவான வெளிப்பாடு என்றே நினைக்க வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: தமிழகத்தில் உள்ள நூலகங்களில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றனவே. அப்படியிருக்கையில் த.ம.அ மின்பதிப்பாக்கம் செய்ய வேண்டுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  இது ஒரு முக்கியமான கேள்வி. தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் கணினி தொழில்நுட்பத்தைக் கொண்டு மிக எளிமையாகப் பனை ஓலையில் எழுதப்பட்ட நூல்கள், மற்றும் ஆவணங்கள் பழம் நூல்களை மிகச் சிறப்பாக மின்னாக்கம் செய்து வைக்கலாம். ஆனால் உண்மை நிலை இதற்கு எதிர்மாறாகத் தான் இருக்கின்றது. தனியார் முயற்சிகள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் செய்கின்ற முயற்சிகளை விட குறைவாகவே இந்த முயற்சிகள் உள்ளன. இது மாற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாகக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத் தமிழ்த் துறை போன்றவை மின்னாக்கப் பணிகளில் ஈடுபாடு காட்ட வேண்டும். தமிழக அரசாங்கமும் இவ்வகைப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் நூலகங்களுக்குச் சென்று அங்கு எவ்வகையில் பழம் நூல்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்படுகின்றன என்று நான்  பார்த்திருக்கின்றேன். பல தரப்பட்ட நூல்கள், நாடுகளின் வரைபடங்கள், கடிதங்கள், செய்தி அறிக்கைகள், வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள் எனப் பல்வேறு வகைப்பட்டவை microfilm ஆகத் தயாரிக்கப்பட்டு, அல்லது ஸ்கேனிங் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அண்மையில் ஜெர்மனியில் ஸ்டுகார்ட்டில் உள்ள ஒரு நூலகத்தில் நடைபெற்ற கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு 800ஆம் ஆண்டு முதல் தேடிப் பாதுகாக்கப்பட்டு வரும் ஆவணங்களைப் பார்த்த போது இந்தப் பெருமைப்படத்தக்க விஷயத்தை நினைத்து வியந்தேன். இவ்வகை நூலகங்களில் இந்த நூல்கள் வெறுமனே கண்ணாடி அலமாரிக்குள் வைக்கப்படுவதில்லை. இந்த ஆவணங்கள் கிடைத்தவுடன் உடனே இவை மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு வேறொரு இடத்தில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. அப்படி இந்த நூலகத்திற்கு ஏதாகினும் பாதிப்பு ஏற்படுமானால் இந்த ஒரிஜினல் நூல்கள் அழிந்தாலும் அதன் மின்பதிப்பு எப்போதும் இருக்கும் வகையில் தூர நோக்குச் சிந்தனையோடு இந்த நூல்கள் பாதுக்காக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் ஜெர்மனியில் கெல்ன் நகரில் இடிந்து விழுந்த நகர ஆவண நிலையத்தைப் பற்றிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். இந்த ஆவணங்கள் ஸ்வார்ட்ஸ்வால்டில் உள்ள வேறோர் ஆவணப் பாதுகாப்பு நிலையத்தில் மின்பதிப்புகளாக வைக்கப்பட்டுள்ளன. அசல் அழிந்த போதும் அதன் மின்பதிப்பு பாதுக்காக்கப்பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பெரிய ஒரு காரியம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: உங்களால் ஓலைச் சுவடிகளைப் படிக்க இயலுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  சில எழுத்துகளை தமிழ் அறிந்த யாரும் கண்டுகொள்ள முடியும். ஆனால் ஓலைச் சுவடிகளைப் படிப்பது சுலபமல்ல. எழுத்து நமக்குத் தெரிந்தது போல இருந்தாலும் கருத்தைப் புரிந்து கொள்வது சிரமமான ஒன்று. புள்ளிகள் இல்லாமல் தொடர்ச்சியாக வாக்கியங்கள் அமைந்திருக்கும்; மெய்யெழுத்துகள் புள்ளி தவிர்த்து வழங்கப்பட்டிருக்கும். ஓலைச் சுவடியில் பயிற்சி பெற்றவர்களால் ஓலைகளைப் படித்து அதனை விளக்க முடியும். இது ஒரு தனிக் கலை. ஒரு முக்கிய விஷயம். இவ்வகைத் துறை அறிஞர்கள் குறைந்து வருகின்றார்கள் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: உங்கள் குழுவில் யாராலேனும் ஓலைச் சுவடிகளைப் படித்து பொருள் விளக்கம் தர இயலுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் சுவடியை வாசித்து சரியான பொருள் தரும் வகையிலான தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லை. தமிழ் மரபு அறக்கட்டளை இதனை ஈடு செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள தொல் பொருள் ஆய்வு நிலையம், தஞ்சை பல்கலைக்கழக சுவடித் துறை, மற்றும் சில நூலகங்களில் இதற்கான உதவியை நாடியது. இந்த முயற்சியின் காரணமாக இத்துறை வல்லுனர்களில் சிலரது தொடர்பும் இப்போது தமிழ் மரபு அறக்கட்டளைக்கு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஓலைச் சுவடிகளை ஒளி வருடி மூலம் படம் பிடித்து, இணையத்தில் வைப்பது மட்டுமே உங்கள் நோக்கமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  முக்கியமான கேள்வி இது. இல்லை என்பது தான் பதில். இந்த ஓலைச் சுவடி பாதுகாப்பு முறையை நாங்கள் 5 படி நிலைகளாக வகுத்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஓலைச் சுவடிகளைத் தேடி எடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;2. அவற்றை இனம் பிரிப்பது, அதாவது categorization என்பது. மருத்துவமா, வான சாஸ்திரமா, ஓவியமா, கலையா, இலக்கியமா என வகை பிரிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;3. அடுத்து மின்பதிப்பாக்கம். ஸ்கேனிங் முறையில் இதனை மின்பதிப்பாக்கம் செய்து இணையத்தில் வைப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;4. இந்த மின்பதிப்பு செய்யப்பட்ட ஓலைகளை, ஓலைச் சுவடி வாசிக்கத் தெரிந்த அறிஞர்களைக் கொண்டு வாசிக்க வைத்து, அதனை ஒலிப்பதிவு செய்வது, மற்றும் எழுத்துகளைத் தட்டச்சு செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;5. இந்த ஒலிப் பதிவுகளையும், தட்டச்சு செய்யபப்ட்ட நூலையும் மின்பதிப்பாக்கம் செய்து நிரந்தரப்படுத்துவது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இந்த ஐந்து படி நிலைகளில் ஒரு ஓலைச் சுவடியின் மின்பதிப்பாக்த்தைச் செயல்படுத்த வேண்டிய நிலை இருக்கின்றது. இதில் மிக முக்கியமான ஒன்றாக நாம் நினைப்பது முதலில் எவ்வளவு ஓலைகள் கவனிப்பாரற்று இருக்கின்றனவோ, அவற்றை அவை அழிவதற்கு முன்னர், சிதைவதற்கு முன்னர் முதலில் மின் பதிப்புகளாகக் கொண்டுவந்துவிட வேண்டும். மினபதிப்பாக இவை மாறிய பின்னர் அடுத்த படி நிலையில் உள்ள காரியங்களைத் தடையின்றிச் செய்ய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஓலைச் சுவடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துகளும் குறியீடுகளும் வேறானவை. இவற்றைத் தட்டச்சு செய்திட, தனித்த விசைப் பலகை வேண்டுமே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  அப்படி சொல்வதற்கில்லை. தமிழின் எழுத்துரு படிப்படியாக மார்றம் எடைந்திருக்கின்றது. அதே சமயம் படி எடுத்து ஒரு ஓலை நூலைப் பாதுகாப்பவர்கள் அவற்றை அந்தக் காலகட்டத்தில் வழக்கில் உள்ள எழுத்துருவில் அதனை எழுதுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆக இக்காலத் தமிழில் ஓலை நூலைத் தட்டச்சு செய்து வைப்பதைத் தான் தமிழ் மரபு அறக்கட்டளை வலியுறுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஓலைச் சுவடி வாசிப்பவர் அதைச் சரியாகப் புரிந்து வாசித்தாரா என்பதை எவ்வாறு சோதிப்பது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  ஓலைச் சுவடி வாசிப்பவர், ஓலையின் சாரத்தை விட்டு வெளியே சென்று விட வாய்ப்பு குறைவு. காரணம் எழுத்துகள் தெளிவாக இருக்கும், ஒரு சில எழுத்துகளைத் தவிர. குறிப்பாக ன, ண, ல, வ, போன்றவை. மற்றும் முற்றுப் புள்ளி, மெய்யெழுத்து வித்தியாசங்கள் பிரச்சனைக்கு உரியவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பயிற்சி பெற்ற சுவடியியல் வல்லுனர்களுக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியும். இருந்தாலும் ஒரு குழுவை இந்தக் காரியத்தில் ஈடுபடுத்துவது சிறந்தது. ஒருவர் வாசித்த சுவடியை மேலும் ஓரிருவர் வாசித்துச் சரி பார்ப்பதை நாம் வரவேற்க வேண்டும். இது ஒரு வகையில் quality control ஆக அமையும் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: முக்கியமாக, இதற்குப் பொருள் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  பொருள் பிரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கின்றது. அதற்காகத்தான் மின் தமிழ் என்னும் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி அரங்கம் செயல்படுகின்றது. உலகம் முழுவதிலிருந்தும் ஏறக்குறைய 680 தமிழ் அன்பர்கள் இந்தத் தமிழ்ச் செய்தி அரங்கில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். பதிப்பிக்கப்படுகின்ற நூல்களைப் பற்றிய விவாதங்களை இங்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம். அது மட்டுமல்ல பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகளும் இந்த முயற்சியில் ஆர்வம் காட்டலாம். முதுநிலைக் கல்வி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இதனை ஒரு பாடமாக எடுத்து ஆய்வு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் ஆகியவற்றை வாசிக்கத் தமிழக அரசு, உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளித்து வருகிறதே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  இது நல்ல முயற்சி. ஆனால் எத்தனை மாணவர்கள் இத்துறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றார்கள் என்று ஆராய்ந்தால் அது திருப்திகரமாக இல்லை. கடந்த ஆண்டு நான் சென்னைக்குச் சென்றிருந்த போது ஒரு பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர், தங்கள் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டுத் துறைக்கு ஒரு அறிஞர் தேவைப்படுவதாகவும் ஆனால் வருத்தப்படத்தகக் விஷயம் என்னவென்றால் இந்தத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு கேண்டிடேட் கூட கிடைக்கவில்லை என்றும் கூறினார். இது தான் உண்மை. குறைந்த எண்ணிக்கையிலான அறிஞர்களே இந்தத் துறையில் உள்ளனர். ஏன் என்பதை அரசாங்கமும் யோசிக்க வேண்டும்; பல்கலைக்கழகங்களும் யோசிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: போலியான ஓலைச் சுவடிகள் நிறைய இருக்கின்றன என்றும் ஒரு கருத்தும் உள்ளது. எது அசல், எது போலி என்று எப்படி கண்டறிவீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  போலிகள் தவிர்க்கப்பட முடியாதவை. அதே போல ஒரே சுவடி வெவ்வேறு நபர்களால் படியெடிக்கபப்ட்டு, பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. ஆக, மீண்டும் ஒரே சுவடியைச் சிறு பெயர் மாற்றத்தோடு காண்பதற்கான வாய்ப்பும் உண்டு. ஆனால் பதிப்பிக்கப்படாத சுவடிகள் உள்ளன என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. போலிகளைக் கண்டறிய ஆய்வு தேவை. ஆராய்ச்சி செய்யாமல் எல்லாமே போலி என்றும் நாம் சொல்லி விட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஓலைச் சுவடிகளை வாசித்து, ஒலிப் பதிவுகளாக்கும் நோக்கம் உள்ளதாகச் சொன்னீர்கள். இதை எழுத்து எழுத்தாக வாசிப்பது நோக்கமா? அல்லது, பொருளும் கூறுவதாகத் திட்டமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  முதலில் எழுத்துகளை, வாக்கியங்களை வாசித்து ஒலிப்பதிவு செய்ய வேண்டும். தட்டச்சு செய்து ஓலை நூலைப் பதிப்பிக்க வேண்டும். அடுத்த கட்டமாகப் பொருளை விளக்கி அதனைப் பதிவு செய்ய வேண்டும். இரண்டும் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: தமிழ், தெலுங்கு.. உள்ளிட்ட பல மொழிகளில் சுவடிகள் கிடைக்கக்கூடும். நீங்கள் தமிழில் மட்டும் கவனம் செலுத்துவீர்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  அப்படியில்லை. தமிழுக்கு முதலிடம் வழங்கப்படுகின்றது அவ்வளவே. எமது வலைப் பக்கத்திலேயே மலையாளத்தில் உள்ள ஓலைகளும் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக &lt;a title="http://bharani.dli.ernet.in/thf/palmleaf/malabar/malabar.html" href="http://bharani.dli.ernet.in/thf/palmleaf/malabar/malabar.html"&gt;http://bharani.dli.ernet.in/thf/palmleaf/malabar/malabar.html&lt;/a&gt; இல் சில உள்ளன. மொழியில்லாமல் ஓவியங்களாகச் சித்தரிக்கப்பட்ட ஓலைகளும் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. &lt;a title="http://bharani.dli.ernet.in/thf/palmleaf/arudam/arudam.html" href="http://bharani.dli.ernet.in/thf/palmleaf/arudam/arudam.html"&gt;http://bharani.dli.ernet.in/thf/palmleaf/arudam/arudam.html&lt;/a&gt; ஆக, பிற மொழி ஓலைகளைப் பதிப்பிப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளைக்குத் தடை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: இந்த மின் பதிப்பாக்க முயற்சிக்காக அரசின் ஒத்துழைப்பினை நாடினீர்களா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  தமிழ் மரபு அறக்கட்டளை பல கருத்தரங்கங்களின் வழி ஓலைச் சுவடி பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொளண்டுள்ளது . பல கட்டுரைகள் இதன் தொடர்பில் வாசிக்கப்பட்டுள்ளன; நேரடியாக அரசின் உதவியைத் தமிழ் மரபு அறக்கட்டளை நாடியதில்லை. ஆனால் கருத்தரங்குகளில் வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் கருத்தரங்கங்களில் கலந்து கொள்கின்ற அமைச்சர்களுக்குத் தெரிந்தாலும், மாநாடுகளின் போது பலருக்கும் இவ்வகை முயற்சிகள் மிக முக்கியமானவை எனப் புரிந்தாலும் அடுத்த சில நாட்களில் இந்த முக்கியத்துவம் மறக்கப்பட்டுவிடுகின்றது. கருத்தரங்கங்களின் போது இருக்கின்ற தீவிரப் போக்கு தொடர்ச்சியாக இருப்பதில்லை. ஆர்வம் குன்றி இந்த முயற்சியில் கவனம் இல்லாமல் போய்விடுகின்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தத் தொடர் முயற்சிகள் உலகத் தமிழர்கள் பலருக்கும் தெரிந்த ஒன்று. ஏன் இந்த முயற்சிக்கு இன்னமும் தமிழக அரசாங்கத்திடமிருந்து நேரடி ஆதரவு தோன்றவில்லை என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. அரசாங்கத்தை விடுவோம். தனி மனித விழிப்புணர்வு என்ற ஒன்று இருக்கின்றதே. அயல் நாடுகளில் வாழ்கின்ற எங்களைப் போன்ற தமிழர்களுக்கு இந்த விஷ்யத்தில் இருக்கின்ற ஆர்வம் ஏன் தமிழகத்தில் இல்லை என்பது வேதனைப்பட வேண்டிய ஒரு விஷயம். &lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம் மட்டுமல்ல; கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பலகலைக்கழகத் தமிழ்த் துறை, நூலகங்கள் போன்றவை இப்பணிக்கு பெரிய அளவில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் அது எதிபார்க்கின்ற அளவிற்கு இல்லை என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: நீங்கள் நேரடியாகத் தமிழக அரசையும் மத்திய அரசையும் கேட்டுக்கொண்டால் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  முதலில் குறிப்பிட்டது போல ஒரு சில கருத்தரங்கங்ளின் போது சந்திக்கின்ற அமைச்சர்களோடும் அரசாங்க அதிகாரிகளோடும் இந்தப் பணிகளுக்காக ஆதரவு தேடியிருக்கின்றோம். ஆனால் இது இன்னமும் பலனளிக்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல தமிழக அரசை நேரடியாகத் தொடர்பு கொள்வதிலும் மத்திய அரசினைத் தொடர்பு கொள்வதிலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. இது எங்கள் செயற்குழுவோடு கலந்து ஆலோசித்து செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தமிழ் மரபு அரறக்கட்டளையின் முயற்சியைப் பாராட்டி எங்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் ஒன்றினையும் வழங்கியிருக்கின்றார்கள். அதனை எங்கள் வலைப்பக்கத்தில் இங்கே &lt;a title="http://www.tamilheritage.org/uk/bl_thf/kalam.html" href="http://www.tamilheritage.org/uk/bl_thf/kalam.html"&gt;http://www.tamilheritage.org/uk/bl_thf/kalam.html&lt;/a&gt; காணலாம்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;அ.க.: சுவடியியலைக் கற்பிப்பதில், அறிஞர்களை உருவாக்குவதில் த.ம.அ. முயற்சி மேற்கொண்டுள்ளதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  எங்கள் குழுவில் இத்துறை வல்லுனர்கள் இல்லை. இதனை மனத்தில் கொண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். அதன் அடிப்படையில் ஒரு தமிழ் மரபு மையம் உருவாக்கும் எண்ணத்தில் இந்த முயற்சி மேர்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இவ்வகை ஆய்வுகள், சுவடியியல் பயிற்சிகள், மின்னாக்கப் பணிகள் நடைபெறுவதற்கான ஆரம்ப நிலை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: அரசு நடத்தும் பயிற்சியில் உங்கள் சார்பில் சிலரைப் பங்கேற்கச் செய்யலாமே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் சிலர் பங்கேற்க வேண்டும் என்பது இங்கு முக்கியமல்ல. எங்கள் ஆதங்கம், இந்தப் பயிற்சிகளில் குறைவானவர்களே கலந்து கொள்கின்றார்கள் என்பதுவும் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களில் மட்டும் தான் இவ்வகைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுவுமே. பல தொடர் பயிற்சிகள் நடைபெற வேண்டும்; பல கல்லூரிகளில் சுவடியியல், கல்வெட்டுத் துறை, மின்பதிப்பாக்கம் போன்றவை முக்கியப் பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் விருப்பம். குறுகிய காலப் பயிற்சிகளையும் அயல்நாட்டில் வாழ்பவர்களுக்கு பயன்படும் வகைய்ல் கூட ஏற்பாடு செய்யலாம். விடுமுறைக்கால 'இண்டென்விவ் கோர்ஸ்' போல பாடத் திட்டத்தை அமைத்து, பயிற்சிகள் வழங்கத் திட்டமிடலாம். அதன் வழி அயல் நாடுகளில் வாழ்கின்ற ஆர்வலர்களும் கூட தமிழகம் வந்து இவ்வகைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இப்படியும் கூட அரசாங்கம் சில புதிய திட்டங்களை வகுக்க முடியும் அல்லவா? தமிழ்ச் சுவடிகள், பழம் நூல்கள் போன்றவை, தமிழகத்தில் மட்டும் இல்லையே. உலகின் பல மூலைகளில் பழம் தமிழ் நூல்களும் பணை ஓலை நூல்களும் நூலகங்களிலும் தனியாரிடத்திலும் உள்ளன. தமிழகம் மட்டுமல்லாது மற்ற நாடுகளில் வாழும் தமிழ் நூல் மின்னாக்கத்தில் ஆர்வமுள்ளோர் தங்களுக்குக் கிடைக்கின்ற பழம் நூல்களை, ஓலைச் சுவடிகளை மினபதிப்பாக்கம் செய்ய இவ்வகைப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றிலும் த.ம.அ. கவனம் செலுத்துகிறதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  ஆம். இது தொடர்பாகச் சில ஆணடுகளுக்கு முன்னர் சென்னையில் உள்ள International Institute of Tamil Studies-இல் உள்ள அறிஞர்களோடு ஒரு பட்டறை நடத்தினோம். இது தொடர்பான் சில தொகுப்புகளை த.ம.அறக்கட்டளை வலைப்பக்கத்தில் (&lt;a title="http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html" href="http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html"&gt;http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html&lt;/a&gt;) காணலாம். அப்போது அறிஞர் கொடுமுடி சண்முகம், தொல்பொருள் ஆய்வு நிபுணர் பேராசிரியர் பத்மாவதி ஆகியோர் இந்தப் பட்டறைக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கினர். தொடர்ச்சியாகக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை வாசிப்பது, சுவடி வாசிப்பு, கிரந்த எழுத்துகள் வாசிப்பு போன்றவற்றையும் தமிழ் மரபு அறக்கட்டளையினர் விவாதித்தோம். பயனுள்ள சந்திப்புகளாக இவை அமைந்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: பழைய நாணயங்கள் குறித்து ஏதும் முயற்சிகள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுபா:  செப்பேடுகள் பற்றித் தொகுக்க ஆரம்பித்த போது நாணயங்களைப் பற்றியும் சில விபரங்களை தொகுத்தோம். அது பற்றிய செய்திகளும் இதே பக்கத்தில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அ.க.: ஓர் அரசு செய்ய வேண்டிய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் பணிகள், ஒலி - ஒளிப் பதிவுகள், மின் தமிழ்க் குழுமம் ஆகியவை தொடர்பான உரையாடல், அடுத்த இதழ்களில் தொடரும்.)&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=4ea614d5-c39a-41da-933a-fb7b65f91942&amp;CATEGORYNAME=TCHN"&gt;நன்றி: சென்னை ஆன்லைன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-1190222609410649145?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/1190222609410649145/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=1190222609410649145' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/1190222609410649145'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/1190222609410649145'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2009/06/blog-post.html' title='&apos;தமிழ் மரபு அறக்கட்டளை&apos; சுபா உடன் இ-நேர்காணல்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-113851146071327136</id><published>2006-01-29T10:21:00.000+05:30</published><updated>2006-08-06T17:35:49.696+05:30</updated><title type='text'>தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும்?</title><content type='html'>&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/320/aish7.jpg" border="0" alt=""&gt; &lt;/img&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டுக்கான சட்டதிட்டங்களைவிட, ஒரு பெண்ணுக்கான சட்டதிட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. பிறக்கும் ஆண் குழந்தை கண் திறப்பதற்கு முன்பே ஆணையிடக் கற்றுக்கொள்கிறது. பெண் குழந்தையோ, கத்தி முனைக்குத் தப்பித்தான் கண்களையே திறக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காலமெனும் பெருவெள்ளம் ஓடிக்கொண்டே இருப்பதால் காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எழுச்சிமிக்க பெண்களின் புதிய யுகம் மலர்ந்திருக்கிறது. மரபின் மண்ணில் கால்பதித்துப் புதுமையின் வானில் தலை நிமிர்த்துவதாய் உள்ளது, இன்றைய பெண்ணியம். ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, 'ஒரு தமிழ்ப் பெண் எப்படி இருக்கவேண்டும்?' என்று பல்வேறு தளங்களில் உள்ள பெண்களைக் கேட்டோ ம். இதோ, பெண்குலத்தின் குரல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கீதா (குடிசைவாழ் பெண்மணி)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பொண்ணு, அடக்க ஒடுக்கமா இருக்கணும். ஒழுங்கா டிரெஸ் போடணும். சேலை கட்டணும். சல்வார், சுடிதார் போடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரத்துக்குப் போயிட்டு நேரத்துக்கு வரணும். குடும்பத்துக்கு அடங்கி இருக்கணும். நம்ம இஷ்டத்துக்கு இருக்கக் கூடாது. பெரியவங்க பேச்சக் கேட்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;வசதி இருந்தா ஆம்பளையவிட பொம்பளை அதிகம் படிக்கலாம். ஆம்பளை அல்லது பொம்பளை ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் படிக்க வைக்கணும்னா, நான் பொம்பளையத்தான் படிக்க வைப்பேன். ஆம்பளைப் பையன் வெளியில போறான், வரான். நாலும் தெரிஞ்சுக்குவான். தாய், தகப்பன் அனுமதியிலதான் பொம்பளை வெளியில போவுது. அதுக்குத்தான் படிப்பு வேணும்.&lt;br /&gt;&lt;br /&gt;படிச்ச பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி, வீட்டுக்காரர் நல்லவரா இருந்தா வெளியில வேலைக்குப் போவலாம். வேலைக்குப் போறதுக்கு மட்டுந்தான் படிப்புன்னு இல்ல. பஸ் நம்பர் பாக்கறதுக்கு, பேப்பர் படிக்க எல்லாத்துக்கும் படிப்பு உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆறாவது வரைக்கும் படிச்சேன். கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிச்சதால புத்தி சுமாராத்தான் இருக்குது. எனக்கு ரெண்டு வயசுல ஒரு பொண்ணு இருக்கு. அதை நான் கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிக்க வைக்கமாட்டேன். கஷ்டப்பட்டாவது பீஸ் கட்டித்தான் படிக்க வைப்பேன். தமிழ்ப் பொண்ணு தவறான வழியில போகக் கூடாது. பொட்டு அவசியம் வெச்சுக்கணும். நகையில்லாமப் பெண்கள் இருப்பாங்களா, என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணத்துல பொண்ணுக்குத் தாலி வேணும். பாதுகாப்புக்குத் தாலி அவசியம். தமிழ்ப் பொண்ணுக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செளந்திரவல்லி (குடும்பத் தலைவி)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் புடவை கட்டணும். பொட்டு வைக்கணும். அந்தக் கால நகைகள் அணியணும். கண்ணாடி வளையல் கூடாது. உடனே உடையும். அது அபசகுனம். பொருத்தமான அலங்காரம் வேணும். பட்டன் தோடு, நீளமாத் தொங்குற பிளாஸ்டிக் தோடு கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் - மனைவி இருவரும் ஒருவர்மேல் ஒருவர் அன்போட இருக்கணும். கணவன் சரியில்லை என்றாலும் பெண் ஓரளவு பொறுத்துப் போக வேண்டும். அவன் ரொம்ப அராஜகம் செய்தால், அவ வெளியே வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே போனாலும் சொல்லிட்டுப் போகணும். இரவு வெளியே போகக் கூடாது. ஏன்னா, உலகத்துல பாதுகாப்பில்ல. சமையல், வீட்டுவேலை அவசியம் கத்துக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனுக்கு முந்தி எழுந்துக்கறது, அவன் கால்தொட்டு வணங்குறது, அவன் எள்ளுன்னா எண்ணெயா நிக்கறது... எல்லாம் செய்யலாம்தான். ஆனா, அதுக்குத் தகுதியாய்க் கணவன் நடந்துக்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும் கணவனுக்கு மனைவி கால்பிடிச்சு விடலாம்; மனைவிக்கும் கணவன் கால்பிடிச்சு விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொண்ணு தன்னை நம்பணும். அப்புறம்தான் தெய்வத்தை நம்பணும். நித்திய பூஜைகள் செய்யணும். வேலைக்குப் போறவங்க, முடியறப்ப செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுதா (சட்டக் கல்லூரி மாணவி - பார்வையிழந்தவர்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டப்பட்ட மாடு மேய்வது போல்தான் பெண் இருக்கிறாள். சுடிதாரும் ஜீன்சும் அணிபவள்கூடத் தமிழ்ப் பெண்தான். தைரியம்தான் அவளின் அடையாளம். விஷய ஞானம் அவளுக்கு வேண்டும். பயம் கூடாது. எதிலும் துணிந்து இறங்கவேண்டும். தான் எப்படி இருக்கவேண்டும் என்று அவள் தானே தீர்மானிக்க வேண்டும். ஃபேஷன் ஷோ, அழகிப் போட்டிகள் அதிகமாவது கூடாது. நல்லவை வாழ வேண்டும். தீயவை வீழ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு ஆண்களைப் பார்த்தாலே தப்பு; பேசினாலே தப்பு என்ற நிலை இருந்தது. இப்போது சகஜமாகத் தொட்டுப் பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்பின் அறியாதவருடன் பேசும்போதுகூட 'ஹாய்' சொல்லிக் கைகுலுக்குவது இயல்பாய் இருக்கிறது. அதனால் 'கற்பு' என்பதன் அர்த்த எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. உண்மையில் தாய்மைதான் கற்பு. பாலியல் வன்முறைக்கு ஆளானவள், தற்கொலையும் செய்யக் கூடாது; அவனையே திருமணமும் செய்யக் கூடாது. அவன் மீது வழக்குத் தொடுக்க முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தவறு, சரி என்பதைத் தானே தீர்மானிக்க வேண்டும். அவற்றைத் தன் வீட்டாருக்கு விளக்க வேண்டும். மூன்று வாய்ப்புகளிலும் அவர்கள் ஏற்காமல் எதிர்ப்பார்களேயானால், அவள் வெளியே வந்துவிடலாம். தன் காலில் நிற்கும் சக்தி அவளுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;குறிக்கோள், தன்னம்பிக்கை, தைரியம், சமாளிக்கும் திறன் என்ற நான்கு குணங்களைப் பெண்கள் குறைந்தபட்சம் கொண்டிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குணசுந்தரி (முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைப் பல்கலைக்கழகம்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பெண் என்ற சொல்லே அவளை மறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. தாய்வழிச் சமூகத்திலிருந்து மாறித் தந்தை வழிச் சமூகத்திற்கு வந்த பிறகுதான் ஆண் முக்கியமானவன் ஆனான்.&lt;br /&gt;&lt;br /&gt;'வினையே ஆடவர்க்கு உயிரே' - என்பதை நான் ஏற்கமாட்டேன். 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' - என்ற பாடல், பெண்ணின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. பெண் அரவணைக்காவிட்டால் பிள்ளைகள் தறுதலைகளாகத்தான் திரிவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை எல்லா உயிர்களிடமும் உள்ளன. அவற்றைப் பெண்ணுக்கு மட்டுமே பொருத்தியுள்ளனர். பெண்களுக்கான குணங்கள் ஆண்களிடமும் இருக்கக் கூடாதா, என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணென்றால் குனிந்துதான் நடக்கவேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. பெண்ணுக்குக் கல்வி அவசியம். ஆனால், அந்தக் கல்வி, சூழலையும் வேலைவாய்ப்பையும் ஒட்டியதாக இல்லை. இன்று பெண்ணியம் பேசுபவர்கள்கூட அவர்கள் பேசுவதுபோல் வாழவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உடையில் ஒரு பாரம்பரியம் உள்ளது. சீனாவில் விழாக்களின் போது மரபுசார் உடைகளை அணிகிறார்கள். இங்கே சேலை கட்டும் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. சுடிதார் நல்லதுதான். ஆனால், அது தமிழ் அடையாளம் இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;வெப்ப நாட்டில் கதராடை அவசியம். ஆனால், அது இங்கே ஏழ்மையின் சின்னமாய் இறங்கிப்போய் விட்டது. வெப்பம் நிறைந்த இந்த நாட்டில் ஆண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். பெண்களும் பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் எதிலும் கலப்பு வந்துவிட்டது. பண்டிகைகளிலாவது பழக்கவழக்கம், மரபு, பண்பாட்டு அடையாளம், அணிகலன் என எல்லாவற்றையும் மீட்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தாலி, மெட்டி போன்றவை தமிழ் அடையாளங்கள் இல்லை. அக்னி முன்பு திருமணம் செய்வது தமிழர் வழக்கமில்லை. தமிழர் அடையாளங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. நம் வழக்கங்களை நமது என்று சொல்லவே வெட்கப்படுகிறோம். காது குத்துதல், நரம்புகளுக்கு நன்மை சேர்க்கிறது. மஞ்சள் பூசுதல் அழகுப் பசைகளுக்கும் மருந்துகளுக்கும் மாற்று; உடலைப் பாதிக்கிறது. உடல் வெப்ப நிலைக்கேற்பவே வைரத்தை அணிந்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் காரண காரியத்தோடுதான் செய்தார்கள். ஆனால், அவர்கள் அதைச் சொல்லிவிட்டுப் போகவில்லை. எனவே எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லிவிட முடியாது. ஆய்வு முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சரசுவதி (பேராசிரியர், இராணி மேரி கல்லூரி)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணுக்குப் பிறக்கவே சுதந்திரம் இல்லை. எல்லாத் தளங்களிலும் அவள்மேல் வன்முறை திணிக்கப்படுகிறது. உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள் அவள் வாழ்கிறாள். அவள் ஒரு போகப் பொருளாக, பிள்ளை பெறும் யந்திரமாக, அழகுப் பொருளாகக் காட்டப்படுகிற போக்கு அடியோடு மாறவேண்டும். பெற்றோருக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, தன் குடும்பத்துக்காக வாழும் தியாகியாகவே அவள் உருவகம் உள்ளது. தனக்காக வாழ்கிற, தன் ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்கிறவளாக அவள் இல்லை. ஒரு சராசரித் தமிழ்ப் பெண் இப்படித்தான் இருக்கிறாள். இந்த 'லட்சுமணக் கோட்டினை' அவள் தாண்டவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவோ போராடி, இட ஒதுக்கீடு மூலம் அவளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தினால், மாநகராட்சி உறுப்பினர்களாகும் பெண்கள் பலரும் தம் கணவருக்குப் பினாமிகளாகவே செயல்படுகிறார்கள். அதனால், சலுகைகளைக் காட்டி மட்டும் பெண்களை முன்னேற்றிவிட முடியாது. அவளுடைய அறிவாற்றைலையும் வினையாற்றலையும் வளர்த்தெடுக்க வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையைப் பெறுபவள்தான் குழந்தைக்குத் தலையெழுத்தை (முதலெழுத்து) வழங்கியிருக்க வேண்டும். ஆணாதிக்கச் சமூகம் அதை மாற்றியது. ஆண் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் பெண் சேர்ப்பது தமிழ் வழக்கம் இல்லை. அது, மேலைநாட்டு வழக்கம். வரதட்சிணை கூடத் தமிழ் வழக்கம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தமிழ்ப் பெண் என்பதைவிட, அடிப்படையில் ஒரு மனுஷியாக அவள் எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் எனக்கு அக்கறை அதிகம். மனுஷியானவள் சுதந்திரமாக இருக்கவேண்டும். எதற்கும் யாரையும் சார்ந்து வாழாத நிலை பெண்ணுக்கு வேண்டும். பொருளாதாரம், கல்வி, முடிவெடுத்தல்.... முதலான சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் அவளுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும். தன் சுவைக்கும் வசதிக்கும் ஏற்ப, அவள் உடை அணியவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எந்த எல்லைக் கோடுகளையும் நான் இட விரும்பவில்லை. சர்வ சுதந்திரமாகத் தன்னைத் தானே அவள் தீர்மானிக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://dinamani.com"&gt;&lt;em&gt;தினமணி கதிர்&lt;/em&gt;&lt;/a&gt; - 09.04.2000&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-113851146071327136?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/113851146071327136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=113851146071327136' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/113851146071327136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/113851146071327136'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2006/01/blog-post_29.html' title='தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும்?'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-113850292656827510</id><published>2006-01-29T08:15:00.000+05:30</published><updated>2006-01-29T08:18:46.590+05:30</updated><title type='text'>வீடு தேடி வரும் இணையக் கல்வி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3806/379/1600/ponnavaikko.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/320/ponnavaikko.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்கூறும் நல்லுலகின் கல்வி வரலாற்றில் மாபெரும் மவுனப் புரட்சி அரங்கேறி வருகிறது. அதுதான் இணையவழிக் கல்வி. இதற்காகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தமிழ்நாடு அரசு நிறுவியுள்ளது. &lt;br /&gt;இணைய வழியில் எவ்வாறு கல்வி கற்பிக்கிறீர்கள் என இந்த அமைப்பின் இயக்குநர் பொன்னவைக்கோவைக் கேட்டோ ம். அவர் கூறினார்:&lt;br /&gt;&lt;br /&gt;"உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழில் ஈடுபாடு உள்ள மற்றவர்களுக்கும் தமிழ் மொழியைக் கற்கவும் தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்துகொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிப்பதே தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலையாய நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தொடக்கக் கல்வி, உயர் கல்வி என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கக் கல்வியில் அடிப்படை நிலை, இடைநிலை, மேல்நிலை என்று 3 பகுதிகள். அடிப்படை நிலையில் தமிழ் எழுத்துகளைக் கற்பிக்கிறோம். எழுத்து உருவத்தோடு அதை உச்சரிக்கும் முறையையும் அந்த எழுத்து இடம்பெறும் சொல்லையும் அச்சொல்லின் அர்த்தப் படத்தையும் காட்டுகிறோம். இந்தப் பாடங்களை ஆங்கிலம் வழியாகவும் கற்பிக்கிறோம். இதனால் தமிழ் பேசத் தெரியாதவர்களும் எளிதாக எழுதவும் பேசவும் முடியும். தமிழின் எல்லா எழுத்துகளையும் படடியல் இட்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் எந்த எழுத்தில் அம்புக் குறியை வைத்து அழுத்தினாலும் அதன் ஒலி கேட்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வோர் எழுத்தையும் அறிமுகப்படுத்தும் பாடல் உண்டு. எடுத்துக்காட்டுக்கு 'மா' என்ற சொல்லை அறிமுகப்படுத்த 'மாம்பழமாம் மாம்பழம் மாமரத்து மாம்பழம்' எனத் தொடங்கும் பாடல் ஒலிக்கும். இதை இசையோடு கேட்கலாம். எழுத்துப் பயிற்சியில் ஒவ்வோர் எழுத்தையும் மாணவர் விரும்பும் நிறத்தில் எழுதிப் பழகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கக் கல்வியில் இடைநிலை, மேல்நிலை விருப்பப் பாடங்களை வடிவமைத்து வருகிறோம். விரைவில்  அவை கற்பிக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கக் கல்வியில் பாடங்களைக் கற்பித்துவிட்டு மாணவ - மாணவியர் தன்னைத் தானே சோதனை செய்யும் முறையும் உண்டு. "ட" என்ற ஒலி ஒலித்தவுடன் மாணவர் "ட" என்ற எழுத்தை அழுத்தினால் 'சரி' என வரும். வேறு எழுத்தை அழுத்தினால் 'தவறு' என வரும். இதன் பிறகு சொற்களைப் படிக்கவும் தகவல் பரிமாறவும் எழுதவும் படிப்படியாகக் கற்பிக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;உயர்கல்வியில் புதிய தொழில்நுட்பத்தோடு பாடங்களைப் போதிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலப்பதிகாரத்தைப் பற்றிய பாடத்தில் அதன் முழு படக்கதையும் வசனங்களும் உண்டு. உதாரணமாக, திருமணக் காட்சியில் வேள்வித் தீ எரிவதும் மாதவி நடனமாடுவதும் கண்ணகி சிலம்பை உடைத்தலும் உண்மையான காட்சிகள் போலத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மணிமேகலைப் பாடத்தில் அமுதசுரபியில் இருந்து சோறு எடுத்து எடுத்துக் கொடுக்கும் காட்சி தத்ரூபமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையைப் பற்றிய பாடத்தில் ஒவ்வொரு  ராகத்தையும் திரைப்படப் பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்துகிறோம். 'அரிகாம்போதி ராகம்' என்றால் மாணவருக்குத் தெரியாது. ஆனால், அந்த ராகத்தில் உள்ள 'சந்திரனைத் தொட்டது யார்?' என்ற திரைப்பாடல் தெரியும். அதனால் அந்தப் பாடலை இசைக்கிறோம். 'பூங்காற்று திரும்புமா?', 'கங்கைக்கரை மன்னனடி' போன்ற பாடல்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் பற்றிய பாடத்தில் தேசிய விருது பெற்ற 'பாரதி' படத்திலிருந்து பல காட்சிகளைக் காட்டுகிறோம். பாரதியார் தொடர்புடைய புகைப்படங்கள், திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வைத்துள்ளோம். இதேமாதிரி பாரதிதாசனுக்கும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளுவர் பற்றிய பாடத்தில் 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்ற வரியைக் காட்சியாக்கி உள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் அந்தத் துறை வல்லுநரின் உரை வீடியோ காட்சியாக இருக்கிறது. பாடங்களின் இறுதியில் தன்மதிப்பீட்டு வினாக்கள் கேட்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியம், இலக்கணம், தமிழர் வாழ்வியல், இலக்கிய வரலாறு, மொழி வரலாறு, கலைகள், சமயம் - தத்துவம், நாட்டுப்புறவியல், படைப்பிலக்கியம், திறனாய்வு  ஆகிய 10 பிரிவுகளில் சான்றிதழ், பட்டயம், பட்டம் வழங்குகிறோம்" என்றார் பொன்னவைக்கோ.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ராணி வார இதழ் - 27.5.2001&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த நேர்காணல், 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. இப்போது பொன்னவைக்கோ, தமிழ் இணையப் பல்லைக்கழகத்தில் பணியாற்றவில்லை.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-113850292656827510?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/113850292656827510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=113850292656827510' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/113850292656827510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/113850292656827510'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2006/01/blog-post.html' title='வீடு தேடி வரும் இணையக் கல்வி'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-112748624450518828</id><published>2005-09-23T20:03:00.000+05:30</published><updated>2005-09-23T20:13:27.803+05:30</updated><title type='text'>நான் காட்சி மனிதன்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3806/379/1600/CMW%2005.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/320/CMW%2005.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கிறிஸ்டோபர் ஊர்ஸ்டு : அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பிறந்தவர். புத்தாக்க எழுத்து - வரலாறு பாடத்தில் இளங் கலைப் பட்டமும் கல்வியில் முதுகலைப் பட்ட மும் பெற்றவர். பள்ளி மாணவர்களுக்கு வரலாறு - இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றியவர். தென்னாப்பிரிக்காவில் சர்வதேச அமெரிக்கப் பள்ளியில் நிர்வாகியாக விளங்கியவர். &lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கௌத மாலா ஆகிய நாடுகளில் புகைப்படக் காட்சிகள் நடத்தியவர். அண்மையில் இவரின் "இன்னொரு யதார்த்தம்' (பட்ஹற் ர்ற்ட்ங்ழ் ழ்ங்ஹப்ண்ற்ஹ்) என்ற புகைப்படக் காட்சி, இந்தியாவில் பெங்களூர், சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. கேரளாவில் விரைவில் நடக்க இருக்கிறது. &lt;br /&gt;உலக அளவிலான புகைப்படப் போட்டி யில் முதல் பரிசு பெற்றவர். தற்போது, சென்னை யில் உள்ள அமெரிக்கத் தகவல் மையத்தின் துணை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவருடன் ஒரு சிறிய நேர்காணல்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புகைப்பட ஆர்வம் எப்படி வந்தது? புகைப்படக் கலைஞராக நீங்கள் மலர்ந்தது எப்படி?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் என்றாலே எப்போதும் எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. சிறு வயதில் மணிக்கணக்கில் எங்கள் குடும்ப ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். வரலாற்றுப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து அதிலுள்ள அரிய பழைய படங் களை வியப்புடன் பார்த்துக்கொண்டிருப்பேன். என்னைப் பொறுத்தவரை புகைப்படங்கள் நம்மை இன்னொரு காலத்திற்கு அழைத்துச் செல்லும் அபூர்வ தன்மை கொண்டவை என்றே கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஒரு புகைப்படத்தைப் பார்ப்பதும் அதன் மூலம் எதைப் புரிந்துகொள்கிறோம் என்பதும் முற்றிலும் மனம் வயப்பட்டது. ஒரு புகைப்படக் கலைஞன் திட்டமிட்டே ஒரு படத்தை எடுத்தாலும், அதைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கோணத்தில் அதைப் புரிந்துகொள்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் யாராலும் இப்படியொரு படத்தை எடுக்க முடியாது என்று தோன்றும் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பது எனது வழக்கம். கால ஓட்டத்தில் சமூகம் மறந்தவற்றைக் கூர்ந்து கண்டுபிடித்து எனது புகைப்படங்கள் வாயிலாக இன்றைய மனிதர்களின் பார்வைக்குப் படைக்க வேண்டும் என்பதே என் தாகம். &lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் எனது புகைப்படங்களை 'கண்டெடுக்கப்பட்ட ஓவியங்கள்' என்று நானே வருணிப்பதுண்டு. கடந்த 20 ஆண்டுகளாக நான் தொடர்ந்து எனது கேமிரா வழியாகக் காட்சிகளைப் பதிவு செய்து வருகிறேன். அந்த வகையில் நான் முற்றிலும் ஒரு காட்சி மனிதன் என்றே என்னைக் கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்படிப்பட்ட காட்சிகள் உங்களைப் புகைப்படம் எடுக்கத் தூண்டும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணம், பின்னணி, வடிவம் என்று எல்லா வகைகளிலும் என் பார்வைக்குச் சரியாகப் படும் காட்சிகளையே நான் படமாக எடுக்கிறேன். "வியூ ஃபைண்டர்' மூலம் பார்க்கும் முன்னோட்டக் காட்சியிலேயே பெரிதும் முடிவுக்கு வந்து விடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முக்கியமான அம்சம், நான் வேகமாக, மிக வேகமாகப் படம் எடுக்கக் கூடி யவன். ஆகவே அநேகமாகக் காட்சியை முடிவு செய்துவிட்டு கேமிராவை "கிளிக்' செய்வதற்கு முன்னால், எதைப் படம் பிடிக்கிறேன் என்று ஒரு முறை கூர்ந்து கவனிப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில் நான் சகட்டு மேனிக்குப் படங்களை எடுத்துத் தள்ளிப் புகைப்படச் சுருள்களை வீணடிக்க மாட்டேன். ஒரு காட்சியை அதிகபட்சம் மூன்று தடவைக்கு மேல் நான் "கிளிக்' செய்வது அபூர்வம். நான் எதிர்பார்க்கும் காட்சி, அந்த மூன்று "கிளிக்'குகளில் கிடைக்கும். இல்லையெனில் அப்படியொரு காட்சி அங்கிருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"வியூ ஃபைன்டரில்' பார்க்கும் போதே எனக்குத் தயக்கம் இருந்தால் பெரும்பாலும் அந்தக் காட்சியைப் படம் எடுப்பதைத் தவிர்த்து விடுவேன். சுருங்கச் சொன்னால், உள்ளுணர்வுதான் என்னைப் படம் எடுக்கத் தூண்டுகிறது. அதன் அடிப்படையிலேயே இவ்வளவு ஆண்டுகளும் படம் எடுத்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் புகைப்படக் கோட்பாடு என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""சமூகத்தின் இன்னொரு யதார்த்தத்தை நமது விருப்பம் போல் பதிவு செய்யக்கூடிய ஒரு சாதனம், கேமிரா'' என்பது பிரபல புகைப்படக் கலைஞர் ஜெர்ரி உல்ஸ்மேனின் கூற்று. அதை யொட்டியே என் கண்காட்சிக்கு "இன்னொரு யதார்த்தம்' என்று தலைப்பிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் அன்றாடம் பார்க்கும் காட்சி களைத்தான் நீங்கள் படமாக எடுக்கிறீர்கள். ஆனாலும் அது இத்தனை அழகாக இருக்கிறதே' என்று பலர் என்னிடம் வியந்து கூறுகிறார்கள். எனக்கும் ஒரு வகையில் அது ஆச்சரியமாகவே இருக்கிறது. நம்மைச் சூழ்ந்துள்ள கோடானு கோடி காட்சிகளிலி ருந்து எவ்வாறு இப்படிப் படம் எடுக்கிறேன்..? &lt;br /&gt;&lt;br /&gt;சூழலை விருப்பத்திற்கேற்றவாறு கையாள்வதில் எனக்கு ஓரளவுக்கேனும் திறமை உண்டு என்ற உணர்வின் வெளிப் பாடாக அது இருக்கலாம். அதனால்தான் எப்படிப்பட்ட காட்சியையும் என்னால் அழகாகப் பதிவு செய்ய முடிகிறது. அது மிகச் சாதாரணமாக இருந்தாலும் சரி அல்லது கறைபடிந்த சுவராகவோ, சுடுகாடா காவோகூட இருந்தாலும் சரி, எனது கேமிரா அழகாகவே பதிவு செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பல்லாண்டுகளுக்கு முன்பே எனக்கு ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டது. காட்சிகளை அழகாகப் பதிவு செய்தும் ஒருவன் சீரியஸôன கலைஞனாக இருக்க முடியும் என்பதே அது. ஒரு புகைப்படம் மிக அழகாக இருந்தால் உயர்தர கலைக்குரிய அம்சம், அதில் நிச்சயம் இருக்காது என்ற எண்ணம் இப்போதும் அமெரிக்காவில் உண்டு. ஆனால் என் புகைப்படங்கள் அவ்வாறானவை அல்ல. அழகும் அதே நேரத்தில் ஆழமான உள்ளடக்கமும் நிறைந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;உங்கள் புகைப்படத்தில் ஒளியின் பங்கு என்னவென்று சொல்ல முடியுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒளியும் புகைப்படமும் பிரிக்க முடியாதவை. எனது வீதிக் காட்சிகள் அனைத்திலும் ஒளியின் சுவடு தெரியும். அதிகாலையில் அல்லது சூரியன் மங்கும் பிற்பகல் வேளையில் நான் அதிகம் விரும்பிப் படம் எடுப்பதே அதற்குக் காரணம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒளியின் தடயங்களைக் கொண்ட இந்தப் படங்கள் எனக்கு எதை நினைவூட்டு கின்றன தெரியுமா..? இயற்கையின் முன்னால் எல்லாமே கடந்து செல்பவைதான், மனிதர்கள் உள்பட என்ற உண்மையைத்தான். என் படத்தில் பார்க்கும் மனிதர்கள், இயற்கையின் முன்னே கடந்து செல்பவர்களாகத்தான் காட்சியளிப்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனது படங்களில் பெரும்பகுதி சற்றே புரிந்துகொள்ளக் கடினமான தன்மையும் மீதி அன்றாட வாழ்வின் நேரடி அசைவுகளும் கொண்டதாக இருப்பதற்கும் இந்தப் பார்வைதான் காரணம். வெற்றுச் சுவரோ, வெறிச்சோடிய தெரு முனையோகூட மனிதர்கள் விட்டுச் சென்ற தடயங்களைப் பிரதிபலிப்பவைதான். அதைத்தான் எனது படங்களிலும் பார்க்கிறீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-112748624450518828?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/112748624450518828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=112748624450518828' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112748624450518828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112748624450518828'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2005/09/blog-post.html' title='நான் காட்சி மனிதன்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-112420789486669936</id><published>2005-08-16T21:15:00.000+05:30</published><updated>2005-08-16T21:28:14.876+05:30</updated><title type='text'>அவர்கள் கற்பிழந்துவிட்டார்கள் - அப்துல் ரகுமான்</title><content type='html'>&lt;em&gt;சுலைஞர் மு. கருணாநிதி கலந்துகொண்ட இளையபாரதி நூல் வெளியீட்டு விழாவில் (5.10.2003) அசோகமித்திரன், ஞானக்கூத்தன். வண்ணதாசன், வேல. இராமமூர்த்தி, கலாப்ரியா, இன்குலாப், பா. கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர். அசோகமித்திரன் தவிர ஏனையோர், கலைஞரைப் போற்றிப் பேசினர். இதற்கு அடுத்த நாள், ஜெயமோகன், இந்தத் தீவிர இலக்கியவாதிகளை விமர்சித்தும் கலைருரின் படைப்புகள், இலக்கியம் அல்ல என்றும் ஒரு தீக்குச்சியைக் கிழித்துப் போட்டார். அது, குப்பென்று பற்றிப் பரவத் தொடங்கிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இளையபாரதி விழாலில் பேசிய அப்துல் ரகுமான், "இதுவரை ஒதுக்கி வைத்திருந்த இவர்கள், மேடையில் இடம் கொடுத்தவுடன் புகழத் தொடங்கிவிட்டார்கள்" என்று வெளிப்படையாகச் சொன்னது, இந்தச் சர்ச்சையைப் பெரிய அளவில் தூண்டிவிட்டது. இதைத் தொடர்ந்து வாத - பிரதிவாதங்கள் நடந்தவண்ணம் இருக்க, சிற்றிதழ்ப் படைப்பாளிகள் மீதான அப்துல் ரகுமானின் பார்வையைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் எழுந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பல சர்ச்சைகளைத் தூண்டக்கூடிய அந்த நேர்காணல் இதோ;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரச்சாரம், இலக்கியம் ஆகுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரபல இதழ்களில் எழுதுவோர், சிற்றிதழ்வாதிகள் என எப்போதுமே இரு பிரிவுகள் உண்டு. அவர்கள், எங்களைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறார்கள். இது, நேர்மையில்லாத &lt;br /&gt;செயல் எங்களுக்கு எழுதத் தெரியாது என்று சொன்னால் யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த குற்றச்சாட்டு, திராவிட இயக்கம், படைப்பாளிகளை உருவாக்கவில்லை என்பது. முதலில் திராவிட இயக்கம், கலை - இலக்கிய அமைப்பல்ல; விடுதலை இயக்கம். ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் என்ற அமைப்பு உள்ளது. அது, ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டது. எழுதியோர், கவிஞர்கள் அல்லர். போராளிகள். 'கவிதை எங்கள் ஆயுதம்' (poetry is our weapon) என்று அவர்கள் முழங்கினார்கள். இப்படிப் பலர் இனப் போராட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். கருப்பர் கவிதை (Black poetry) என்பது உலக அளவில் பெரிதாகச் சுட்டப்படுகிறது. கருப்பின மக்களை அடுத்து, பாலஸ்தீனக் கவிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இராக்கில் குர்திஷ் கவிஞர்கள் சிறப்பானவர்கள். இவர்களின் கவிதைகளோடு 30, 40 வலைத்தளங்கள் உள்ளன. அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கம், நிறைய கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பொதுவுடைமை நாடுகளிலும் இந்தப் போக்கு உண்டு. பிரச்சார இலக்கியத்தை உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே வேலையைத்தான் திராவிட இயக்கம் செய்தது, கலைஞரும் அண்ணாவும் இலக்கியத்தின் மூலம் பேரளவில் மக்களைக் கவர்ந்தார்கள், அதன் மூலம் ஆட்சிக்கும் வந்தார்கள். இது, கலை, இலக்கியம் பெற்ற வெற்றி. இது இலக்கியம் இல்லை என்றால் அவனுக்கு இலக்கியத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிச் சொல்பவன் ஆத்திகனாய் இருக்கலாம். பிராமண வழியில் வந்தவனாய் இருக்கலாம்; காங்கிரஸ்காரனாகவோ தேசியவாதியாகவோ இருக்கலாம். ஆக, திராவிடத்துக்கு எதிரானவன். இதை அரசியல் களத்தில் பேசலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் தேசிய - சுதேசிப் பாடல்களை வெள்ளைக்காரன் ஒப்புக்கொள்வானா? அப்படிப்பட்டது, இது. பாரதி, கவிதையில் பிரச்சாரம் செய்தால் அது இலக்கியம் ஆகிறதாம். பாரதிதாசன் அப்படிப் பாடினால் அது, இலக்கியமாக இல்லையாம், இது, இரட்டை வேடம். &lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சாரம் செய்த சைவ- வைணவப் பாடல்களை இலக்கியம் இல்லை என்று சொல்வாயா? திராவிட இயக்கப் படைப்புகள் மட்டும் இலக்கியம் இல்லை எனில் உன் நோக்கம் வேறு என்று தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிற்றிதழ்கள் மீதான உங்கள் மதிப்பீடு என்ன?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;'மணிக்கொடி', 'சரஸ்வதி' காலத்தில் வேறாக இருந்தது, 'எழுத்து' ஆரம்பித்தபோதே (Polimics)&lt;br /&gt;தமிழ்ப் புலவர்களை ஏசுவது தொடங்கியது. பிழையான தமிழ் நடையிலும் எழுதினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிழையான தமிழ்நடை என்றால்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எழுத்தை'ப் படித்துப் பார்த்தால் தெரியும். வாக்கியப் பிழைகள் நிறைய இருக்கும். இப்படிச் செய்துகொண்டே தமிழ்ப் புலவர்களை ஏசினார்கள். பேராசிரியர்களுக்கு இலக்கியம் தெரியவில்லை என்று சி.சு. செல்லப்பா குற்றம் சாட்டி வந்தார். நான் அவரை விமர்சித்தேன். பேராசிரியர்கள் மொழியாசிரியர்களே. அவர்கள் படைப்பாளிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சி.சு. செல்லப்பாவை மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேசுமாறு பேராசிரியர்கள் அழைத்தார்கள். அதற்குப் பிறகு அவர் பேராசிரியர்களைத் திட்டுவதை விட்டுவிட்டார். இது, நேர்மை யில்லாத செயல். &lt;br /&gt;&lt;br /&gt;சிறுபத்திரிகை நடத்தியோர் அனைவரும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளைத் திட்டினார்கள். இப்போது அதற்கே எழுதுகிறார்கள். அது, கற்போடவும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கற்போடவும் இல்லை என்றால்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;300 பிரதிக்கு மேல் அச்சிட்டால் சிறு பத்திரிகை இல்லை. பெரிய பத்திரிகைகளுக்கு விற்பனைதான் நோக்கம்; இலட்சியத்தைப் பற்றிக் கவலையில்லை என்று பேசினார்களே, இப்போது அந்தப் பத்திரிகைகளில் எழுத வந்துவிட்டார்கள். இன்றும் வணிகப் பத்திரிகைகளில் கவர்ச்சிப் படம் போடுகிறார்கள். 'எங்கே மச்சம் இருக்கு' என்று தேடச் சொல்கிறார்கள். அந்தப் பத்திரிகைகளுக்கு ஏற்ப இவர்கள் எழுத வந்ததாகத்தானே அர்த்தம். சினிமாவுக்கும் டி.வி.க்கும்கூட வந்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வணிக இதழ்களின் இலக்கியக் கண்ணோட்டம் மாறியிருக்கலாம் இல்லையா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜனங்களுக்குத் தேவையானதைக் கொடுக்காவிட்டால் அவை விழுந்துவிடும். இது, வெறும் வாய்ப்புக்காக எழுதுவது. வணிகப் பத்திரிகைகளுக்குக் கலவையான வாசகர்கள் (Mixed readers) உண்டு. அந்தப் பத்திரிகைகளை நானும் வாங்குகிறேன். தீவிர இலக்கியவாதி என்று சொல்கிறவனும் வாங்குகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;வணிகப் பத்திரிகை என்பது, ஓட்டல் மாதிரி; எல்லா உணவையும் வைத்திருக்கும். எது வேண்டுமோ அதைச் சாப்பிட்டுக்கொள்ளலாம். போண்டா வேண்டுவோர் அதைச் சாப்பிடட்டும். அதற்காக, தோசை மட்டும்தான் உணவு, மற்றது உணவே இல்லை என்றால் எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றிதழாளரின் படைப்புகளில் ஆபாசம், வக்கிரம், அசிங்கமாக எழுதுதல் அதிகமாகிவிட்டது. பெண் கவிஞர்கள், 'யோனி கடுக்கிறது' என்று எழுதியுள்ளார்கள். இதற்குக் 'கூப்பிடுவதாக' அர்த்தமா? இதை இலக்கியம் என்கிறார்கள். ஓர் இனத்தை எழுப்புவது இலக்கியம் இல்லையாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களை இருட்டடிப்பு செய்ததாய்ச் சொன்னீர்களே?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எங்களை இருட்டடிப்பு செய்ய முடியாது. கண்ணதாசனையோ என்னையோ, வைரமுத்து, தமிழன்பன், இன்குலாப், சிற்பி, புவியரசு போன்றோரையோ மறைக்க முடியாது. பூனை, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா? ஏற்கெனவே நாங்கள் மக்களுக்கு அறிமுகமானவர்கள். நாங்கள் எழுதிய ஒன்றுகூட கவிதை இல்லை என்றால் அது, அயோக்கியத்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;'புறநானூற்றிலிருந்து இன்றுவரை' என்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார்கள். அதில் பாரதிக்குப் பிறகு சிறு பத்திரிகைக் கவிஞர்களுக்குத் தாவிவிட்டார்கள். இடையில் முன்பு சொன்ன யாருமே இல்லை. யாரோ குப்புசாமி, ராமசாமி பற்றி எழுதியுள்ளார்கள். சிறுகதைகளைத் தொகுத்தபோதும் இப்படி ஒரு மோசடி நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற நூலுக்காக ஜெயகாந்தனைச் சிவசங்கரி பேட்டி எடுத்தார். அப்போது, திராவிட இயக்கம் கவிஞர்களைத் தரவில்லையா? என்று கேட்டார். 'கண்ணதாசனும் அப்துல்ரகுமானும் திராவிட இயக்கம் தந்த கவிஞர்கள்தானே' என்று ஜெயகாந்தன் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இப்போதைய சிற்றிதழ் உலகம் எப்படி இருக்கிறது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அநாகரிகமாக அவதூறு பேசுவதும்  ஏசுவதும் சிற்றிதழ்களிடம் அதிகரித்துள்ளது. 'நாயே பேயே' என்றுகூட திட்டிக்கொள்கிறார்கள். உடல் ஊனத்தைக் கேலி செய்வது, மனித இனத்திலேயே மிகப் பெரிய அநாகரிகம். ஒரு கவிஞரை 'நொண்டி நாய்' என்று வசை பாடியுள்ளார்கள். இது, கீழ்த்தரமான பண்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;கூவத்தில் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு வெளியீட்டு விழா என்கிறார்கள். கவிஞர்கள், சாராயக் கடையில் கூடிக் கூட்டம் நடத்தி, அடிதடியாகி ஒருவரின் பல்லே உடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இளையபாரதி விழாவில் அசோகமித்திரன் பேச வந்தபோது, 'கலைஞரே' என்றோ, 'அவைத் தலைவரே' என்றோ அழைக்காமல் நேரடியாக இளையபாரதி கவிதையைக் குறித்துப் பேசத் தொடங்கிவிட்டார். அவருக்கு மேடை நாகரிகம் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிற்றிதழாளர்கள் நாகரிகமில்லாமல் ஏசிக்கொள்வது இருக்கட்டும். திராவிடக் கட்சிகளின் பேச்சாளர்கள் எந்தத் தரத்தில் பேசுகிறார்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது இங்கே தேவையில்லாதது. திராவிடக் கட்சி மட்டும்தான் அப்படிப் பேசுகிறதா? எந்தக் கட்சிதான் நாகரிகமாகப் பேசுகிறது? அவர்களைவிட மேம்பட்ட அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்வோர் இப்படி நடக்கலாமா? என்பதுதான் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நல்ல கருத்தை எதுகை மோனையோடு சொன்னால் அது இலக்கியமாகிவிடுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலங்காலமாக அதுதான் நடந்து வருகிறது. இப்போது சொல்லும் புதிய மதிப்பீடுகள் எல்லாம் இனித்தான் நிலைபெற வேண்டும். எதுகை மோனை இல்லாமல் குப்பை கூளம் எழுதினால் அது மட்டும் இலக்கியமாகிவிடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் எழுதிய எல்லாவற்றையுமே இலக்கியம் என்று நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு பத்திரிகையாளர். பலவிதமான வடிவங்களில் அவர் எழுத வேண்டியிருக்கும். பாரதிக்கும் இதேதான். எழுதிய எல்லாமே இலக்கியமாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைசிறந்த படைப்புகள் என்று பட்டியல் போடுவது குறித்து...?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க.நா.சு. கூட இதைத்தான் செய்தார். சுந்தர ராமசாமியின் முன்னிலையில் க.நா.சு.விடம் கேட்டேன். 'எங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் மக்களிடமிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். ஏற்கெனவே மக்களிடம் அறிமுகமாகிவிட்டோம்' என்றேன். 'உங்கள் 'பால்வீதி' நூல் பற்றிக் கட்டுரை எழுதி வைத்திருந்தேன். அந்தப் பிரதி காணாமல் போய்விட்டது' என்றார். அது சும்மா. காணாமல் போனால் மீண்டும் எழுத முடியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;300 பேர் என்று சொல்வது எதனால்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் போல் 300 பேர்தானா? அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? முகவரியாவது கொடுங்கள் என்று நானும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். கேரளாவிலும் இதே 300 பேர் என்றுதான் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை படைப்பைப் பல்லாயிரம் பேர் படிக்கவேண்டும். அப்போதுதான் படைப்பின் நோக்கம் வெற்றியடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://www.amudhasurabi.com"&gt; அமுதசுரபி&lt;/a&gt;, நவம்பர் 2003)&lt;br /&gt;----------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 2003 இதழில் கவிக்கோ அப்துல் ரகுமான், சி.சு.செல்லப்பா மீது ஒரு குற்றம் சாட்டியிருந்தார். 'மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேச அழைத்த பிறகு சி.சு.செல்லப்பா, பேராசிரியர்களைத் திட்டுவதை விட்டுவிட்டார்' என்ற கூற்று, உண்மையில்லை. நான் அவருடன் நெருங்கிப் பழகியவன். அவர் கடைசிவரை பேராசிரியர்களைத் திட்டிக்கொண்டுதான் இருந்தார். தற்கால இலக்கியத்தில் தற்போது நாட்டம் காட்டத் தொடங்கிவிட்ட பேராசிரியர்களை ஏசுவது சரியில்லை என்று நானும் அவரிடம் கடைசிவரை எடுத்துச் சொல்லிக்கொண்டுதான் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;- &lt;strong&gt;முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்&lt;/strong&gt;&lt;br /&gt;    (பால்நிலவனின் 'சூரிய முற்றம்' நூல் விமர்சனக் கூட்டத்தில்) &lt;br /&gt;&lt;br /&gt;((&lt;a href="http://tamil.sify.com/amudhasurabi/jan04/index.php"&gt; அமுதசுரபி&lt;/a&gt;, ஜனவரி 2004)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-112420789486669936?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/112420789486669936/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=112420789486669936' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112420789486669936'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112420789486669936'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2005/08/blog-post_16.html' title='அவர்கள் கற்பிழந்துவிட்டார்கள் - அப்துல் ரகுமான்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-112402960548330945</id><published>2005-08-14T19:47:00.000+05:30</published><updated>2005-08-14T20:46:59.573+05:30</updated><title type='text'>வியர்வையில் சுடரும் பாவை விளக்குகள்....</title><content type='html'>&lt;h3&gt; பணிபுரியும் பெண்களின் சிக்கல்கள்-ஒரு பார்வை &lt;/h3&gt; &lt;br /&gt;&lt;em&gt;சூரிய ஒளிபடாமல் சுவருக்குள் வாழ்ந்தவர்கள் இன்று காற்று வெளியெங்கும் கால்பதித்துவிட்டார்கள். மலர்கள் வாசத்தில் மனம்கிறங்கியவர்கள் இன்று வியர்வை வாசத்தில் விலங்குடைக்கிறார்கள். விரைவில் மெரீனாவில் பெண் உழைப்பாளர் சிலைக்கு அவர்கள் உரிமை கோரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புதுமைப் பெண்கள், புத்துலகச் சிற்பிகள் சந்திக்கும் சவால்கள் எண்ணற்றவை. இவர்களின் கைச்சுமையைவிட மனச்சுமை அதிகம். வீட்டிலும் வெளியிலும் பணியாற்றும் இரட்டைப் பொறுப்பு இவர்களுக்குண்டு. உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு உழைக்கும் பெண்கள் சிலரிடம் அவர்களின் சிக்கல்கள் குறித்துக் கேட்டோம். இந்த நடமாடும் சுமைதாங்கிகள் தங்கள் சுமையில் கொஞ்சத்தை இங்கே இறக்கி வைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;1. மணிமேகலை சுப்ரமண்யம் (அரசு ஊழியர்) &lt;br /&gt;2. சிந்து (தனியார் நிறுவன ஊழியர்) &lt;br /&gt;3. கோமளவல்லி (சுயதொழில் முனைவோர்) &lt;br /&gt;4. சீதா அருணாசலம் (தொழிலதிபர்) &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமதி மணிமேகலை சுப்ரமண்யம் (அரசு ஊழியர்)&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் வேலைக்குப் போவதே பிரச்னையாக இருந்த காலம் மாறி, பெண்களும் வேலைக்குப் போனால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண் காலையில் எழுந்து முறைவாசல் முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்துப் பின் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தயார்படுத்திவிட்டு வேலைக்குச் செல்கிறாள். பின்னர் ஒவ்வொரு பெண்ணும். பி.டி.உஷாவாக அவதரித்து ஓடிச் சென்று பல்லவனிலோ, மின்சார ரயிலிலோ, பறக்கும் ரயிலிலோ இடம் பிடிக்க வேண்டிய அவசியம். இவற்றைச் சார்ந்திராத பெண்களாக இருந்தாலும் பெட்ரோல் பங்க் கியூவுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அத்தனையும் தாண்டி அலுவலகம் சென்று அட்டென்டன்ஸ் தரவேண்டிய அவசியம். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு நினைவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அலுவலகப் பணிகளைச் செய்யும் அடுத்த அவதாரம். அரசாங்க எந்திரத்தில் ஒரு பற்சக்கரமாக மாறிப் பணியாற்ற வேண்டிய சூழல். அதற்கு ஆண், பெண் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. 'பத்து மணிக்கு உள்ளே வா; ஐந்தரைக்கு வெளியே போ' என்று சொல்லும். 'விதிக்கப்பட்ட வேலையைச் செய்' என்று சொல்லும். எல்லோருக்கும் ஒரே சட்டம். ஒரே நடத்தை விதி. வேலை கடினம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒரு பணிக்குத் தகுதியானவர்தான் தேர்வு பெறுகிறார். அவரும் பணியாற்ற ஒப்புக் கொண்டுதான் உள்ளே வருகிறார். கிட்டத்தட்ட இயந்திர வாழ்க்கைதான் இன்றைய பெண்களின் நிலை. &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் அலுவலகம் விட்டு வீடு திரும்பும்போது தன்னைச் சார்ந்திருக்கும் மாமனார், மாமியார், கணவன், குழந்தைகள் அனைவருக்கும் அவரவர் தேவை உணர்ந்து கவனித்துக் கொள்வதில் மனம் நிறைகிறாள். இன்று பல குடும்பங்களில் கணவன்மார்கள் தம் மனைவிக்குச் சரிபாதி உதவி வருவதால் இந்த இயந்திர வாழ்க்கையும் சற்று இனிமையாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செல்வி சிந்து (தனியார் நிறுவன ஊழியர்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்குச் செல்லும் பெண்களின் இன்றைய நிலை மிகவும் மோசமாகவும் இல்லாமல் நன்றாகவும் இல்லாமல் நடுநிலையாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வேலைகளையும் வீட்டார் வேலைகளையும் செய்துவிட்டு அரசுப் பேருந்துக்காகக் கால்கடுக்க நின்று, வரும் பேருந்தில் அலைமோதும் கூட்டத்தில் தன்னைச் சிறு எறும்புபோல் நுழைத்துக் கொண்டு நின்று வேர்வை வழியும் முகத்தைத் துடைக்கும் போது பேருந்தில் தங்கள் மேல் உராயும் பேர்வழிகளைக் கடிந்து கொள்வதைவிட வேறு என்ன செய்ய முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் பெண்கள் எந்த வேலையில் இருந்தாலும் அவர்களுக்குத் தனிச்சலுகை கிடைப்பது மறுக்க முடியாத ஒன்று. சில சமயங்களில் சலுகை தர முடியாதபோது அம்மாதிரி வேலைகள் ஆண், பெண் இருவருக்கும் சமமானதாகவே இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;சில அலுவலகங்களில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடங்களில் கேமராக்கள் வைத்துள்ளனர். நிறுவனத்தின் இயக்குநர் தங்கள் அறைகளில் இருந்தவாறே பணியாளர்கள் வேலை செய்கிறார்களா என்று கண்காணிக்கின்றார். கட்டுப்பாடுகள் அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனை, பள்ளி, உணவு விடுதி போன்ற இடங்களுக்கு அதிக மக்கள் நாள்தோறும் புதிது புதிதாய் வருவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பர். அவர்கள் கடிந்து கூறும் சொற்களையும் பொருட்படுத்தாமல் பணியாற்ற வேண்டும். எவ்வளவுதான் வேலை செய்தாலும் கிடைக்கும் வருமானம் என்னவோ மிகவும் குறைவாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;பல அலுவலகங்களில் பெண்களையே வேலைக்கு வைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்த்துப் பேசமாட்டார்கள்; சம்பளம் குறைவு; முக்கியமாக நிறுவனத்திற்கு எதிராகச் செயல்படும் 'யூனியன்' அமைப்பதில்லை. அது ஒன்றே நிறுவனத்தின் பாதி தலைவலியைக் குறைத்து விடுகிறது. ஆனால் பெண்களின் வலிகள் குறைவதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமதி கோமளவல்லி (சுயதொழில் முனைவோர்)&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் சுகாதாரவியல் பொருட்களை உற்பத்தி செய்து விற்று வருகிறோம். பொதுவாக இத்துறையில் திறமையான தொழிலாளர் கிடைக்காமை, கடனுக்குப் பொருள் பெற்றோர் தொகை தராமல் இழுத்தடிப்பது, சுற்றுச்சூழல் மாறுபாட்டால் பொருள் விற்காமல் போவது, மூலப்பொருள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல் என்றால், இரவு நேரத்தில் வாடிக்கையாளரிடம் சென்று பில்லுக்குக் கலெக்ஷன் செய்ய முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வேலைகளையும் கவனிக்க வேண்டி இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில்தான் பணியாற்ற முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;வங்கியில் தனியொரு பெண்ணாகச் சென்று கடன் கேட்டால் உங்கள் கணவர் உத்திரவாதக் கையொப்பம் இடுவாரா? என்று கேட்பார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;100 சதுரஅடி இடத்துக்கு வாடகை ரூ.4000/- முன் தொகை பத்து மாத வாடகை என்றுள்ளது. இப்படிப்பட்டதை ஒரு பெண் தனியாகச் செய்ய முடியாது. மிகப் பெரிய அளவிலான தொழிலில் மிக அதிகமாக அலைந்து, திரிந்து செய்ய வேண்டி இருக்கும். அவ்வளவையும் ஒரே பெண் கவனிப்பது கடினம். சிறிய அளவிலென்றால் ஒரு பெண் சிறப்பாகச் செய்ய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம், பிரசவம் என்றால் ஓரிரு மாதங்கள் விடுப்பெடுக்க வேண்டி இருக்கும். இந்த வேலைக்கு விடுப்பே எடுக்க முடியாது. ஓய்வெடுக்கவும் முடியாது. ஏனெனில் தொலைபேசி அழைப்பு எந்நேரமும் வரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;சிலர் பெண் என்றால் எளிதில் ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். தவறான தகவல்களைக் கூறி வணிக ரீதியாக நம்மைத் திசை திருப்ப முயல்வோர் உண்டு. அத்தகையவர்களிடம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;வாடிக்கையாளர் எத்தகையவர் என்று அனுமானிப்பது அவசியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருப்பர். அவர்களின் மனம்கோணாமல் பேசி வணிகம் செய்ய வேண்டி இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பண விஷயத்தில் ஆணைவிடப் பெண்தான் வலிமையானவள் எனக் கருதுகிறேன். பெரும்பாலும் ஆண் தடலடியாகப் பணம் செலவழித்து வணிகத்தை உயர்த்த முயற்சிக்கலாம். ஆனால் பெரும்பாலும் பெண் மிகவும் சிக்கனமாக, கவனமாகப் பணத்தைக் கையாளுகிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;வணிகத்தில் கஷ்டநஷ்டங்கள் இருக்கவே செய்யும். ஆனால் அவற்றை எதிர்கொள்ளும் மனோதிடம் பெண்களுக்குண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமதி சீதா அருணாசலம் (தொழிலதிபர்)&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எங்களின் ஈஸ்டர்ன் குரூப் ஆஃப் கம்பெனீஸில் மொத்தம் ஐந்து தொழில்கள் உள்ளன. இவற்றின் நிர்வாக இயக்குநராய்க் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். நாங்கள் ISO 9002 தரச் சான்றிதழையும் பெற்றுள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை பணிபுரியும் பெண்களுக்கென்று தனியான சிக்கல் எதுவும் இல்லை. இப்போது ஆணாதிக்கம் இல்லை. பெண்களுக்கு எல்லா இடத்திலும் ஒத்துழைப்பு தருகிறார்கள். மதிப்பு, மரியாதை அளிக்கிறார்கள். கட்டுப்பெட்டித் தனமான காலம் மாறிவிட்டது. இப்போது எல்லா இடத்திலும் பெண்களை ஏற்றுக் கொள்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு குடும்பத் தலைவிக்குரிய கடமையினையும் நான் நன்கு ஆற்றுகிறேன். எவ்வாறெனில் நான் வீட்டுக்குப் போனதும் அலுவலகத்தைப் பற்றி நினைப்பதில்லை. நேரப் பகிர்வைச் சரியாகச் செய்கிறேன். நேரப் பயன்பாட்டுத் தொழில்நுட்பத்தினால் வீடு, அலுவல் இரண்டையும் என்னால் சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். பல கருத்தரங்குகளில் கலந்து நாளும் என்னைத் தகுதி படைத்து வருகிறேன். தகுதியான நபர்களிடம் பணி ஒப்படைவு செய்து முறையாகக் கண்காணிக்கிறேன். பணியாளர்களுக்கு ஊக்கமூட்டி அவர்கள் உற்சாகமாகப் பணியாற்ற உதவுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;'மனம்போல் வாழ்வு' எனப் பெரியோர்கள் சொல்லியுள்ளனர். நான் எதையும் சிக்கலாகக் கருதுவதில்லை. அதனால் எனக்கு எதுவும் சிக்கலில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;(நன்றி : &lt;a href="http://www.ambalam.com/idhal/podhu/2000/march/podhu12_07.html"&gt; அம்பலம் &lt;/a&gt; மின்னிதழ் / 12-3-2000)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-112402960548330945?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/112402960548330945/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=112402960548330945' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112402960548330945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112402960548330945'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2005/08/blog-post_112402960548330945.html' title='வியர்வையில் சுடரும் பாவை விளக்குகள்....'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-112402861399947941</id><published>2005-08-14T19:31:00.000+05:30</published><updated>2005-08-14T20:47:50.426+05:30</updated><title type='text'>இந்த நூற்றாண்டில் கவிதை...</title><content type='html'>&lt;em&gt;கவிதை என்ற பிரபஞ்ச அழகி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வோர் ஆடை அலங்காரத்துடன் உலா வருவாள். 2000 என்ற கவர்ச்சிகரமான எண்ணுக்குள் இப்போது அவள் நுழைகிறாள். இந்தத் தளத்தில் அவள் எப்படி இருப்பாள்? இதோ முன்னணிக் கவிதையாளர்களின் முன்னோக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;1. அப்துல் ரகுமான் &lt;br /&gt;2. இன்குலாப் &lt;br /&gt;3. பழநி பாரதி &lt;br /&gt;4. மு.மேத்தா &lt;br /&gt;5. ஈரோடு தமிழன்பன் &lt;/em&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எதிர்காலக் கவிதை - அப்துல் ரகுமான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகி திரைக்குள் மறைந்திருந்தாலும், அவளுடைய சிரிப்பொலி, வளையலின் சிணுங்கல், மெட்டியின் கிணுங்கல் அவளை ஓரளவுக்கு அறிமுகப்படுத்திவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாவிட்டாலும், நிகழ்காலத்தைக் கொண்டு அதன் அடையாளங்களை ஓரளவுக்கு அறிந்துகொள்ளலாம். ஏனெனில் நிகழ்காலம் எதிர்காலத்தின் விதை. &lt;br /&gt;&lt;br /&gt;புதுக்கவிதை சகல தளைகளிலிருந்தும் விடுதலை என்ற உணர்வை உண்டாக்கியிருக்கிறது. தொடக்கத்தில் உருவம் தொடர்பாகவும், ஓரளவுக்கு உள்ளடக்கம் தொடர்பாகவும் எழுந்த இந்த உணர்வு இப்போது உள்ளடக்கத்தில் வேகமாகப் பரவி வருகிறது. எனவே எதிர்காலக் கவிதை ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஓங்கி ஒலிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய மின்னணுத் தொடர்புச் சாதனங்களால் கலாசாரக் கலப்பு நிகழ்ந்து வருகிறது. இதனால் சில இழப்புகளும், சில லாபங்களும் கிடைக்கும். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் எதிர்காலக் கவிதையில் பிரதிபலிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல், உளவியல் கண்டுபிடிப்புகளால் பிரபஞ்சத்தின் புதிர்களும், மனித மனத்தின் மர்மங்களும் அவிழ்ந்து வருகின்றன. இதனால் வருங்காலக் கவிதை உயரங்களில் பறக்கும். ஆழங்களில் மூழ்கி அதிசயங்களை எடுத்து வரும். &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை ஜனநாயகப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அது நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. கரையுடைத்துக் கொண்டு பாயும் இந்தக் காட்டு வெள்ளத்திற்கு வருங்காலம் கரை கட்டும், வயல்களுக்குப் பாய்ச்சும் என்று நம்பலாம். &lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மண்ணின் மரபுகளில் இருந்து... - இன்குலாப்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க் கவிதையின் வடிவமும் உள்ளடக்கமும் காலம்தோறும் மாறுதல்களுக்கு உட்பட்டிருக்கின்றன. ஏனெனில் கலைகள் இயங்குவன. கவிதை, கலைகளுள் தலைவி என்கிற முறையில் கூடுதலாக இயங்கும் தன்மையைக் கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இயக்கம் என்பது மாறுதலைப் பண்பாக வரித்துக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மேலைக் கவிதை மரபின் தாக்கம் தமிழ்க் கவிதையின் மீது படிய ஆரம்பித்து விட்டது எனலாம். பாரதி இதனைத் தொடங்கி வைத்தார். வால்ட் விட்மனை அவர்தான் தமிழுக்கு முதலில் முன்மொழிந்தவர். வசன கவிதைகளை அவர்தான் முதலில் படைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் &lt;br /&gt;செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்' &lt;br /&gt;&lt;br /&gt;என்ற வேண்டுகோளைக் கலைஞர்களுக்கு வைத்தவர் அவர்தான். ஜப்பானிய ஹைக்கூ வடிவங்களை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். இவ்வாறாக இந்த நூற்றாண்டின் கவிதை, புதுக்கவிதையாகத் தளும்பி வழிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நூற்றாண்டிலும் இந்த மேலை வரவுகள் நீடிக்கத்தான் செய்யும். ஆனால் இந்த மண்ணின் மரபுகளில் இருந்து புதுவகை இலக்கியங்களைப் படைக்கும் முயற்சி கூடுதலாகும் என்று நம்புகிறேன். அதில் இருவகையான போக்குகள் இருக்கக் கூடும். ஒன்று: செவ்விலக்கியம் சார்ந்த, மரபு சார்ந்த கவிதைகளில் இருந்து படைக்கப்படக் கூடியதாகலாம். மற்றொன்று: வாய்மொழி மரபுகளில் (விடுகதை, நாட்டுப்புறப் பாடல், தெம்மாங்கு, பழமொழிகள்) இருந்து இந்த நூற்றாண்டு விட்டுச் செல்லும் ஆற்றல்மிகு புதுக்கவிதையின் வளமான மரபோடு இணைந்து ஒரு புத்திலக்கிய வகை தோன்றும். கல்வி பரவுவதன் காரணமாக இந்த இரண்டாவது வகைப் போக்கு பெருவாரியான மக்களின் கவிதையாக உச்சரிக்கப்படும். இந்த மரபு உலக மரபுகளில் ஒன்றாகவும் வெளிநாட்டாரால் ஏற்கப்படும் என்றும் நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;ரசனையில் தேர்ச்சிகொள்ளும் ஒரு சூழல், சிறு வட்டமாகச் சுருங்காது விரிவடையும் என்பதால் இன்றைய வணிகத் தன்மை மிக்க, ஆழமற்ற கவிதைகள் மறுதலிக்கப்பட்டு சரியான கவிதைகள் பெருவாரியான வாசகர்களால் அடையாளம் காணப்படும் என்றும் நான் நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிதைக் காற்றில் தாய்மொழி - பழனிபாரதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியனின் பலகணியிலிருந்து உலகைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதை, காலம் கடந்து, இடம்பெயர்ந்து, வடிவம் கலைந்து இன்று பில்கேட்சின் ஜன்னலிலிருந்து (Windows) உலகைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நேசிக்கிற தாயின் கண்கள், காதலிக்கிற பெண்ணின் கண்கள், முதல்முறையாக உலகைப் பார்க்கும் குழந்தையின் கண்கள் எல்லாம் கலந்து பிரகாசிக்கிறது கவிதையின் பார்வை. &lt;br /&gt;&lt;br /&gt;காலத்தின் மாற்றத்தில் உத்திகள் மாறும்; வடிவங்கள் மாறும்; உள்ளடக்கம் மாறும். ஆனால் கவிதையின் தேவை இருந்துகொண்டே இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பூமியின் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னதிலிருந்து கடைசி மனிதனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துகிறவரை கவிதையை வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்கவே இயலாது. ஏனென்றால் கவிதை காற்றின் தாய்மொழி. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு 'கவிதை செத்துவிட்டது' என்று அழுகிறவனின் கண்ணீரில்கூட கவிதையின் ஈரம்தான் பிசுபிசுக்கிறது. 'இது கவிதைக்கான காலமல்ல; உரைநடைக்கான காலம் என்று' எழுதுகிறவனைக் கூட கவிதைதான் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. கவிதை, இதயத்திற்கும் மூளைக்கும் இடையில் பாலமாகி நின்றுகொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;"நிலா நிலா ஓடிவா &lt;br /&gt;நில்லாமல் ஓடிவா" &lt;br /&gt;&lt;br /&gt;என்ற கவிதையின் இதயம்தான் ஆம்ஸ்டிராங்கின் அறிவியல் மூளைக்கு 'நிலாச்சோறு' ஊட்டியிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை ஓர் உயிர்ப்புச் சக்தி. உலகை அழிக்க நிற்கும் கடைசி விஞ்ஞானியைக் கூட விதை நெல்லைக் கொடுத்து அவனை உழவனாக்கி விடும். &lt;br /&gt;&lt;br /&gt;இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்பதல்ல; எந்தக் காலத்தின் புழுதியும் கவிதையின் ஆகிருதியை மூடிவிட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எதிர்காலக் கவிதை எப்படி இருக்கும்? - மு.மேத்தா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கவிதைக்கு எதிர்காலம் உண்டா?' என்று சிலர் கேட்கிறார்கள். 'கடலுக்கு எதிர்காலம் உண்டா?' என்று கேட்பது போன்றது இது. &lt;br /&gt;&lt;br /&gt;உரைநடையின் அதிவேக வளர்ச்சியை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதேசமயத்தில் கவிதையின் இடத்தை வேறு எதுவும் கைப்பற்ற முடியாது. விழுதுகள் கூடி வேர்களை அழிக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;உரைநடை, அறிவைத் தொடும், கவிதையோ உணர்வைத் தொடும். இலக்கியம் என்ற குடும்பத்தில் உரைநடை தந்தை என்றால், கவிதைதான் தாய். &lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் எந்த மொழியிலும் முதலில் தோன்றியது கவிதையே. ஆதிமனிதன் உணர்வுகளால் வாழ்ந்தவன். அவனுடைய வெளிப்பாடு அனைத்தும் கவிதையாகத்தான் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;உலகமெங்கும் இன்று உரைநடை செல்வாக்குப் பெற்றுள்ளது. உள்ளமெங்கும் கவிதையே அரசாட்சி செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கவிதை தன் வழக்கமான வடிவங்களை மாற்றிக்கொண்டு உரைநடையின் சாயலை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. புதுக்கவிதை, வசன கவிதை, நவீன கவிதை என்று கவிதையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;கவிதையின் வடிவங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் கவிதை எதுவோ அது ஒருபோதும் மாறாது. &lt;br /&gt;&lt;br /&gt;வெறும் உரைநடை வரிகளை, துண்டு துணுக்குகளை, நகைச்சுவைத் தோரணங்களை, வசனத்தால் அமைந்த வர்ணனைகளைக் கவிதை என்று சாதிப்போர் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;உலக இலக்கியங்களைப் படித்த அதிமேதாவித்தனத்தால் அறிவு ஜீவிகள் என்று தங்களை அழைத்துக்கொள்கிற சிலர், 'இதுதான் கவிதை' என்று சாதிப்பதெல்லாம் எதிர்காலத்தில் எடுபடாது. அவர்களுடைய கவிதைகள் கவிதைகளைப் போல் அல்லாமல் மொழிபெயர்ப்புகளைப் போல் விளங்குவதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அன்னிய மொழிகளை ஆர்வத்தோடு படித்து அதிமரியாதை செய்பவர்கள் எந்த மொழியில் எழுதுகிறார்களோ, அந்த மொழியின் மீது மதிப்பும், மரியாதையும் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் தம்முடைய தொன்மையான தமிழ் இலக்கியச் செல்வங்களின் அருமையை அறிந்துகொள்ளாமல், அன்னியச் சிந்தனைகளுக்கே ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்கள். கவிதை அவர்களுடைய கையில் சிக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;'மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீர்' என்ற நாட்டுப் பாடகனின் கற்பனை உணர்வுதான் கவிதை. பார்த்தவுடன் அவனுக்கு ஏற்படுகிற பரவசம். அறிந்தவுடன் நிகழ்கிற அனுபவம். அதுதான் கவிதை. &lt;br /&gt;&lt;br /&gt;அதை விடுத்து சர்ரியலிசம், ரொமாண்டிசிசம், மார்டனிசம், போஸ்ட்மார்டனிசம் என்றெல்லாம் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பவர்கள், படிப்பாளிகளாக இருக்க முடியுமே தவிர, படைப்பாளிகளாக ஒருநாளும் விளங்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று சிற்றிதழ்களிலிருந்து பிரபலமான பெரிய பத்திரிகைகள் வரை கவிதையல்லாத கவிதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெறும் உரைநடை வர்ணனைகளை இருபத்தியிரண்டு வரிகள் எழுதி முடித்தபிறகு, இரண்டே இரண்டு வரியில் ஒரு கவிதைச் சிந்தனையைச் சொல்லி முடிக்கும் போக்கு இன்றைய நவீன கவிஞர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவரிடம் காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கடைசி இரண்டு வரியில்தான் கவிதை இருக்கிறது. முன்னால் இருப்பதெல்லாம் அந்த இரண்டு வரிக் கவிதையை கண்டுபிடிப்பதற்கு அவர்கள் செய்யும் முயற்சிகளேயன்றி வேறல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்பதெல்லாம் அளவுகோல்களாகலாம். ஆனால் அளவுகோல்கள் ஒருநாளும் எழுதுகோல்களாக மாற முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலக் கவிதை 'பம்மாத்துப்' பண்ணாது. ஒப்பனைகளோடு ஊர் சுற்றாது. மினுக்கிக்கொண்டு மேடை ஏறாது. நெடுநெல்வாடை போல் நீளமாய் நடக்காது. குறுந்தொகையைப் போல சுருக்கமாய் இருக்கும். குறளைப் போல இறுக்கமாய் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலக் கவிதை கூர்மையாகவும் இருக்கும். நேர்மையாகவும் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளிகளிடம் கவிதை இருக்கும்! விமர்சகர்களிடம் அதன் விலாசம் இருக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கூடுதலாகச் சில பல முகங்கள் - ஈரோடு தமிழன்பன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றை உடையது தமிழ்க் கவிதை. காலந்தோறும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல், சமூகம், பொருளியல், மெய்யியல், கல்வி ஆகியன மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. மாறுவதொன்றே மாறாதது என்னும் இயங்கியல் கோட்பாடு, வரலாற்றைப் பல்வேறு வகைகளிலும் மாற்றி அமைத்துக் கொண்டே வருகிறது. தமிழ்க் கவிதையும் உயிரோட்டமுடைய ஒரு மொழியில் ஓர் உன்னதமான அங்கமாக இருந்து தன்னையும் மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இம் மாறுதல்களின் வளர்ச்சி நிலைகளான ஹைக்கூ, புதுக்கவிதை ஆகியன இன்று பல்கலைக்கழகங்களால், பத்திரிகைகளால், பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;புதுக்கவிதை வரலாறு, புதுக்கவிதைத் திறனாய்வு, புதுக்கவிதைக் கோட்பாடு ஆகியன இனியும் புதுக்கவிதை வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விக்கு இடமில்லாதபடிச் செய்துவிட்டன. இனிவரும் நூற்றாண்டில் இருபதின் விகுதிகளில் முத்திரை பதித்துவிட்ட கவிதைப் போக்குகள் தொடர்ந்து சாதனை எல்லைகளைத் தொடும் என நம்புகிறேன். மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையதாய், அவர்களின் வாழ்க்கை, முரண்பாடுகள், போராட்டங்கள் ஆகியவற்றில் பங்கு கொள்வதாய், அவர்கள் தம் கவிதைகள் என்று ஏற்றுத் தழுவத்தக்கதாய், இயற்றி மகிழத்தக்கதாய் கவிதை வளரும். &lt;br /&gt;&lt;br /&gt;நடுத்தர வர்க்கத்துப் படிப்பாளிகளின் படைப்பு முயற்சி என்னும் தளத்தை விட்டு அகன்று கடைநிலை மனிதரின் குரலாகவும் கவிதை ஒலிக்கும் காலம் இனிவரும் நூற்றாண்டில் சாத்தியமாகலாம். அதேசமயத்தில் தமிழர்களின் மொழி ஆளுமையும் மொழிப்பற்றும் அக்கவிதை ஆக்கங்களைத் தரமுடையனவாக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன். ஒரேபோக்கிலான கவிதை, ஒரே தரத்திலான கவிதை என்பது எக்காலத்திலும் ஏற்புடையதன்று. கவிதைக்குப் பல முகங்கள் உண்டு. இப்போதிருக்கும் முகங்களோடு இன்னும் கூடுதலாகச் சில பல முகங்களை வரும் நூற்றாண்டில் கவிதை காட்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி :&lt;a href="http://www.ambalam.com/idhal/poem/2000/january/poem16_02.html"&gt; அம்பலம் &lt;/a&gt; மின்னிதழ் / 16-1-2000)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-112402861399947941?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/112402861399947941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=112402861399947941' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112402861399947941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112402861399947941'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2005/08/blog-post_14.html' title='இந்த நூற்றாண்டில் கவிதை...'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-112399828401078580</id><published>2005-08-14T11:08:00.000+05:30</published><updated>2005-08-14T20:50:41.806+05:30</updated><title type='text'>கவனகக் கலை : ஒரு புதிய வெளிச்சம்</title><content type='html'>&lt;em&gt;ஒரே நேரத்தில் பல செயல்களில் கவனம் செலுத்தும் கலைக்கு கவனகக் கலை என்று பெயர். சதுராவதானம் எனப்பெறும் 4 செயல்களில் கவனம் செலுத்துவதில் தொடங்கி சகஸ்ராவதானம் எனப்பெறும் 1000 செயல்களில் கவனம் செலுத்துவது வரைகூடச் செல்வதாகக் கேள்வி. &lt;br /&gt;&lt;br /&gt;இக்கலையைப் பயின்று தன் 13-ம் வயதில் 8 அவதானம் செய்த ஒருவர் இன்று தன் 16-ம் வயதில் 20 அவதானம் செய்து வருகிறார். இதுவரை ஐம்பதிற்கும் மேலான கவனக நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பவரும் சமீபத்தில் தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று கவனக நிகழ்ச்சிகளை நடத்தித் திரும்பியவருமான கலை. செழியன் அவர்களைச் சந்தித்தோம்.&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; இப்பொழுது என்னென்ன கவனகங்கள் செய்து வருகிறீர்கள்?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எண் கவனகம், எழுத்து கவனகம், வண்ண கவனகம், பெயர் கவனகம், கூட்டல் கவனகம், கழித்தல் கவனகம், பெருக்கல் கவனகம், தொடுதல் கவனகம், மணியடித்தல் கவனகம், ஈற்றடிக்கு வெண்பா எழுதுதல், சிலேடை வெண்பா எழுதுதல், கட்டளைக் கலித்துறை எழுதுதல், சூழ்நிலைக்கேற்ப இசைப்பாடல் எழுதுதல், மாயக் கட்டம், பிறந்த நாளுக்குக் கிழமை கூறல், கனமூலம் கூறல், இருமடி கூறல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், நாலடியார், திருக்குறள் போன்ற கவனகங்களைச் செய்து வருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்கள் புதிதாக அறிமுகம் செய்த கவனகங்கள் எவை? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கழித்தல் கவனகம், கனமூலம் கூறுதல், இருமடி கூறுதல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், சூழ்நிலைக்குப் பாடல் எழுதுதல் போன்றவற்றை நான் புதிதாகச் செய்து வருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கணித அடிப்படையிலான கவனகங்களுக்குச் சூத்திரங்களை யாரிடமிருந்து கற்றீர்கள்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அண்ணன் திரு.சோழனிடமிருந்துதான் அவற்றைக் கற்றேன். பயிற்சியையும் அவரே அளித்தார். அவர் தற்போது இளங்கலை (சட்டம்) பயின்று வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அந்தச் சூத்திரங்களை ரகசியமாக மூடி வைப்பீர்களா?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உலகம் அறியும் அளவுக்கு நான் வளர்ந்த பிறகு அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லி தருவேன். அப்போதுதான் அவை அங்கீகரிக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதினெட்டு கவனகர் கனகசுப்புரத்தினம் அவர்களுக்கு நீங்கள் போட்டியா?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக இல்லை. அவர்தான் என்னுடைய மானசீக ஆசான். தமிழ்ச் சான்றோர் பேரவையில் அவருடைய நிகழ்ச்சியைப் பார்த்த பிறகுதான் எனக்கு இத்துறையிலேயே ஆர்வம் பிறந்தது. மாலை, அவர் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து இரவே 8 கவனகங்களைச் செய்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்போதும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பீர்களா? நிகழ்ச்சியின்போது மட்டும்தானா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இதுவரை நிகழ்ச்சிகளின்போது மட்டும்தான் நினைவில் வைத்துத் திருப்பிச் சொல்கிறேன். இந்தக் கேள்விக்குப் பிறகு இனி எல்லாவற்றையும் நினைவில் இருத்த முயற்சி செய்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எத்தனை கவனகர்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள்?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பூவை கல்யாண சுந்தர முதலியார் தொடங்கி கனக சுப்புரத்தினம் வரை 40 கவனகர்களை எனக்குத் தெரியும். இவர்களுடைய பெயர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். பெரும்பாலோரின் வாழ்க்கை வரலாறு கிடைக்கவில்லை. அவை கிடைக்குமானால் என் நிகழ்ச்சிகளில் அவர்களை மகிழ்ச்சியோடு நினைவுகூர்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெண்பா எழுதினால் கவிதை எழுதுவதாகப் பொருளா?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வெண்பா என்பது ஒரு வடிவம்தான். அதிலே வார்த்தைகளை நிரப்பவும் முடியும். கவிதைகளை வடிக்கவும் முடியும். நான் வெண்பா எழுதுகிறேன். அது கவிதையா என்பதைப் பார்வையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வயது உங்களுக்குச் சலுகைகளைப் பெற்றுத் தருகிறதா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயது சில இடங்களில் சலுகைகளைப் பெற்று தருவது உண்மைதான். ஆனால் அதுவே சில இடங்களில் எதிர்மறையாகி விடுவதும் உண்டு. 'அடேங்கப்பா! இந்த வயதில் இவ்வளவு செய்கிறானா?' என்று கேட்டவர்களும் உண்டு. 'அனுபவம் இல்லாதவன்; என்ன செய்துவிடப் போகிறான்?' என்று கேட்டவர்களும் உண்டு. எனவே வயது சாதகமாகவும் இருக்கிறது; பாதகமாகவும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மந்த மாணவர்களோடு உங்களை ஒப்பிடுவீர்களா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை மந்த மாணவர்கள் என்று யாருமே இல்லை. சூழ்நிலை காரணமாகத் தங்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள்தான் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திறமையைப் பயன்படுத்தாதவர்களோடு உங்களை ஒப்பிட்டுக் கொள்வதுண்டா?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;என் வகுப்பிலேயே படித்துக் கொண்டு விளையாடப் போகாதவர்கள் உண்டு. விளையாடச் சென்று படிக்காதவர்கள் உண்டு. இரண்டும் செய்பவர்களும் உண்டு. நாம் எதிர்பார்க்கும் செயலில் திறமை காட்டாதவர்கள் எதிர்பாராத செயலில் திறமை காட்டலாம். எனவே அனைவரிடமும் திறமை உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;நான் எப்போதுமே என்னைவிடத் திறமைசாலிகளோடேதான் என்னை ஒப்பிடுவேன். அப்போதுதான் நான் மேலும் திறமைசாலி ஆக முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புகழ்ச்சிகளைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக; தாம்தம் &lt;br /&gt;மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்ற குறள்படி &lt;br /&gt;அதிக மகிழ்ச்சியினால் தன் கடமைகளை மறந்து கெட்டவர்களை நினைத்து நான் எச்சரிக்கையோடே இருப்பேன். புகழ்பவர்கள் அதிகமாகப் புகழ்கிறார்களா, ஒரு சார்பாய்ப் புகழ்கிறார்களா என்று ஆராய்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வேன். அதற்குத் தகுதியானவன்தானா என்றும் சரிபார்த்துக் கொள்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவராக நினைக்கிறீர்களா? உங்களுக்கு எப்படிப்பட்ட கனவுகள் வரும்?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நான் பெரிய கவனகர், வெளிநாட்டுக்குப் போய் வந்தவன் என்றெல்லாம் ஆணவத்தோடு வித்தியாசமாக நினைக்கவில்லை. ஆனால் என் பள்ளிக்கு வந்து 'செழியன்' என்று கேட்டால் என்னைத் தெரிய வேண்டும். 'தனித்திரு' என்று சொல்கிறார்களே அதைப்போன்று வித்தியாசமானவனாக இருக்க நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;என் சொப்பனங்கள் சொற்களுக்குள் வரமாட்டேன் என்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. சில நேரங்களில் பெரியவர்களே வியக்கும்படி இருக்கிறேன். பல நேரங்களில் குழந்தையாகவே இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவனகக் கலையை எப்படி கற்கலாம்? எப்படி வளர்க்கலாம்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலை, மாலைகளில் யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றைச் செய்தால் மனம் ஒருமுகப்படும். மனம் ஒருமுகப்படுமானால் கவனகக் கலையை எளிதில் கற்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;என் பல நிகழ்ச்சிகளில் மாணவர்களிடமும் மக்களிடமும் நான் ஆர்வத்தைத் தூண்டி வருகிறேன். திருக்குறளை முதலில் முழுவதும் மனப்பாடம் செய்து எனக்குத் தெரிவித்தால் நான் பரிசு அனுப்புவேன் என்று இலங்கையில் பல பள்ளிகளில் அறிவித்தேன். இப்படியாக இக்கலையை வளர்க்க நான் ஊக்கமளித்து வருகிறேன். இக்கலையை வளர்க்க நிறுவனம் ஒன்று தொடங்க வேண்டும். பாடத்திட்டத்தில்கூட இதைச் சேர்க்கலாம். அதற்கு அரசின் பங்கு முக்கியமானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்கள் பெற்ற விருதுகள்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலம் 'கவனகச் செம்மல்', 'கவனகப் பழம்', 'கவனகச் சுடர்', 'கவிக்குயிலன்', 'திருக்குறள் கவனகச் செம்மல்', 'கவனக இளவரசு', 'கவனகத் தென்றல்', 'கவனகச் செல்வர்', 'சிங்கக் குருளை' போன்ற விருதுகளைப் பெற்றுள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;'கவிதைக் கழனி' என்ற அமைப்பின் மூலம் 1996-ம் ஆண்டின் சிறந்த கவிஞர் என்ற பட்டமும் கிடைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'கார்கிலில் இந்தியக் கை' என்ற ஈற்றடிக்கு ஒரு வெண்பா சொல்லுங்கள்?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;'தீரமுடன் போராடி தீயவரைப் போக்கிவிட்டு &lt;br /&gt;பாரதமாம் தாய்நாட்டின் பற்றுதனைப்-பாரனைத்தும் &lt;br /&gt;பார்த்திடநம் வீரர் பறைசாற்ற ஓங்கியது &lt;br /&gt;கார்கிலில் இந்தியக் கை'. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் நிரந்தரமான இலக்கு எது? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக முன்னேற்றம், சமாதானம் என்ற நிரந்தர இறுதி இலக்குகளை நோக்கி நான் பயணம் செய்கிறேன். அதற்குமுன் 100 கவனகம் செய்தல், நோபல் பரிசு பெறுதல் போன்ற படிக்கட்டுகளைக் கடந்து என் சிகரத்தை நான் அடைவேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி :&lt;a href="http://www.ambalam.com/idhal/kalai/1999/july/kalai25_02.html"&gt; அம்பலம் &lt;/a&gt; மின்னிதழ் / 25-7-1999)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14977072-112399828401078580?l=annakannan-interviews.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-interviews.blogspot.com/feeds/112399828401078580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14977072&amp;postID=112399828401078580' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112399828401078580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14977072/posts/default/112399828401078580'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-interviews.blogspot.com/2005/08/blog-post_112399828401078580.html' title='கவனகக் கலை : ஒரு புதிய வெளிச்சம்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14977072.post-112399733604818114</id><published>2005-08-14T10:45:00.000+05:30</published><updated>2005-08-14T20:52:47.746+05:30</updated><title type='text'>புதிய திசையை நோக்கி...... மறவன்புலவு க.சச்சிதானந்தன்</title><content type='html'>&lt;em&gt;சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற காந்தளகம், தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன. இதன் உரிமையாளர் ஐக்கிய நாடுகள் அவையின் உணவு - வேளாண் நிறுவனத்தின் ஆலோசகராகப் பணியாற்றியவர். தமிழ்நூல்களை முதன் முதலாக இணையத்தில் தொகுத்து மின் வணிகம் மூலம் அவற்றை விற்று, தமிழ் விற்பனை உலகில் ஒரு புதிய வாசலைத் திறந்திருக்கிறவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன். அவருடன் ஒரு சந்திப்பு. &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வணிகத் துறையில் பத்திரிகை நடத்துவதும் புத்தகம் போடுவதும் தற்கொலைக்கு ஒப்பானது என்ற கூற்றில் உண்மை இருக்கிறதா?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. கோழைகள்தான் அப்படிச் சொல்வார்கள். எந்தத் துறையிலும் வணிகம் கோலோச்சுகிறது. அதன் நுட்பங்களை அறிந்து மிகையாகக் கொள்ளாமலும் குறைவாகக் கொடுக்காமலும் இயக்கினால் இவ்விரு துறைகளும் நியாயமான தேட்டத்தைத் தருகின்ற துறைகளே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்ற உங்களுக்கு இத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விலங்கியல் துறைக்கு வருவதற்கு முன்பே நான் புத்தகத் துறையில் இருந்தேன். என் தந்தையார் உருவாக்கிய புத்தகத் தயாரிப்பு, விற்பனை நிறுவனத்தில் பணியாற்றியபொழுது ஏற்பட்ட ஆர்வமே என்னைப் புத்தகத் துறையில் ஈடுபடுத்தியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காந்தளகத்தின் தயாரிப்பில் குறிப்பிடத்தக்கவை? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரின் சங்கத் தமிழ், பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தாரின் சித்திர பெரிய புராணம், கொழும்பு சிந்துபட்டிக் கோவிலாரின் முருகன் பாடல்கள், யாழ்ப்பாணம் சிவதொண்டர் நிலையத்தாரின் நற்சிந்தனை, கோவை கம்பன் கழகத்தாரின் ராமாயணம், தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள், இலங்கைப் பள்ளி மாணவர்களுக்கான நிலவரை, தருமை ஆதினத்தாரின் பன்னிரு திருமுறை ஆகியவை எமது தயாரிப்புத் தராதரத்தின் கலங்கரை விளக்கங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உங்கள் சந்தைக் கண்காணிப்பில் எந்தப் புத்தகங்கள் அதிகம் விற்கின்றன? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் வெளிவரும் நூல்களுள் சமயம், சோதிடம், மருத்துவம், சமையல், நாவல், சிறுகதை, தன்னம்பிக்கை நூல்கள் அதிகம் விற்கின்றன. அந்த வரிசையில் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அபரிமிதமாக விற்பனை ஆகிய இலக்கிய ஆய்வு, இலக்கிய விரிவுரை தொடர்பான நூல்களின் விற்பனை இப்போது மிகவும் குறைவு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மக்களிடையே படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறதா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. தமிழ் மக்களிடையே வாசகர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நூற்றாண்டில் செங்குத்தாக வளர்ந்தது. அந்தப் பசிக்குத் தீனி போட்டவர்கள் வார இதழ், மாத இதழ் வெளியீட்டாளர்களே. பதிப்பாளர்கள் அல்லர். பதிப்பாளர் உலகம் அந்தச் சவாலைச் சந்திக்கத் தவறி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதிப்பாளர்களின் போக்கு எப்படி இருக்கிறது? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் வளர்ந்த பல மொழிகளுக்கும் அகராதி இருக்கிறது. இன்னும் தமிழுக்கு அகராதி இல்லை. இதன்மூலம் பதிப்பாளர்கள் விற்பனை நோக்கிலேயே இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அகராதிக்கு நீங்கள் ஏன் முயற்சி செய்யவில்லை?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அகராதிப் பணிக்கு வல்லுனர்களின் தொகுப்பு தேவை. அந்தத் தொகுப்புக்கு ஊட்டமளிக்க நிதி ஆதாரங்க
